இரு மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர், தங்குதடையற்ற, நம்பகமான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இரண்டு மின் உற்பத்தை நிலையங்களை அமைக்கிறது.

2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அவை இரண்டும் 100 மெகாவாட் மினசாரத்தை உற்பத்தி செய்யும் என்று எரிசக்தி சந்தை ஆணையம் திங்கட்கிழமை அன்று ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மின் உற்பத்தி நிலையத்தைக் கட்டி, சொந்தமாக நடத்தும் உரிமையை பசிபிக்லைட் பவர் என்ற நிறுவனத்துக்கு ஆணையம் வழங்கியுள்ளது.

கடந்த 2023 டிசம்பரில் எரிசக்தி சந்தை ஆணையத்தின் சார்பில் எரிசக்தி சந்தை நிறுவனம் மின்சக்தி உற்பத்திக்கான உத்தேச திட்டங்களை சமர்பிக்குமாறு கேட்டுக் கொண்டது.

எதிர்பாராத நேரத்தில் மின்விநியோகம் பாதிக்கப்படும்போது தங்குதடையற்ற மின்சாரம் விநியோகம் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

புதிய மின்சார உற்பத்தி நிலையங்கள், 18 நிமிடங்களில் முழு அளவில் மின் உற்பத்தியை செய்யக்கூடியவை என்று பசிபிக்லைட் பவர் தலைமை நிர்வாக அதிகாரி யு டாட் மிங் தெரிவித்தார்.

மின்சாரத் தேவைக்கும் மின் விநியோகத்திற்கும் இடையே தொடர்ந்து நிலையான மின்சாரம் இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியம் என்றார் அவர்.

எரிசக்தி சந்தை ஆணையத்தின் தலைமை நிர்வாகியான நீயாம் ஷி சுன், சிங்கப்பூரின் பசுமை எரிசக்தியில் உடனடியாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரு நிலையங்களும் முக்கிய பங்காற்றும் என்று அறிக்கையில் ஒன்றில் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!