திறன் மேம்பாட்டிற்கு உதவவே ஆதரவுத் திட்டங்கள்: துணைப் பிரதமர் ஹெங்

வரவுசெலவுத் திட்டம் 2024ல் இடம்பெற்றுள்ள ஆதரவுத் திட்டங்கள், சிங்கப்பூரர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் நோக்கிலேயே அறிவிக்கப்பட்டுள்ளன என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரர்கள் அரசாங்கத்தைச் சார்ந்திருப்பதை அதிகப்[Ϟ]படுத்த வேண்டும் என்ற நோக்கில் அத்திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்று திரு ஹெங் தெளிவுபடுத்தினார்.

“பெரும்பாலான ஆதரவுத் திட்டங்கள், சிங்கப்பூரர்கள் தங்களின் தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கின்றன. ஒருவருக்கு ஒரு மீனைக் கொடுத்தால், அது அவருக்கு ஒரு நாளுக்குத்தான் போதுமானது. மாறாக, ஒருவருக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால், அது என்றென்றும் கைகொடுக்கும்,” என்று மாண்டரின் மொழியில் அவர் சொன்னார்.

‘மாறிவரும் உலகில் தாக்குப்பிடித்தலும் சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களும்’ என்ற தலைப்பில் தியோச்சூ கூட்டமைப்பு திங்கட்கிழமையன்று (மார்ச் 11) ஒரு கலந்துரையாடலை நடத்தியது.

அதில் பங்கேற்ற துணைப் பிரதமர், தம்மிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

நியூட்டன், கெங் லீ சாலையிலுள்ள சுவி ஹுவே லிம் மன்றத்தில் நடந்த அந்நிகழ்வில், தொழில், சமூகத் தலைவர்கள் உட்பட கிட்டத்தட்ட 160 பேர் கலந்துகொண்டனர்.

அமெரிக்கா போன்ற நாடு[Ϟ]களில் ‘உலகளாவிய அடிப்படை வருமானம்’ என்ற திட்டம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்று பொருளியல் கொள்கை[Ϟ]களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் குறிப்பிட்டார்.

பொருளியலின் குறிப்பிட்ட துறைகளில் ஊழியர்களுக்கு மாற்றாக தானியக்கமயம் அதிகரித்துவரும் நிலையில், குடிமக்கள் அனைவரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட அளவு பணம் பெறு[Ϟ]வதையே ‘உலகளாவிய அடிப்படை வருமான’ திட்டம் குறிக்கிறது.

ஆயினும், சிங்கப்பூரில் ஊழியரணி செயற்கை நுண்ணறிவுத் திறன்களைப் பெறும் வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

சிங்கப்பூர் சிறிய நாடு என்றபோதும் துடிப்பான பொருளியலைக் கொண்ட நாடு என்றும் கொவிட்-19 தொற்றுப் பரவலில் இருந்து வேகமாக மீட்சி கண்ட நாடுகளில் ஒன்று என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார்.

நீண்டகால நோக்குடன் தொழில் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், “எந்த நாட்டின் பொருளியலும் சீராக வளர்ச்சி காண்பதில்லை. வளர வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பதே முக்கியம்,” என்றும் சொன்னார்.

இவ்வாண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படுமா என்று திரு ஹெங்கிடம் கேட்டபோது, அவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் ஓர் அதிகாரபூர்வமற்ற கருத்தாய்வை நடத்தினார்.

இவ்வாண்டு தேர்தல் நடத்தப்படும் என்று நினைப்பவர்கள் கையை உயர்த்தும்படி அவர் கேட்டுக்கொள்ள, பெரும்பாலோர் கையை உயர்த்தினர்.

இவ்வாண்டு அல்லது அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் திரு ஹெங் சொன்னார்.

மீண்டும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, கட்சி[Ϟ]தான் அதை முடிவுசெய்யும் என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!