மூதாட்டிகளை மானபங்கம் செய்த இளைஞன் மீது குற்றச்சாட்டு

ஒரே நாளில் இரண்டு மூதாட்டிகள் உட்பட மூன்று பெண்களை மானபங்கம் செய்ததாக செவ்வாய்க்கிழமை அன்று 17 வயது கமல்ஹான் கவ்னோ சுப்ரமணியம் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.


மலேசியாவைச் சேர்ந்த கமல்ஹான் மீது மானபங்கம் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இம்மாதம் 16ஆம் தேதியன்று வாம்போ வட்டார புளோக் ஒன்றின் எட்டாவது மாடியில் இருந்த 79 வயது மூதாட்டியை கமல்ஹான் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. சற்று நேரம் கழித்து பெண்டர்மியர் வட்டார புளோக் ஒன்றின் மின்தூக்கிக்குள் சென்ற கமல்ஹான், அங்கு 49 வயது மாது ஒருவரை மானபங்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.


அதன் பின்னர் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, அதே வட்டாரத்தில் உள்ள இன்னொரு புளோக்கின் ஏழாவது மாடி மின்தூக்கி இடமருகே கமல்ஹான் ஓர் 73 வயது மூதாட்டியை மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது.
கமல்ஹானின் வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஏழாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


குற்றம் நிரூபிக்கப்பட்டால் கமல்ஹான் மீது சுமத்தப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஈராண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!