சிங்கப்பூரில் சனிக்கிழமை (மே 13) வெப்பநிலை 37 டிகிரி செல்சியசைத் தொட்டது.
அங் மோ கியோ வட்டாரத்தில் அந்த வெப்பநிலை பதிவானது.
அதன்மூலம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரில் பதிவான ஆக அதிக வெப்பநிலை இப்போது மீண்டும் பதிவாகியுள்ளதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளது.
37 டிகிரி செல்சியஸ் என்று 1983ஆம் ஆண்டு பதிவானதே சிங்கப்பூர் வரலாற்றில் உச்ச வெப்பம். அந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தெங்கா வட்டாரத்தில் அந்த அதிக வெப்பநிலை பதிவானது.
சனிக்கிழமை சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் வெப்பநிலை 36 டிகிரிக்கு மேல் இருந்தது.
சிங்கப்பூரில் 1929ஆம் ஆண்டு முதல் வெப்பநிலை கணக்கிடப்பட்டு வருகிறது.