சிங்கப்பூரில் தற்போது மூன்றில் இரு கட்டடங்கள் பசுமை அம்சங்களைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் கட்டடத் துறை, சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030ன் இலக்குகளை அடையும் பாதையில் இருக்கிறது.
2030ஆம் ஆண்டுக்குள் 80 விழுக்காட்டுக்குக் கட்டடங்கள், கட்டட, கட்டுமான ஆணையம் வழங்கும் பசுமை முத்திரையைப் பெற்றிருக்கவேண்டும் அல்லது சுற்றுச்சூழலுக்கான நீடித்த நிலைத்தன்மை விதிமுறைகளைப் பூர்த்திசெய்யவேண்டும் என்பது இலக்காகும். வீடமைப்பு, வர்த்தகக் கட்டடங்களுக்கு பசுமை முத்திரை வழங்கப்படுகிறது.

