விரைவுச்சாலையில் விபத்து: பெண் மரணம்

தெம்பனிஸ் விரைவுச்சாலையில் (டிபிஇ) இன்று (பிப்ரவரி 20) காலை நடந்த விபத்தில் 26 வயது பெண் ஒருவர் மாண்டார். விபத்தின் தொடர்பில் 54 வயதான ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் இன்று காலை 8 மணியளவில் விபத்து நேர்ந்ததாக காவல்துறை தெரிவித்தது. இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்கும் சிறிய ரக பேருந்து ஒன்றுக்கும் இடையே விபத்து ஏற்பட்டது. 

29 வயதான மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவருடன் பயணம் செய்த பெண் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவர் பின்னர் மருத்துவமனையில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 54 வயதான பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான மற்றொரு மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!