தான் பொருத்திய படக்கருவியே காட்டிக்கொடுத்தது

சிங்கப்பூரில் மினிமார்ட் எனப்படும் சிறு கடைகளை நடத்தி வரும் முதலாளி ஒருவர் தமது 10 கடைகளிலும் திருட்டைத் தடுக்க கண்காணிப்புப் படக்கருவிகளைப் பொருத்தியுள்ளார்.

கேமராக்களில் கடை ஊழியர்கள் இருவரும் பணப்பெட்டியில் ரொக்கத்தை எடுக்கும் காட்சிகள் பதிவாகியதால் அவர்கள்மீது காவல்துறையில் புகார் கொடுத்தார் அக்கடைகளின் முதலாளியான திரு டேனியல் டான். 

இரண்டு ஊழியர்களும் வாடிக்கையாளர்களிடம் பணம் பெறும்போது அதைப் பணப்பெட்டியில் வைக்கத்தவறியதும், போலியான ரசீதுகள் கொடுத்துள்ளதும் கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவாகியிருந்தன.

குற்றம் செய்த இருவரும் பெண்கள். 

தவறிழைத்த இரண்டு ஊழியர்களில் ஒருவர் தமது கடைகளில் கண்காணிப்புப் படக்கருவி பொருத்த உதவியவர் என்றும் அவர் திருட்டுச் சம்பவங்களைப் பிடிக்க உதவியவர் என்றும் திரு டான் கூறினார்.

அப்பெண் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகத் தம்மிடம் வேலை செய்து வந்ததாகவும் அவர் செய்த தவறு வேதனை தருவதாகவும் டான் கூறினார். 

இன்னொருவர் வேலையில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதமே ஆனதாக அவர் தெரிவித்தார். 

காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!