சிங்கப்பூரில் மினிமார்ட் எனப்படும் சிறு கடைகளை நடத்தி வரும் முதலாளி ஒருவர் தமது 10 கடைகளிலும் திருட்டைத் தடுக்க கண்காணிப்புப் படக்கருவிகளைப் பொருத்தியுள்ளார்.
கேமராக்களில் கடை ஊழியர்கள் இருவரும் பணப்பெட்டியில் ரொக்கத்தை எடுக்கும் காட்சிகள் பதிவாகியதால் அவர்கள்மீது காவல்துறையில் புகார் கொடுத்தார் அக்கடைகளின் முதலாளியான திரு டேனியல் டான்.
இரண்டு ஊழியர்களும் வாடிக்கையாளர்களிடம் பணம் பெறும்போது அதைப் பணப்பெட்டியில் வைக்கத்தவறியதும், போலியான ரசீதுகள் கொடுத்துள்ளதும் கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவாகியிருந்தன.
குற்றம் செய்த இருவரும் பெண்கள்.
தவறிழைத்த இரண்டு ஊழியர்களில் ஒருவர் தமது கடைகளில் கண்காணிப்புப் படக்கருவி பொருத்த உதவியவர் என்றும் அவர் திருட்டுச் சம்பவங்களைப் பிடிக்க உதவியவர் என்றும் திரு டான் கூறினார்.
அப்பெண் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகத் தம்மிடம் வேலை செய்து வந்ததாகவும் அவர் செய்த தவறு வேதனை தருவதாகவும் டான் கூறினார்.
இன்னொருவர் வேலையில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதமே ஆனதாக அவர் தெரிவித்தார்.
காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.