சிங்க‌ப்பூர்

மனிதவள அமைச்சின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி ஆல்வின் கோ எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூர் போட்டித்தன்மை, வாடிக்கையாளர் ஆணையத்தின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
சிங்கப்பூரில் மே 1ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படும் வாகனங்களில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண (இஆர்பி) சாதனம் பொருத்தப்பட்டு இருக்கும்.
லிட்டில் இந்தியாவில் மதுக்கூடம் நடத்தி வந்த ராஜ்குமார் பாலா என்னும்  41 வயது ஆடவர் 17 வயதுப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிக்கும் 950,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்க் குடும்பங்கள் ஏப்ரல் மாதம் பொருள், சேவை வரி யு-சேவ் பற்றுச்சீட்டு, சேவை பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளைப் பெறுவார்கள் என்று நிதி அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது.
துவாஸ் வட்டாரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி மாண்டார்.