சிங்­கப்­பூ­ரின் பாம்­பாட்டி யூசுஃப் காசிம்

சிங்­கப்­பூ­ரின் பாம்­பாட்டி யூசுஃப் காசிம்

2 mins read

சாதா­ர­ண­மா­ன­தொரு மூன்­றரை வீவக வீட்­டில் திரு யூசுஃப் காசிம் (படம்) குடும்­பத்­து­டன் கூடை­களில் உள்ள இரு மலைப்­பாம்­பு­களும் வசிக்­கின்­றன. 'சார்லி', 'மிஸ்­டர் பீன்' என்று திரு யூசு­ஃபால் அழைக்­கப்­படும் இவ்விரு­ பாம்­பு­களும், அவ­ரு­டன் ஏறக்­கு­றைய இரு­பது ஆண்டு­களாகப் பய­ணித்­துள்­ளன. சிங்­கப்­பூ­ரின் கடைசிப் பாம்­பாட்­டி­யாக திகழும் திரு யூசுஃப், தம் வாழ்­நாளை இத்­தொ­ழி­லுக்­காக அர்ப்­ப­ணித்­துள்­ளார்.

சமூக நிகழ்­வு­க­ளின் கேளிக்கை அங்­கங்­க­ளி­லும் செந்­தோசா பகு­தி­யி­லும் யூசு­ஃபை­யும் அவ­ரது பாம்­பு­களை­யும் வழக்­க­மாக காண­லாம். கடந்த இரு­பது ஆண்டுக­ளாய் செந்­தோ­சா­வில் முழு­நே­ர­மாகப் பணி­யாற்றி வரு­கி­றார் அவர்.

கொள்­ளுத் தாத்­தா­வின் காலத்­தி­லி­ருந்தே தம் குடும்­பத்­தி­னர் பாம்­பாட்டித் தொழி­லில் ஈடு­பட்­டுள்­ள­தாக பகிர்ந்து­கொண்­டார் திரு யூசுஃப். பிரிட்­டிஷ் காலத்­தில் அவ­ரின் தாத்­தா­வும் 1950களில் அவ­ரின் தந்­தை­யும் இத்­தொ­ழி­லைச் செய்து­வந்­த­னர். 1970களில், ஐந்து வய­தி­லி­ருந்து தந்தை திரு காசி­முக்­குத் துணை­யாக பாம்­பாட்­டும் நிகழ்ச்­சி­க­ளுக்­குச் சென்று வந்­தார் யூசுஃப்.

ராஜ நாகம் முத­லிய ஆபத்­தான பாம்­பு­க­ளு­டனே வளர்ந்த யூசுஃப், அப்­பா­வின் திடீர் மறை­வுக்­குப் பின்­னர் பதி­னைந்து வய­தில் குடும்­பத் தொழி­லில் முறை­யா­கக் காலெ­டுத்து வைத்­தார். பிழைப்­புக்­காக இத்­தொ­ழி­லுக்கு வந்­தி­ருந்­தா­லும் தமக்­கென ஒரு தனி அடை­யா­ளத்தை உரு­வாக்­கிக்­கொள்ள அவர் உழைத்­தார். தாத்­தா­வின் தம்பி, மாமா என தம் குடும்­பத்­தில் பாம்­பாட்­டி­க­ளாக இருந்­தோ­ரி­ட­மி­ருந்து உடுக்கை, புல்­லாங்­கு­ழல், மகுடி ஆகி­ய­வற்றை வாசிக்­கக் கற்­றுக்­கொண்­டார். நஞ்­சு­டைய, நஞ்­சில்­லாத பாம்­பு­களைக் கையா­ளும் முறை­யா­னது அவ­ரது பதின்ம வய­துக்­குள் கைவந்த கலை­யாகி­விட்­டது.

அவ­ரு­டைய அப்பா காலத்­தில், பாம்­பு­க­ளைக் கையைக் கடிக்­க­விட்டு, தைலத்­தைத் தடவி, பின் தைலத்தை மக்­க­ளி­டம் விற்­கும் வழக்­கம் இருந்­தது. அவ்­விற்­ப­னை­கள் அவர்­க­ளது வரு­மா­ன­மா­க­வும் இருந்­தது. காலப்­போக்­கில், அத்­த­கைய தொழில்­முறை சாத்­தி­யப்­ப­டாது என்­பதை யூசுஃப் உணர்ந்­தார்.

"மக்­க­ளின் விருப்­பத்­திற்கு ஏற்­ற­வாறு மாய­வித்­தை­கள் காட்­டு­வது, நகைச்­சு­வை­யு­டன் படைப்­பது, பாம்­பு­டன் புகைப்­ப­டம் எடுத்­துக்­கொள்ள மக்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிப்­பது போன்­ற­வற்­றைச் செய்து நிகழ்ச்­சி­க­ளைப் படைக்­கத் தொடங்­கி­னேன்," என்­றார் 60 வயது யூசுஃப்.

தொடர்ந்து விடாப்­பி­டி­யாக பாம்­பாட்­டித் தொழி­லில் உள்ள திரு யூசுஃபை, அவ­ரின் பிள்­ளை­கள் கண்­டிப்­ப­துண்டு. உடலை, மனதை வருத்­திக்­கொண்டு யூசுஃப் வேலைக்­குச் செல்­லும்­போது கவலை தெரி­விக்­கும் பிள்­ளை­கள், தனது தொழி­லைப் புரிந்து­கொண்­டது ஒரு வரம் என அவர் கூறி­னார்.

பாம்­பாட்­டித் தொழில் என்பதை ஒரு கலை­யா­கக் கரு­தா­மல் இழி­வா­க­வும், தீங்­கா­க­வும் பார்க்­கும் ஏரா­ள­மா­னோரை யூசுஃப் கடந்து வந்­துள்­ளார்.

முற்­கா­லத்­தில் பாம்­பாட்­டி­களுக்­குக் கிடைத்த மரி­யா­தை­யும் வர­வேற்­பும் தற்­போது குறைந்­துள்­ள­தில் வருத்­தம் கொள்­கி­றார் அவர். இக்­கலைக்கு வருங்­கா­லமே இல்லை என்­ப­தை­யும் கூறி நெகிழ்ந்­தார்.

"என்னை நம்பி என் மனை­வி­யும் பிள்­ளை­களும் இருக்­கி­றார்­களா என்­றால், இல்லை. இந்த கடைசிப் பாம்­பாட்­டியை நம்பி சிங்­கப்­பூர் மக்­கள் அனை­வ­ரும் உள்­ள­னர் என சொல்­லிக்­கொள்­வ­தில் பெரு­மைப்­ப­டு­கி­றேன். ஆனால், இந்த கலை­யைக் கற்­றுக்­கொள்ள யாரே­னும் முன்­வரு­வார்­களா என்­ப­தில் எனக்கு நம்­பிக்கை இல்லை," என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரைத் தவிர்த்து, மலே­சியா, தாய்­லாந்து, இந்­தோ­னீ­சியா ஆகிய நாடு­க­ளி­லும் திரு யூசுஃப் நிகழ்ச்­சி­கள் படைத்­துள்­ளார். தனது காலம் முடி­யும் வரை பாம்­பாட்­டித் தொழி­லில் இருக்க உறுதி பூண்­டுள்­ளார் திரு யூசுஃப்.