மக்களும் நாடும் உயர உறுதுணை

மக்களும் நாடும் உயர உறுதுணை

3 mins read

உலகளவில் தன்னைப்பேணித்தனம் அதிகரித்து வருகிறது. பல நாடுகள் தங்களது பொருளியலில் மட்டுமே ஒருமித்த கவனம் செலுத்துகின்றன. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருளியல்களை ஈர்க்க பல நாடுகளும் போட்டிபோட்டுச் செயல்படுகின்றன.

அதேநேரத்தில் சிங்கப்பூரில் மக்கள் தொகை பிரச்சினை தற்காலத்தில் பெரும் பிரச்சினையாக உள்ளது. வீடு வாங்கி குடும்பம் அமைக்கவும், பிள்ளைகளைப் பெற்று வளர்க்கவும் இளம் தம்பதியருக்கும் உதவி தேவைப்படுகிறது.

இத்தகைய சூழலில் சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிபெற்று முன்னணியில் நிற்க வேண்டும் என்றால் நாடு, மக்கள் இரு தரப்பிலும் உற்பத்தித்திறனும் போட்டித்திறனும் அதிகரிக்க வேண்டும்.

இதற்கு எல்லாவற்றுக்கும் உதவியாக, உறுதுணையாக ஆதரவளித்து, பக்கபலமாக இருந்து, அதேநேரத்தில் எதிர்காலக் கண்ணோட்டத்தையும் கருத்தில்கொண்டு இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தீட்டியுள்ளார்.

முதல் முறை வீடு வாங்குவோர், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவுகள் இங்கே அலசப்படுகின்றன.

கடந்த மாத இறு­தி­யில் திரு­ம­ண­மான விஷ்ணு - பவானி தம்­ப­தி­யர் கடந்த ஓராண்­டுக்­கும் மேலா­கவே வீடு வாங்­கும் திட்­டத்­தில் இருந்­த­னர் (படம்).

தனி­யார் நிறு­வ­னத்­தில் பொறி­யா­ள­ராக பணி­பு­ரி­யும் விஷ்­ணு­வும் நிதித் துறை­யில் பணி­பு­ரி­யும் பவா­னி­யும் திரு­மண ஏற்­பா­டு­களை முன்­னிட்டு இடை­யில் வீடு வாங்­கும் திட்­டத்­தைத் தள்­ளிப் போட்­டி­ருந்­த­னர்.

மாதத்­திற்கு இரு­வ­ரும் இணைந்து ஏறத்­தாழ 9,000 வெள்ளி வரு­மா­னம் ஈட்­டும் சூழ­லில் முதல் முறை வீடு வாங்­கு­வோ­ருக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் ஆத­ரவு மகிழ்ச்­சி­ய­ளிப்­ப­தா­கத் தெரி­வித்­த­னர.

இவ்வாண்டு இறு­திக்­குள் செங்­காங் பகு­தி­யில் நான்கு அல்­லது ஐந்தறை மறு­விற்­பனை வீவக வீடு வாங்க இத்தம்பதி திட்டமிட்டுள்ளது.

மொத்­த­மாக 600,000 வெள்ளி தொகைக்­குள் வீடு வாங்­க இலக்குக் கொண்டுள்ள இவர்­கள், தங்­க­ளு­டைய சேமிப்­பு­டன் வங்­கிக் கடன் பெற்று இத்­தொ­கை­யைச் செலுத்­த­வுள்­ள­னர்.

வீட்டு விலை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், கூடு­த­லாக கிடைக்­கப்­பெ­றும் மறு­விற்­பனை வீட்டு மானி­யம் பெரிதும் உத­வியாக என்­றும் கூறி­னர்.

அதே­நே­ரத்­தில் குழந்தை போனஸ் அதி­க­ரிப்பு, தந்­தைக்­கான விடுப்பு அதி­க­ரிப்பு போன்­ற­வை­யும் தங்­க­ளைப் போன்ற இளம் தம்­ப­தி­ய­ருக்கு நற்­செய்தி கள் என்று இவர்­கள் கூறி­னர்.

குழந்­தை­க­ளைப் பெற ஊக்­கு­விக்­கும் வகை­யில் முதல் முறை வீடு வாங்­கு­வோ­ருக்கு வீட்டு மானி­யங்­களும் அதி­க­மான குழந்தை போனஸ், தந்­தை­ய­ருக்­கான விடுப்­பும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

முதல் இரண்டு குழந்­தை­களுக்கு தலா $8,000லிருந்து $11,000க்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளது. மூன்­றா­வது குழந்­தை­யி­லி­ருந்து $10,000 இருந்த தொகை இனி $13,000 ஆக வழங்­கப்­படும்.

பிள்ளை மேம்­பாட்­டுக் கணக்­கிற்­கான அர­சாங்­கப் பங்­க­ளிப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

தந்­தைக்­கான விடுப்பு தற்­போது அர­சாங்­கம் வழங்­கும் இரண்டு வாரம் இரட்­டிப்­பாகி நான்கு வாரங்­க­ளாக அதி­க­ரிக்­கப் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கிறது.

முதல் முறை வீடு வாங்கப்போகும் புதுமணத் தம்பதி:

இவர்களைப்போல் முதல் முறையாக வீடு வாங்கத் திட்டமிடும் வி‌ஷ்ணு-பவானி தம்பதியருக்குக் கிடைக்கவுள்ள அனுகூலங்கள்:

1. தற்­போது, ​​பிடிஓ விநி­யோ­கத்­தின் பெரும்­ப­குதி, முதல் முறை வீடு வாங்­கும் குடும்­பங்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

2. முதல் முறையாக நான்கறை அல்லது அதற்கும் குறைவான அறைகள் உள்ள மறுவிற்பனை வீட்டை வாங்க மத்திய சேமநிதி வீட்டு மானியத் தொகை 50,000 வெள்ளியிலிருந்து 80,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஐந்தறை அல்லது அதற்கும் மேற்பட்ட அறைகள் உள்ள வீடுகள் வாங்க மத்திய சேமநிதி வீட்டு மானியத் தொகை 40,000 வெள்ளியிலிருந்து 50,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.

3. நெருக்­கத்தை ஊக்­கு­விக்­கும் வீட்டு மானி­யத்­தின்கீழ், அதாவது பெற்றோர் வீட்டுக்கு அருகே வாங்கினால் $30,000 தொகை­யைப் பெறலாம்.