கொரோனா காலத்திலும் குறையாத நற்பணி

கொரோனா காலத்திலும் குறையாத நற்பணி

6 mins read
54ca6a55-27ac-4a05-9ec2-453e96f095ac
-
multi-img1 of 3

கொவிட்-19 நோய்ப் பரவலாலும் அது தொடர்பான கட்டுப்பாடுகளாலும் வழக்கம்போல இவ்வாண்டு தீபாவளி நிகழ்ச்சிகளை நடத்த இயலாத சூழ்நிலை. ஆயினும், மக்களிடம் கொண்டாட்ட உணர்வு குறைந்துவிடக்கூடாது எனும் நோக்கில், ஆதரவு தேவைப்படுவோருக்கு இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. பண்டிகைக் காலத்தில் மக்களை உற்சாகப்படுத்த இணையம் வழியாகப் பல நிகழ்ச்சிகளுக்கு அவை ஏற்பாடு செய்து வருகின்றன.

இர்ஷாத் முஹம்மது

எஸ்.வெங்கடேஷ்வரன்

கி.ஜனார்த்தனன்

இந்து இளங்கோவன்

ஆண்­டு­தோ­றும் மிகச் சிறப்பாகக் கொண்­டா­ட்டப்படும் தீபா­வ­ளித் திரு­நாள் இவ்­வாண்டு கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழ­லி­லும் மங்­காத ஒளி­யா­கப் பிர­கா­சிக்க பல சமூக அமைப்­பு­கள் தங்­க­ளால் இயன்ற முயற்­சியை எடுத்­து­வ­ரு­கின்­றன.

அதில் முதன்­மை­யா­னது, அடித்­த­ளத்­தி­லி­ருந்து எழுந்த தேசிய அள­வி­லான திட்­டம்.

மக்­கள் கழக நற்­ப­ணிப் பேரவை­யின் ஏற்­பாட்­டில் குறைந்த வரு­மா­ன­ம் ஈட்டும் கிட்­டத்­தட்ட 2,000 குடும்­பங்­க­ளுக்கு தீபா­வ­ளிப் பல­கா­ரங்­கள் வழங்­கப்­படவுள்ளன. ஏறக்­கு­றைய 70 சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழுக்­கள் (ஐஏஇசி) அக்குடும்­பங்­க­ளுக்­குப் பல­கா­ரங்­களைக் கொண்டு சேர்க்­கும் முயற்சியில் கைகொடுக்க உள்ளன. இந்த விழாக்­கால அன்­பளிப்பு விநியோகம் இம்மாதம் 12ஆம் தேதி முதல் தொடங்கும்.

சமய நல்­லி­ணக்­கத்­தைப் பேணும் வகை­யில் மற்ற இனத்­த­வர்­களும் இந்­தி­யக் குடும்­பங்­க­ளுக்கு விநி­யோ­கம் செய்­யும் சேவைக்கு முன்­வந்­துள்­ள­னர்.

"அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய தீபா­வ­ளி­யைக் கொண்­டா­டு­வது எங்­க­ளின் நோக்­கம். வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்­குப் பல­கா­ரங்­களை வழங்கி விழாக்­கால குதூ­க­லத்­தைப் பரப்­ப­வேண்­டும் என உறுதிபூண்டுள்ளோம். தேசிய அள­வில் சமூக மன்ற இந்­தி­யர் நற்­பணிச் செயற்­கு­ழுக்­கள் பலவும் இணைந்து விநி­யோ­கத்­தில் ஈடு­படு­வது மகிழ்ச்­சி ­தரு­கிறது," என்று மக்­கள் கழக நற்­ப­ணிப் பேர­வை­த் தலை­வர் திரு ராம­மூர்த்தி கூறி­னார்.

இத்­திட்­டத்­தின் குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாக, வரும் 7ஆம் தேதி சுவா சூ காங்­கில் உள்ள வாட­கைக் குடி­யி­ருப்­பில் வசிக்­கும் 30 இந்­தி­யக் குடும்­பங்­க­ளுக்கு தீபா­வ­ளிப் பல­கா­ரத் தட்­டு­கள் வழங்­கப்­ப­டும்.

கேலாங் சிராய்

கடந்த பல மாதங்­க­ளாகக் கிரு­மித் ­தொற்று உல­கையே ஆட்­டிப்­படைத்து வரும் நிலை­யில், வேலை நீக்­கம், வரு­மான இழப்பு, வர்த்­த­கச் சரிவு போன்ற பொரு­ளி­யல்­ரீ­தி­யான சிக்­கல்­க­ளைப் பல­ரும் எதிர்­கொண்­டுள்­ள­தால் இவ்வாண்­டில் விழாக்­கால கொண்­டாட்­டங்­கள் எப்­படி இருக்­குமோ என்று பலர் சிந்­தித்து வரு­வ­தா­கக் கூறி­னார் கேலாங் சிராய் சமூக மன்ற இந்­தி­யர் நற்­பணிச் செயற்­கு­ழு­வின் துணைத் தலை­வர் திரு முகம்­மது மாலிக் கஞ்சா சபா.

"அத­னால் குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கு மகிழ்ச்சி தரும் வகை­யில் சமை­யல் பயி­ல­ரங்கு, மின்­னி­லக்க தீபா­வளி, கோலப் போட்டி எனப் பல நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளோம்," என்­றார் அவர்.

இவ்வாண்டு பல இந்­தி­யர் நற்­பணிச் செயற்­கு­ழுக்­கள் இணை­யம் வழி­யாக ஆடல், பாடல் நிகழ்ச்சி க­ளுக்­கும் ஏற்­பாடு செய்­துள்­ளன.

மீடி­யா­கார்ப் நிறு­வ­னத்­து­டன் இணைந்து பதிவு செய்­யப்­பட்ட நிகழ்ச்­சி­கள் அடுத்த சில நாள்­களில் 'மீவாட்ச்' இணை­ய­வா­சல் மூலம் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­ இருக்­கின்­றன.

உள்­ளூர் தொலைக்­காட்சி நட்­சத்­தி­ரங்­களும் அந்நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­றுள்­ள­னர்.

நற்­ப­ணி­யின் ஏற்­பாட்­டில் தீபா­வளி குறித்த கல்­வி­சார் நிகழ்ச்­சி­யும் ஃபேஸ்புக் நேரலை மூலம் ஒளி­ப­ரப்­பப்­ப­ட­வுள்­ளது. தீபா­வ­ளி­யின் முக்­கி­யத்­து­வம், உடை­கள், உணவு வகை­கள், இந்த நோய்ப் பர­வல் சூழ­லில் அப்­பண்­டிகை எப்­படி கொண்­டா­டப்­ப­டு­கிறது என்­பது குறித்து 'மெஸ்ரா' எனப்­படும் மக்­கள் கழக மலாய் சமூக நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வு­டன் இணைந்து இந்த இணைய நிகழ்ச்சி இடம்­பெ­ற­ இருக்கிறது.

இயூ டீ

இம்­மா­தம் 8ஆம் தேதி, ஏறத்­தாழ 30 சமூக மன்ற உறுப்­பி­னர்­கள், 20 கலை­ஞர்­க­ளின் ஈடு­பாட்­டில் இயூ டீ சமூக மன்­றத்­தில் 'தீப­மாலை 2020' என்ற கலை­நி­கழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த நிகழ்ச்சி குறித்த காணொளி, இம்­மா­தம் 21ஆம் தேதி 'இயூ டீ சிசி ஐஏ­இசி' ஃபேஸ்புக் பக்­கம் வழி­யாக ஒளி­ப­ரப்­பப்­படும். மக்­களை ஈடு­படுத்­தும் வகை­யில் திறன் போட்டி ஒன்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் பங்­கேற்க விரும்­பு­வோர் தங்­க­ளது திற­மை­க­ளைக் காணொ­ளி­யா­கப் பதி­வு­செய்து வரும் 15ஆம் தேதிக்­குள் அனுப்­ப­வேண்­டும். முடிவு­கள் நேரடி நிகழ்ச்­சி­யில் அறி­விக்­கப்­படும். முதல் மூன்று வெற்றி­யா­ளர்­க­ளுக்கு $300, $200, $100 ரொக்­கப் பரி­சு­களும் ஆறு­தல் பரி­சாக இரு­வ­ருக்கு 50 வெள்­ளி­யும் வழங்­கப்­படும். மேல் விவ­ரங்­களுக்கு facebook.com/YewTee CCIAEC பக்­கத்தை நாட­லாம்.

சொங் பாங்

'புரோ­ஜெக்ட் அன்பு' என்ற பெய­ரில் ஓவ்­வோர் ஆண்­டும் வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு கைகொ­டுத்து வரு­கிறது சொங் பாங் சமூக மன்­றத்­தின் இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு. கடந்த நான்­காண்­டு­க­ளா­கச் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரும் இத்­திட்­டத்­தால் இம்­முறை 40 குடும்­பங்­கள் பயன்­பெ­றும் என்று சொன்­னார் சொங் பாங் ஐஏ­இசி செய­லா­ளர் பவானி பால­சே­க­ரன், 40, கொண்­டாட்ட நிகழ்ச்­சி­களை இம்­முறை பிரம்­மாண்­ட­மாக நடத்த முடி­யாத நிலை­யி­லும் சமூ­க­ந­லத் திட்­டங்­கள் தேவை­யு­டை­ய­வர்­க­ளைப் போய்ச் சேரும் என்று நம்­பிக்­கை­யு­டன் கூறி­னார். அன்­ப­ளிப்­புப் பைகள் வரும் 7ஆம் தேதி விநி­யோ­கிக்­கப்­படும்.

உட்­லண்ட்ஸ்

கொண்­டாட்ட உணர்வு குறை­யா­மல் இருக்க மூன்று நாள் தீபா­வளி நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது உட்­லண்ட்ஸ் சமூக மன்­றத்­தின் இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு. ஏற்­கெ­னவே பதி­வு­செ­யப்­பட்­டு­விட்ட அந்த நிகழ்ச்­சித் தொகுப்பு வரும் 6, 7, 8 ஆகிய நாள்­களில் மாலை 7 மணிக்கு ஃபேஸ்புக் நேரலை மூலம் ஒளி­ப­ரப்­பா­கும். பூமாலை கட்­டு­தல், தீபா­வ­ளிப் பல­கா­ரங்­கள் செய்­முறை, கலை நிகழ்ச்­சி­கள் போன்ற பல அம்­சங்­களை அந்த நிகழ்ச்சி உள்­ள­டக்­கி­யுள்­ளது. மேல் விவ­ரங்­க­ளுக்கு facebook.com/woodlands.iaec பக்­கத்தை நாட­லாம்.

புக்­கிட் பாஞ்­சாங்

இம்­மா­தம் 8ஆம் தேதி 'meWatch' வழி­யாக சேலை அணி­வ­குப்பு, கண்­ணாடி ஓவி­யம், நட­னம், கோல­மி­டு­தல் எனப் பல நிகழ்ச்­சி­களை புக்­கிட் பாஞ்­சாங் இந்­தி­யர் நற்­பணிச் செயற்­குழு படைக்­க­வுள்­ளது. இந்­தப் பண்­டி­கைக் காலத்­தின்­போது மக்­களை உற்­சா­கப்­படுத்த தங்­க­ளால் முடிந்­த­வரை முயற்சி எடுத்து வரு­வ­தா­கக் கூறிய அந்­தச் செயற்­கு­ழு­வின் தலை­வர் கௌசல்யா ராமச்­சந்­தி­ரன், இவ்­வாண்டு கொண்­டாட்­டம் மிக­வும் வித்தியாசமாக இருக்கும் என்றார்.

சி யுவான்

தீபாவளியை முன்னிட்டு, குறைந்த வருமான இந்தியக் குடும்பங்களுக்கு உதவ

சி யுவான் இந்தியர் நற்பணிச் செயற்குழு திட்டமிட்டுள்ளது. அவ்வகையில், 'எங்கள் தீபாவளி 2020' எனும் நிகழ்ச்சி மூலமாக அங் மோ கியோ - ஹவ்காங் வட்டாரத்தைச் சேர்ந்த

48 குடும்பங்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய், கறித்தூள், மிளகாய்த் தூள், தீபாவளிப் பலகாரங்கள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆறு குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பைகளையும் பற்றுச்சீட்டுகளையும் வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் (படத்தில் இடமிருந்து 2வது). மற்ற குடும்பங்களுக்கான அன்பளிப்புப் பை விநியோகம் இன்று முதல் தொடங்கும். பொருளுதவி மட்டுமின்றி மக்களை மகிழ்விப்பதற்கான அம்சங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 7ஆம் தேதியன்று பிரியாணி, கோழிக் குழம்பு போன்ற உணவு வகைளைச் சமைப்பது எப்படி என்பதை விளக்கும் காணொளி சி யுவான் சமூக மன்றத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும். அத்துடன், இம்மாதம் 28ஆம் தேதியன்று நகைச்சுவை விவாத அங்கமும் அதே ஃபேஸ்புக் பக்கத்தில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மார்சிலிங்

'புரோ­ஜெக்ட் அன்­ன­தா­னம்' திட்­டத்­தின்­கீழ் அக்­டோ­பர் 4ஆம் தேதி தொடங்கி, மார்­சி­லிங் வட்­டா­ரத்­தில் உள்ள வசதி குறைந்த இந்­தி­யர்­களுக்கு மாதந்­தோ­றும் 300 சைவ உண­வுப் பொட்­ட­லங்­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. கே.சி. என்ற இளை­யர் குழு இந்த முயற்­சிக்­குக் கைகொ­டுத்து வரு­கிறது. வரும் 7ஆம் தேதி முதல் வசதி குறைந்த 220 குடும்­பங்­க­ளுக்கு பாசு­மதி அரிசி, சமை­யல் எண்­ணெய், தீபா­வ­ளிப் பல­கா­ரம் போன்­றவை அடங்­கிய அன்­ப­ளிப்­புப் பைகளை மார்­சிலிங் நற்­ப­ணிச் செயற்­குழு விநி­யோ­கிக்­கவுள்ளது. இதற்­கான நிதி ஆத­ரவை பல தனி­யார் நிறு­வ­னங்­களும் தனி­ம­னி­தர்­களும் வழங்கி உள்­ள­னர். பண்­டி­கைக் காலத்­தின்­போது உதவி தேவைப்­படும் மக்­களுக்கு முன்­வந்து உத­வும் இவர்­களின் மனப்­பான்மை தம்மை நெகிழ வைப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார் மார்­சிலிங் இந்­தி­யர் நற்­பணி செயற்­குழு­வின் தலை­வர் திரு­மதி நொர்­மா­னிஷா. படம்: மார்­சிலிங் இந்­தி­யர் நற்­பணிச் செயற்­குழு

ஸெங்ஹுவா

ஆண்­டு­தோ­றும் தீப­வா­ளிப் பண்­டி­கைக் காலத்­தின்­போது கலை நிகழ்ச்­சி­களை நடத்­து­வது வழக்­கம் என்­றா­லும் இவ்­வாண்டு கொரோனா தொற்று கார­ண­மாக சமூக அள­வி­லான கொண்­டாட்­டங்­களை நடத்த இய­லா­மல் போய்­விட்­டது. இருப்­பி­னும், குடி­யி­ருப்­பா­ளர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தும் நோக்­கில் கடந்த மாதம் 17, 24ஆம் தேதி­களில் இணை­யம்வழி தீபா­வளி சிறப்பு சமை­யல் வகுப்­பு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது ஸெங்­ஹுவா இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு. புகழ்­பெற்ற சமை­யல் கலை வல்­லு­நர் தேவகி (வலப்­ப­டம்) நடத்­திய அவ்­வ­குப்­பில் எழு­ப­துக்­கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்­ட­னர். அதில், பிரி­யாணி, பல­கா­ரங்­கள் போன்­ற­வற்­றைச் செய்­வது குறித்­துக் கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டது. இதில் மலாய், சீனக் குடி­யி­ருப்­பா­ளர்­களும் பங்­கேற்­ற­னர். படம்: ஸெங்­ஹுவா இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு