வேலையும் வேண்டும் மனநலனும் முக்கியம்

வேலையும் வேண்டும் மனநலனும் முக்கியம்

3 mins read

கொவிட்-19 கொள்ளைநோய் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோரின் வேலைகளை ஏப்பம் விட்டுவிட்டது. இச்சூழலிலும் இதற்குப் பிறகான காலத்திலும் வேலையில் இருக்கவும், வாழ்க்கையில் தொடர்ந்து மேம்படவும் மக்கள் தங்களைப் பலவழிகளிலும் தயார்ப்படுத்தி வரவேண்டியுள்ளது. கொரோனா நோய்ப் பரவல் காலத்தில் வேலைகளைப் பாதுகாத்துக்கொள்வது முக்கியம் என்றால், அதைவிட வேலை இடத்தில் மனநலனைக் கட்டிக்காப்பது முக்கியமாக உள்ளது.

வேலைகள், மக்களின் மனநலம் இரண்டையும் கொரோனா சூழல் பாதித்து உள்ளதால் இரண்டையும் பேண தகுந்த அணுகுமுறைகள் அவசியமாகின்றன...

கி.ஜனார்த்­த­னன்

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் மாறி­விட்ட வேலை நடை­மு­றை­க­ளால் உண்­டான சிக்­கல்­களில் ஊழி­யர் மன­ந­லச் சிக்­கல் முக்­கி­ய­மா­னது. நிச்­சய­மற்ற நிலைமை, வீட்­டி­­லி­ருந்து வேலை பார்ப்­ப­தால் ஏற்­படும் தனிமை உள்­ளிட்­ட­வற்­றால் ஊழி­ய­ர­ணி­யின் மன­ந­லம் மீதான அழுத்­தம் கூடி­யுள்­ளது. மன­ந­லப் பிரச்­சி­னை­க­ளால் உற்­பத்தி பாதிக்­கப்­ப­டு­கிறது.

அத்­து­டன், மருத்­துவ விடுப்பு எடுப்­போ­ரின் எண்­ணிக்­கை­யும் வேலை­யில் இருந்து வில­கு­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளன.

உலக ஊழி­ய­ர­ணி­யில் கிட்­டத்­தட்ட பாதிப் பேர், கிரு­மிப்­ப­ர­வ­லால் கவ­லை­யை­யும் வேலை­வாய்ப்பு குறித்த அச்­சத்­தை­யும் உணர்­வ­தாக கருத்­துக்­க­ணிப்­பு­கள் சுட்­டு­கின்­றன. அலு­வ­ல­கத்­தில் வேலை செய்ய முடி­யா­த­தால் உண­ரும் தனிமை, வேலை-வாழ்க்கை சம­நி­லை­யைக் கட்­டிக்­காக்க இய­லாமை ஆகி­ய­வற்­றா­லும் மக்­கள் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

வேலைச் சூழல், கட்­டுப்­பா­டு­கள், வேலைப்­பளு, எதிர்­பார்க்­கப்­படும் செயல் திறன், வேலை நேரம், வேலை­யி­டக் கட்­ட­மைப்பு போன்ற பல்­வேறு கார­ணங்­கள் மன அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லின்­போது, வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது, பிரிக்­கப்­பட்ட குழுக்­க­ளாக வேலை செய்­வது போன்­ற­வற்­றால் வேலைச் சூழல் பல­ருக்கு வெகு­வாக மாறி­யுள்­ளது. இத­னால் ஏற்­படும் மன உளைச்­சல் சில­ரது மன­ந­ல­னைப் பாதிக்­க­லாம்.

ஒவ்­வொரு துறை­யி­ன­ருக்­கும்

பல்­வேறு சவால்­கள்

சட்ட நிறு­வ­னம் ஒன்­றில் மனி­த­வள நிபு­ண­ரா­கப் பணி­பு­ரி­யும் 25 வயது அகிலா நட­ரா­சன், கிரு­மிப்­ப­ர­வ­லால் ஏற்­பட்­டுள்ள வேலைச்­சூ­ழல் மாற்­றங்­க­ளைச் சமா­ளிப்­ப­து­டன், மற்ற ஊழி­யர்­க­ளுக்­கும் மாற்­றங்­க­ளைச் சமா­ளிக்க உதவ வேண்டிய சூழ்நிலை இருந்தது.

அடிக்­கடி புதுப்­பிக்­கப்­படும் மனி­த­வள அமைச்­சின் விதி­மு­றை­க­ளுக்கு ஏற்ப தமது நிறு­வ­னத்­தின் கொள்­கை­களை மாற்­று­வ­தும் அதனை முறை­யாக செயல்­படுத்­து­வ­தும் தொடக்­கத்­தில் இவ­ருக்குச் சவால்­மிக்­க­தாக இருந்­தது.

வீட்­டி­லி­ருந்து பணி­பு­ரி­வோ­ருக்கு, வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் வழி­மு­றை­கள் குறித்­துக் கற்­பிக்க வேண்டி இருந்­த­தாக கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக இத்­துறை­யில் பணி­யாற்­றும் குமாரி அகிலா தெரி­வித்­தார்.

"எல்லை மூடல் கார­ண­மாக இங்­கேயே தங்­கி­யுள்ள வெளி­நாட்­டி­ன­ருக்கு ஏற்­படும் தனிமை உணர்­வைப் போக்க, கேளிக்கை, கலந்­து­ற­வா­ட­லுக்­கான நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்­கி­றோம். அவை அவர்­க­ளது மன அழுத்­தத்­தைக் குறைக்க உதவு­கின்றன," என்­றார் குமாரி அகிலா.

நேர்மறைச் சிந்­தனை

மன உளைச்­ச­லைக் குறைக்­கும்

கொவிட் சூழலால் குடும்­பத்­தில் நிதிப் பற்­றாக்­குறை ஏற்­பட்­ட­போது நேர்மறை­யான எண்­ணங்­க­ளால் பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளித்­தார் பெட்­ரோல் நிலைய பணி­யா­ளர் செல்­வ­கு­மார் கன்­னி­யப்­பன்.

சிறு­நீ­ரகச் சுத்­தி­க­ரிப்­புக்­குச் செல்ல வேண்­டிய மனை­வி­யின் மருத்­துவச் செலவு, இரு பிள்­ளை­க­ளின் படிப்­புச் செலவு, குடும்­பச் செல­வு­க­ளைச் சமா­ளிப்­ப­தற்­காக மக்­கள் கழ­கம் போன்ற அமைப்­பு­களை நாடு­வ­தா­கக் கூறிய திரு செல்­வ­கு­மார், பிரச்­சி­னை­க­ளைப் பற்றி அடிக்­கடி நினைப்­ப­தைத் தவிர்த்­துக்­கொள்­வ­தா­கக் கூறி­னார்.

மன­நல உத­வியை அர­சாங்­கம் பல­ருக்கு வழங்க முற்­பட்­டா­லும் வேலை­இடங்­கள் இத­னைப் புரிந்­து­கொள்ள கால­தா­ம­தம் ஆகும் என்­ப­தால் தனக்­குத் தானே தொடர்ந்து தைரி­ய­மூட்டி வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

மனோ­தத்­துவ நிபு­ணர் ராஜேஷ் ஜேக்­கப் வழங்கும் ஆலோ­சனை

வேலைக்­கும் வாழ்க்­கைக்­கும் இடை­யிலான வரை­யறை தற்­போதைய கிரு­மிப்­பரவல் சூழ­லால் பல­ருக்கு இல்­லா­ம­லாகி வரு­கிறது. அலு­வ­ல­கத்­தில் வேலை பார்க்­கும்­போது குறிப்­பிட்ட நேரத்­திற்­குள் முடிய வேண்­டிய வேலை நேரம், அடிக்­கடி நீட்­டிக்­கப்­ப­டு­வ­தால் பல­ருக்கு மன உளைச்­சல் கூடு­வ­தாக அறியப்படுகிறது.

வேலை நேரத்­திற்கு அப்பாலும் முத­லா­ளி­கள் ஊழி­யர்­க­ளுக்­குத் தொடர்ந்து மின்­னஞ்­சல்­க­ளை­யும் குறுந்­த­க­வல்­க­ளை­யும் அனுப்­பு­வ­தால் எரிச்­சல், மன உளைச்­சல் ஆகி­ய­வற்­று­டன் மன அழுத்­த­மும் பதற்­ற­மும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக மனோ­தத்­துவ நிபு­ணர் ராஜேஷ் ஜேக்­கப் தெரி­வித்­தார்.

"வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வதால் சக ஊழி­யர்­க­ளு­டன் உற­வாட இய­லாத சிலர் தனி­மையை எதிர்­நோக்­குகி­றார்­கள், அல்­லது வீட்­டில் தேவைப்­படும் தனி­மையைப் பெற முடியாமல் சிர­மப்­ப­டு­கின்­ற­னர்.

"சிங்­கப்­பூ­ரில் கிரு­மிப்­ப­ர­வல் நில­வ­ரம் சீர­டை­யும் நிலை­யில் சிலர் தங்­க­ளது வேலை யிடங்­க­ளுக்குத் திரும்புகின்­ற­னர். எனி­னும், கிரு­மித்­தொற்று அபா­யம் முற்­றி­லும் மறை­ய­வில்லை என்­ப­தால் அதுகுறித்த பதற்­றம் சில­ருக்கு இருக்­க­லாம்," என்றார் அவர்.

"தற்போதைய நிச்­ச­ய­மற்ற பொரு­ளி­யல் சூழ­லில் சில­ருக்கு ஏற்­படும் பதற்­றமும் குழப்­பமும் மதுவருந்துதல் போன்ற தீய பழக்­கங்­க­ளுக்கு வித்திடு­வ­தா­கக் கூறிய டாக்டர் ராஜேஷ், இந்த மனஉளைச்­ச­லால் சிலர் தங்­க­ளது உயிரைக்கூட மாய்த்­துக்­கொள்­ளும் அபா­யம் இருப்­ப­தாகத் தெரிவித்தார்.