நம்மில் பெரும்பாலானோருக்கு தமிழ் மொழி கற்றல் என்பது பள்ளியோடு முடிந்துவிடுகிறது. பள்ளிக்கு அப்பால் என்னதான் தமிழ் திரைப்படங்களை பார்ப்பது, தமிழ் நிகழ்ச்சிகளுக்கு போவது என்றிருந்தாலும் நமது அன்றாட வாழ்க்கையில் தமிழ் மொழியை பயன்
படுத்தினால்தான் அது வாழும் மொழியாகும். நமது அன்றாட வாழ்க்கையில் அங்கம் வகிக்கும் இடங்களிலும் நமது உரையாடல்களிலும் நாம் பிடித்து படிக்கும் நூல்களிலும் தமிழ் பயன்பாடு இருந்தால், தமிழ் வாழும் என்பது திண்ணம்.
கிட்டத்தட்ட 9% இந்தியர்களை கொண்ட சிங்கையில் தமிழ் மொழியை வாழும் மொழியாக்க பலவற்றையும் செய்துவருகின்றன நமது சமூகமும் அரசாங்கமும்.
அண்மைக் காலமாக இல்லங்களில் அதிகரித்துவரும் ஆங்கில மொழியின் புழக்கம், பிற இந்திய மொழிகளின் ஈடுபாடு, அதிகாரத்துவ மொழிபெயர்ப்புகளில் ஏற்படும் தவறுகள் போன்றவை சிங்கப்பூரில் தமிழ்மொழியின் வளர்ச்சிப் பாதை யில் சவால்களை நட்டு வைத்து உள்ளன. இருப்பினும் மொழி வளர்ப்புப் பணியில் இடையறாது ஈடுபட்டிருக் கும் வர்த்தகங்களும் சமய வழி பாட்டுத் தலங்களும் நம்மிடையே உள்ளன. அவற்றை நாடிச் சென்று தமிழ் முரசு திரட்டிய தகவல்களை இங்கே காண்போம்.