18 வயதில் தனது தாயின் மீன் கடையில் உதவத் தொடங்கிய கிஷாவிற்கு இப்போது வயது 26. ‘PK ஃபிஷ் சப்ளையர்’ என்ற இவரது கடையில் என்ன வகை மீன்கள் விற்கப்படுகின்றன என்று கேட்டதும் அசத்தும் தமிழில், “கண்ணாடி பாறை, தேங்கா பாறை, மஞ்சள் பாறை, வௌவால், வஞ்சரை, கூறல், செங்கினி, சங்கராம், கானகத்தா, மஞ்சள்பொடி, காலா, கொடுவா, அதல விரால், திருக்கை, பண்ணா,” என்று மூச்சுவிடாது அடுக்கிக்கொண்டே போகிறார் இவர்.
உயர்நிலைப் பள்ளியிலே இவருக்கு தமிழ்க் கல்வி நிறைவைத் தந்திருந்தாலும் கடையில் தினமும் சந்திக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து தமிழ் கற்றுக்கொண்டும் அவர்களுடன் தமிழில் பேசி தமிழ் பயன்பாட்டை ஊக்குவித்தும் வருகிறார்.
“தேக்கா சந்தைக்கு வரும் 90% வாடிக்கையாளர்கள் தமிழர்கள் தான். மீன் வகைகளின் தமிழ்ப் பெயர்களைக்கூட தமிழ் வாடிக்கையாளர்களுடன் உரையாடி அவர்
களிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக நிறைய தமிழ் வாடிக்கையாளர்கள், நானே தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில்தான் பதிலளிக்கிறார்கள். தமிழ் புரிந்தாலும் பேசத் தயங்கு கிறார்கள். இது எனக்கு வியப்பாக இருக்கிறது. நானும் என் அம்மாவும் எந்தத் தமிழ் வாடிக்கையாளரைப் பார்த்தாலும் தமிழில்தான் பேசுவோம். தெளிவான அழகான தமிழில் பேசவேண்டும் என்ற அவசியம் இல்லை. தெரிந்த தமிழில் முடிந்த அளவுகூடப் பேசவில்லை என்றால் அது வருத்தத்திற்குரிய ஒன்று. தமிழர்கள் அதிகமாகக் கூடும் லிட்டில் இந்தியா போன்ற இடங்களில் பார்க்கும், சந்திக்கும் நபர்களுடன் தமிழிலில் பேசிப் பழகினால் நல்லது,” என்று நம்மிடம் கூறினார் கிஷா.