வாசிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் தேசிய நூலக வாரியத்தின் திட்டங்களில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.
'புக் நின்ஜாஸ்/புக் ரேஞ்சர்ஸ்'
சுவாரசியமான கதைகள் மூலம் 3 முதல் 6 வயது வரையிலான சிறார் களின் ஆரம்பகால வாசிப்புத் திறனை வளர்க்கும் ஒரு திட்டம்தான் புக் நின்ஜாஸ். வேடிக்கை நிறைந்த படைப்பு மற்றும் வழி
முறைகள் மூலம் வாசிப்பு, எழுதும் ஆர்வத்தைத் தூண்ட 7 முதல் 10 வயது வரையிலான சிறுவர்களுக்கானது புக் ரேஞ்சர்ஸ் கிளப்.
இளைஞர்களுக்கான
வாசிப்புத் தொடர்
13 முதல் 17 வயதுடைய மாணவர்கள் பல்வேறு தமிழ் இலக்கியப் படைப்புகளைப் படித்து, கதைகள், நாடகங்கள், திரைக்கதைகள் மற்றும் குறும்படங்களாக எவ்வாறு அவற்றை உருவாக்குவது என்பதை கற்றுக்கொள்கிறார்கள். இத்தொடர் மாணவர்களை பல்வேறு தமிழ் இலக்கிய வகைகளுக்கு அறிமுகப்படுத்துகிறது.
இளம் எழுத்தாளர் வட்டம்
இளம் எழுத்தாளர் வட்டம் என்பது தமிழ் மொழி சேவைகளின் கீழ் அடங்கும் ஒரு கற்றல் சங்கம். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களாக இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு ஆதரிப்பதற்கும் இது உதவுகிறது.
அதன் வருடாந்திர முதன்மை நிகழ்வு சிங்க்போவ்ரிமோ - இது தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக ஃபேஸ்புக்கில் ஒரு மாத காலம் நடைபெறும் தினசரி கவிதை எழுதும் போட்டி.
பெரியவர்களுக்கான வாசிப்புக் குழு
வாசகர் வட்டம், கவிமாலை, மாயா இலக்கிய வட்டம், சங்கப்பலகை, கதைக்களம்.
கலாசார மரபு
கலந்துரையாடல் தொடர்
இந்த கலந்துரையாடல் திட்டம் தமிழ் கலாசாரம், மரபுகள் மற்றும் கலைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தலைப்புகளில் தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ள நிபுணர்கள் அழைக்கப்
படுகிறார்கள்.
சிங்கப்பூர் நூலாசிரியர் தொடர்
சிங்கப்பூரின் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்த சிங்கப்பூர் நூலாசிரியர்களைக் கொண்டாடும்
திட்டம்.