தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் இருந்து நீளும் உதவிக்கரங்கள்

4 mins read
bde0e483-b55e-45f3-b8dd-9e09356eef10
-
multi-img1 of 3

கொவிட்-19 இரண்டாவது அலை இந்தியாவைச் சுழற்றியடித்து வரும் நிலையில், சிங்கப்பூர் உட்பட உலக நாடுகள் பலவும் தங்களால் ஆன உதவியை அந்நாட்டிற்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில், சிங்கப்பூரில் உள்ள பல்வேறு அமைப்புகளும் தனிமனிதர்களும் கூட்டாகவும் தனியாகவும் நிதி திரட்டி, இந்தியாவிற்கு மருத்துவ ரீதியில் ஆதரவளித்து வருகின்றனர்.

வி.கே. சந்தோஷ் குமார்

அண்­மைய மூன்று நிகழ்­வு­கள், சிங்கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­க­ளான பிராந்­திக் மஸும்­தார், தீப்தி காமத் ஆகி­யோரை இந்­தி­யா­வில் சிர­மப்­படு­வோ­ருக்கு உத­விக்­க­ரம் நீட்­டச் செய்­துள்­ளது. அந்­நாட்­டில் பர­வி­வரும் பி16171 மற்­றும் பி16172 உரு­மா­றிய கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் சுகா­தா­ரக் கட்­ட­மைப்பே குலைந்­துள்­ளது.

"நெருக்­க­மான சக பணி­யா­ளர் ஒரு­வ­ரின் தந்தை, கொரோனா தொற்­றி­யதை அடுத்து மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். ஆனால் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அவ­ருக்குப் படுக்­கையோ உயிர்­வாயுவோ கிடைக்­க­வில்லை. நல்ல வேளை­யாக அவர் பிழைத்­து­விட்­டார்," என்று டென்ட்சு இன்­டர்­நே­ஷ­னல் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நரான (சிஎக்ஸ்­எம் குழு­மம்) திரு மஸும்­தார் தெரி­வித்­தார்.

"புதி­தாக மண­மான, 31 வய­தே­யான விநி­யோ­கப் பங்­காளி ஒரு­வரும் டெல்­லி­யில் உயி­ரி­ழந்­து­விட்­டார். அங்கு நில­விய உயிர்­வா­யுப் பற்­றாக்­கு­றை­யால் அவ­ரைக் காப்­பாற்ற முடி­யா­மல் போனது.

"அதற்­கு­முன், உரிய நேரத்­தில் உயிர்­வாயு கிடைக்­கா­மல் பாட்­னா­வி­லும் கயா­வி­லும் முறையே 64 மற்­றும் 57 வய­தான என் உற­வினர்­கள் இருவர் இறந்­து­விட்­ட­னர். கிருமி தொற்றும் ­முன் அவர்­க­ளின் உடல்­நிலை ஓர­ளவு நன்­றா­கவே இருந்­தது," என்­றார் மஸும்­தார்.

இந்­தச் சூழ­லில், கொரோனா தொற்­றுக்கு எதி­ரா­கப் போராடி வரும் இந்­தி­யா­விற்கு உதவ, திரு மஸும்­தா­ரும் தேசிய பல்­க­லைக்­கழக மருத்­து­வ­ம­னை­யில் மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்­றும் அவ­ரின் மனைவி தீப்­தி­யும் வெள்­ளிக்கு வெள்ளி நிக­ராக அளிக்­கும் நிதித்­தி­ரட்டு நட­வ­டிக்­கையை கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்­கி­னர்.

'மிலாப்' பொது நிதித்­தி­ரட்­டுத் தளம் வழி­யாக அவர்­கள் மேற்­கொண்ட அம்­மு­யற்­சி­யின் மூலம் 48 மணி நேரத்­திற்­குள் 100,000 வெள்­ளிக்­கும் அதி­க­மான நன்­கொடை திரண்­டது. ஏழு நாள்­களில் 200,000 வெள்­ளி­யைக் கடந்­தது.

"அந்­தப் பணத்­தைக் கொண்டு சீனா, ஹாங்­காங், தைவான், சிங்­கப்­பூர், பிரிட்­டன் ஆகிய நாடு­களில் இருந்து உயிர்­வா­யுச் செறி­வூட்­டி­களை வாங்கி, இந்­தி­யா­வுக்கு அனுப்­பு­கி­றோம்," என்­றார் திரு மஸும்­தார்.

தங்­க­ளது நிதித்­தி­ரட்டு முயற்­சிக்கு பத்து நாடு­க­ளைச் சேர்ந்த 1,043 பேர் ஆத­ர­வ­ளித்­தி­ருப்­பது தங்­க­ளுக்கு உந்­து­சக்தி அளிப்­ப­தாக உள்­ளது என்­றார் அவர்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் மற்­றும் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கப் பட்­ட­தா­ரி­கள் சிலர் ஒரு குழு­வாக இணைந்து 'மிலாப்' தளம் வழி­யாக நிதி திரட்டி, உயிர்­வா­யுத் தட்­டுப்­பாட்­டில் இருந்து இந்­தியா விடு­பட உதவ முயல்­கின்­ற­னர்.

அதற்­காக சிங்­கப்­பூர், பிலிப்­பீன்ஸ், இந்­தியா ஆகிய நாடு­களைச் சேர்ந்த பத்­துக்­கும் மேற்­பட்­டோர், 'சுமோ (சிங்­கப்­பூர் யூனி­வர்­சிட்­டிஸ் மிஷன் ஆக்­சி­ஜன்)' எனும் பெய­ரில் ஒன்­றி­ணைந்­துள்­ள­னர். வெவ்­வேறு துறை­களில் தங்­க­ளுக்கு உள்ள நிபு­ணத்­து­வத்­தைப் பயன்­ப­டுத்தி, மருத்­து­வக் கரு­வி­களைக் கொள்­மு­தல் செய்து, அவற்றை அனுப்பி வைத்து, ஊரக, நகர்ப்­பு­றங்­க­ளுக்கு விநி­யோ­கிப்­பது வரை­யி­லான பணி­களை ஒருங்­கிணைந்து மேற்­கொள்­கின்­ற­னர்.

"இந்­தி­யா­வில் நிலைமை மோச­மா­கி­யுள்ள நிலை­யில், அண்­மைய காலங்­களில் ஏற்­பட்­ட ஆக மோச­மான நெருக்கடிகளில் ஒன்றை எதிர்த்­துப் போராட இந்­தி­யா­விற்­குக் கைகொ­டுக்க உத­வு­வது எனத் தீர்­மா­னித்­தோம்," என்று இந்த நிதித்­தி­ரட்டு முயற்­சி­யைத் தொடங்­கிய திரு ராகுல் சிங்.

"உல­கெங்­கும் இருந்து கிட்­டத்­தட்ட 600 பேர் நன்­கொடை அளித்­துள்­ள­தால் ஏறக்­கு­றைய 100,000 அமெ­ரிக்க டாலரை (S$134,000) திரட்டியுள்ளோம். இப்­போது உயிர்­வா­யுச் செறி­வூட்­டி­களை வாங்கி வரு­கி­றோம்," என்­றார் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­கழக முன்­னாள் மாண­வ­ரும் வங்­கிப் பணி­யா­ள­ரு­மான திரு ராகுல்.

நெதர்­லாந்­தில் இருந்து தரு­விக்­கப்­பட்ட முதல் தொகுதி உயிர்­வாயுச் செறி­வூட்­டி­கள் இவ்­வா­ரம் இந்­தி­யா­வில் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளன.

"இந்­தி­யா­விற்­குக் கைகொ­டுக்­கும் நோக்­கில் கடந்த இரு வாரங்­களாக சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழிற்­சபை (சிக்கி) தனது உறுப்பு நிறு­வ­னங்­க­ளி­டம் உதவி கேட்டு வரு­கிறது. தனி­ம­னி­தர்­கள் பல­ரும் முன்­வந்து உத­வி­யுள்­ள­னர். மொத்­தம் $300,000 நன்­கொடை திரட்ட உறு­தி­பூண்­டுள்ள நிலை­யில், இது­வரை­யில் 200,000 வெள்ளி நேர­டி­யாக வந்து சேர்ந்­துள்­ளது. திரட்­டப்­படும் தொகை முழு­வ­தும் சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும்," என்று 'சிக்கி' தலை­வர் டி.சந்­துரு தெரி­வித்தார்.

இத­னி­டையே, 'லிஷா' எனப்­படும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­க­மும் 'சிக்கி'யுடன் சேர்ந்து கடந்த வாரம் நிதி­த்திரட்டு முயற்சியைத் தொடங்­கி­யது.

லிட்­டில் இந்­தியாவில் நிதித்­ திரட்­டுக்­கென சிறப்­புக் கூடாரம் அமைக்­கப்­பட்டு, நன்­கொ­டைப் பெட்டி வைக்­கப்­பட்­டது. நாள்­தோறும் கிட்­டத்­தட்ட நூறு பேர் அப்­பெட்­டி­யில் நன்­கொடை போட்­டுச் சென்­ற­தா­கக் குறிப்­பிட்ட லிஷா, தற்­போது கொவிட்-19 கட்­டுப்­பாடு­கள் கார­ண­மாக அக்கூடாரம் அகற்­றப்­பட்­டு­விட்­ட­போ­தும் நன்­கொ­டைப் பெட்டி கேம்­பல் லேனுக்கு அரு­கிலுள்ள 'அக்­‌ஷயா ஜூவல்­லர்ஸ்' கடை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­யது. $150,000 நிதி திரட்டுவது அதன் இலக்கு.

ஃபார் ஈஸ்ட் பிளா­சா­வில் உள்ள 'தி கர்வ் கல்ட்' ஆடைக் கடை, இம்­மா­தம் 21-23 தேதிகளுக்குள் கிடைக்­கும் லாபம் முழு­வ­தை­யும் இந்­தி­யா­விற்கு நன்­கொ­டை­யாக வழங்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது. "கடையில் எது­வும் வாங்­கா­மலும் மக்­கள் நன்­கொடை தர­லாம். திரட்­டப்­படும் நிதியை கிவ்­இந்­தியா, கூஞ் (Goonj) ஆகிய அமைப்­பு­களி­டம் வழங்­க­வுள்­ளோம்," என்­றார் அக்­க­டை­யின் உரி­மை­யா­ளர் திரு­வாட்டி ராணி தாட்­சா­யனி, 32.