சமய, இன உணர்வுகளைக் காயப்படுத்தும் வார்த்தைகளை வெளிப்படுத்துவது குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 298 சட்டப்படி குற்றம்.
வெவ்வேறு இனங்களுக்கும் சமயங்களுக்கும் மத்தியில் விரோத உணர்வை ஏற்படுத்துவதும் நல்லிணக்கத்திற்கு எதிரான செயல்களும் பிரிவு 298ஏ சட்டத்தின்படி குற்றமாகும்.
இந்தப் பிரிவுகளின்படி அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்பட்டலாம்.
அண்மைய தண்டனைகளில் இந்தச் சட்டத்தின்கீழ் $3,000 முதல் $4,000 வரை அபராதம் அல்லது மூன்று முதல் எட்டு வாரச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்பட்டுள்ளது.
இவற்றைப் போன்றே சீர்குலைவுச் சட்டமும் இனவாதத்திற்கு எதிராக தனிநபர்களைப் பாதுகாக்கிறது.
சிங்கப்பூரர்களிடையே வெவ்வேறு இன, சமூகத்தினரிடையே வெறுப்புணர்வையும் சண்டையையும் மூட்டினால் அது குற்றம் என்று இச்சட்டத்தின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இன நல்லிணக்கச் சட்டத்தின்கீழ், எந்த சமய குழுவையோ தலத்தையோ இனவாதச் செயலுக்கு உந்துதல் தரும் எந்த தனிநபருக்கு எதிராகவோ அமைச்சர் தடுப்பு ஆணை பிறப்பிக்கலாம்.
இத்தகைய சட்டத்திட்டங்கள் இனவாதத்திற்கு எதிராக தடுப்பு அரணாக இருந்தாலும் சட்டம் இயற்றி இனவாதத்தைத் தடுப்பது என்றில்லாமல் அதை தணிக்க கல்வி மூலமே செயல்பட வேண்டும் என்றார் ஃபீனிக்ஸ் சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் திரு என். திவானன்.