முழுவீச்சில் தடுப்பூசி இயக்கம்

முழுவீச்சில் தடுப்பூசி இயக்கம்

6 mins read

கொவிட்-19 தொற்றுக்கு எதிராக அரண் அமைக்க தடுப்பூசி ஒன்றே தற்போதுள்ள வழி. இதைக் கருத்தில்கொண்டு தேசிய தடுப்பூசி இயக்கம் வேகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தினத்துக்குள் மூன்றில் இரு பங்கு சிங்கப்பூரர்களுக்குத் தடுப்பூசி போட்டுவிட சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது. எனினும், தடுப்பூசி மூலம் சமூகப் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் சிங்கப்பூர் பல சவால்களை எதிர்நோக்குகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சிலருக்கு இன்னமும் தயக்கம் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தடுப்பூசி போடுவது கட்டாயம் ஆகலாம் என்ற சிந்தனை ஏற்பட்டுள்ளது.

சிங்­கப்­பூ­ரில் முதன்­மு­த­லாக கடந்த டிசம்­பர் 30ஆம் தேதி மூத்த தாதி­திரு­வாட்டி சாரா லிம்முக்கு, 47, முதல் தடுப்­பூ­சி போடப்பட்டது. அடுத்த ஆறு மாதங்­களில் ஐந்து மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள். மக்­கள் தொகை­யில் பாதிக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் முதல் தடுப்­பூ­சி­யை­யா­வது போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

சிங்­கப்­பூர் மக்­களை கொவிட்-19 கொள்­ளை­நோ­யி­லி­ருந்து பாது­காக்க அர­சாங்­கம் தடுப்­பூசி இயக்­கத்தை விரை­வு­ப­டுத்தி வரு­கிறது.

சமூக அள­வி­லான நோயெ­திர்ப்பு சக்­தியை ஏற்­ப­டுத்­தும் முயற்­சி­யில் தடுப்­பூசி இயக்­கம் நோயின் தன்­மையை மாற்­றி­யுள்­ளது. அது சாதா­ரண நோய் போல சமூ­கத்­தில் இருக்­கும். தடுப்­பூசி போட்­ட­வர்­கள், கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் கடு­மை­யான நோய் பாதிப்­புக்கு ஆளாக மாட்­டார்­கள். அத்­து­டன் அவர்­கள் அவ்­வப்­போது இந்த தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்டு வந்­தால் அவர்­க­ளுக்குத் தொடர்ந்து நோயெ­திர்ப்பு பாது­காப்பு இருக்­கும்.

அதே­நே­ரத்­தில், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது பற்றி இன்­னும் எத்­தனை பேர் முடி­வெ­டுக்­கா­மல் இருக்­கி­றார்­கள் என்­பது தெரி­ய­வில்லை.

தடுப்­பூ­சியை இரண்டு முறை போட்­டுக்­கொண்­ட­வர்­கள், இல்­லத் தனி­மை­யின்­போது பரி­சோ­த­னை­க­ளைக் குறைத்­துக்­கொள்­வ­தை­யும் விழாக்­களில் அதிக அள­வில் கூடு வதை­யும் எதிர்­பார்க்­க­லாம் என்று சென்ற வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற அமைச்­சு­கள் நிலைப் பணிக்­கு­ழுக் கூட்­டத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

நோய்ப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான உத்­தி­கள் தொடர்ந்து மேம்­ப­டுத்­தப்­பட்­டா­லும் தடுப்­பூசி தொடர்­பான கொள்­கை­களில் பெரிய மாற்­றம் இருக்­காது என்று தொற்­று­நோய், சமூ­க­வி­யல், சட்­டம், நக­ரத் திட்­ட­மி­டல் துறை­க­ளைச் சேர்ந்த நிபு­ணர்­கள் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதா வேண்­டாமா என முடிவு செய்­யும் உரிமை மக்­க­ளுக்­குத் தொடர்ந்து இருக்­கும் என்­றார் தொற்று நோய்­கள் பற்­றிய நிபு­ண­ரான டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வக் கல்­லூ­ரி­யின் பேரா­சி­ரி­யர் ஹுவி எங் லியோங்.

"நோய்த் தடுப்பு வெற்றி பெறு­வற்கு கட்­டா­யத் தடுப்­பூ­சித் திட்டம்­தான் வழி என்று நான் நினைக்­க­வில்லை. நாட்­டின் சுகா­தா­ரத்­தைப் பேணு­வது, ஒன்­றைத் தேர்ந்­தெ­டுக்­கும் உரிமை, இவற்­றுக்­கி­டையே சம­நிலை காண­வேண்­டி­யுள்­ளது," என்­றார் பேரா­சி­ரி­யர் ஹுவி.

இவர் உரு­வாக்­கிய தடுப்­பூசி மருந்தை 'ஆர்க்­டு­ய­ரஸ் தெரா­பி­யூ­டிக்ஸ்' என்ற மருந்­தக நிறு­வ­னம் தற்­பொ­ழுது பரி­சோ­தித்து வரு­கிறது.

தடுப்­பூ­சி­யால் ஏற்­படும் பலன் குறித்து மக்­க­ளுக்குத் தொடர்ந்து அறி­வு­றுத்­தப்­படும் என்று இவ­ரும் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­ய­ரான யூஜின் டானும் கூறு­கின்­ற­னர்.

தடுப்­பூசி, அவ­ச­ர­நிலை பயன்­பாட்­டிற்கு ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டுள்­ள­தால் அவை கட்­டா­ய­மாக்­கப்­ப­டாது, ஆனால் அதைப் போட்­டுக்­கொள்­ளும்­படி அர­சாங்க ஊக்­கு­விப்பு தொட­ரும் என்று பேரா­சி­ரி­யர் டான் மேலும் கூறி­னார்.

"தடுப்­பூ­சி­யின் பலன் குறித்து மக்­க­ளுக்கு எடுத்­துக்­கூ­று­வது, அவர்­கள் அதை எடுத்­துக்­கொள்­வது என அர­சாங்­கம் முழு மூச்­சு­டன் முயற்சி செய்­யும். இதில் மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்­டும் வகை­யில் தடுப்­பூசி காப்­பு­று­தித் திட்­டத்தை அரசு தொட­ரும்," என்று அர­சாங்­கத்­தின் தடுப்­பூசி கார­ண­மாக ஏற்­படும் விளை­வு­க­ளுக்கு நிதி உதவி அளிக்­கும் திட்­டம் பற்றி பேரா­சி­ரி­யர் டான் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் தற்­போ­தைய நிலை­யில் டிப்­தீ­ரியா, தட்­டம்மை போன்ற நோய்­க­ளுக்கு மட்­டுமே கட்­டா­ய­மாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டிய நிலை உள்­ளது என்­றார் ஆசிய-பசி­ஃபிக் கிரு­மித்­தொற்று சங்­கத்­தின் தலை­வ­ரும் மற்­றோர் தொற்­று­நோய் நிபு­ண­ரு­மான பேரா­சி­ரி­யர் பால் தம்­பையா.

விருப்ப அடிப்­ப­டை­யில் பிள்­ளை­க­ளுக்குப் போடப்­படும் பிசிஜி, ஹெப்­ப­ட­டை­டிஸ் நோய் எதிர்ப்பு தடுப்­பூசியைப் போட்­டுக்ெ­காள்­வது 100 விழுக்­காட்டை எட்­டி­யுள்­ளது என்­பதைச் சுட்­டிய பேரா­சி­ரி­யர் பால் தம்­பையா, கொரோனா ெகாள்­ளை­நோய்க்கு எதி­ரான தடுப்­பூசி பாது­காப்­பா­னது, நோய் தடுப்பு ஆற்­றல் கொண்­டது என்று காலப்­போக்­கில் மக்­க­ளுக்கு தெரி­ய­வ­ரும்­போது, மேற்­சொன்ன தடுப்­பூசி மருந்­து­க­ளைப் போலவே மக்­கள் போட்­டுக்­கொள்­ளும் நிலை ஏற்­ப­ட­லாம் என்று விளக்­கி­னார்.

சிங்­கப்­பூர் குடி­யி­ருப்­பா­ளர்­களில் பாதிப் பேருக்கு ஆகஸ்ட் மாதத்­துக்­குள் தடுப்­பூசி போடு­வது என்றும், அக்­டோ­பர் மாதத்­துக்­குள் 75 விழுக்­காட்­டி­ன­ருக்கு போடு­வது என்­றும் திட்­ட­மிட்­டி­ருந்­தது. தடுப்­பூசி மருந்து முன்­கூட்­டியே வந்­துள்ள நிலை­யில், தேசிய தினத்­துக்­குள் மூன்­றில் இரண்டு பங்கு மக்­க­ளுக்கு தடுப்­பூசி போட்­டு­விட அர­சாங்­கம் முடி­வெ­டுத்­துள்­ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்வோரின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க முயற்சி மேற்­கொள்­ளப்­படும் அதே­வே­ளை­யில், இதற்கு மக்­கள் எதனால் எதிர்ப்­புத் தெரி­விக்­கி­றார்­கள் என்­பதை­யும் கருத்தில் கொண்டு அவர்­களின் அச்­சத்தைப் போக்க வேண் டும் என்றார் சிங்கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழக சமூ­க­வி­ய­லா­ளர் பேரா­சி­ரி­யர் போலின் ஸ்டி­ரோ­கன்.

சினோ­வேக் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­காக மக்­கள் நீண்­ட­வ­ரி­சை­யில் காத்­தி­ருந்த காட்­சியை நினை­வு­கூ­ரும் இவர், தேசிய தடுப்பூசித் திட்­டத்­தின்­கீழ் போடப்­படும் ஃபைசர் யையோ­என்­டெக், மொடர்னா தடுப்­பூசி மருந்­து­கள் மீது சில­ருக்கு இன்­ன­மும் சந்­தே­கங்­கள் இருப்­பதையே இது காட்டு ­வ­தாகத் தெரி­வித்­தார்.

"இந்­தத் தடுப்­பூசி மருந்­து­கள் தயா­ரிப்பு தொடர்­பாக அவர்­க­ளுக்கு அச்­சம் இருக்­கிறது. சுருக்­க­மா­கச் சொல்­லப்­போ­னால், அவர்­கள் வேண்டு­மென்றே தடுப்­பூசி போட்டுக் ெகாள்­வ­தைத் தவிர்க்­க­வில்லை. அது­கு­றித்து அவர்­க­ளுக்கு உண்­மை­யி­லேயே கவலை உள்­ளது. அத­னால், நாம் அதைப் புரிந்­து­கொண்டு, காலப்­போக்­கில் அவர்­களை உள்­ள­டக்­கிச் செயல்­படும் நிலையை மேற்­கொள்ள வேண்­டும்," என்­றார் பேரா­சி­ரி­யர் போலின் ஸ்டி­ரோ­கன்.

தடுப்­பூசி போடா­த­வ­ருக்கு பாகு­பாடு

தடுப்­பூ­சி­யைத் தவிர்ப்­ப­வர்­கள் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டால் அவர்­க­ள் சுகா­தார கட்­ட­ண மானி­யத்­துக்குத் தகுதி பெறக்­கூடாது என்பது சிலர் கருத்து.

"தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது தொடர்­பாக தெரிந்து எடுக்­கும் முடிவுக்கு மக்­கள் பொறுப்­பேற்க வேண்­டும் என்­பதே எனது தனிப்­பட்ட கருத்து. தேசிய தடுப்­பூசி இயக்­கத்­துக்கு இணங்கி நடப்­ப­வர்­க­ளுக்கு இது நியா­ய­மாக இருக்­கும்," என்­றார் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக சமூ­க­வி­ய­லா­ளர் டாக்­டர் டான் எர்ன் செர்.

ஆனால் தடுப்­பூசி போட மறுப்­ப­வர்­கள், தொற்­று­நோ­யால் பாதிக்­கப்­படும் பட்­சத்­தில் தரம் குறைந்த அல்­லது அதிக கட்­டண சிகிச்­சைக்கு அவர்­கள் உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்­பது சாத்­தி­ய­மற்­றது என்­ப­தை­யும் நிபு­ணர்­கள் சுட்­டி­னர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­களை வேறு­விதமாக நடத்­து­வது பார­பட்­ச­மா­னது என்று அவர்­கள் எச்­ச­ரித்­த­னர்.

நடை­மு­றை­யில் இந்த வேறு­பாடு இருக்­கும் என தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தைச் சேர்ந்த டாக்­டர் வூ ஜுன் ஜீ கரு­த­வில்லை.

"பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக தடுப்­பூசி போட முடி­யா­த­வர்­கள் இருப்­பார்­கள் என்­ப­தைக் கருத்­தில்­கொள்­வது முக்­கி­யம். தடுப்­பூசி போடா­த­வர்­க­ளுக்­கும் போட்­ட­வர்­களுக்­கும் இடையே பெரிய மாறு­பா­டு­கள் இருக்­கும் என்று நான் நினைக்­க­வில்லை," என்­றார் அவர்.

கொரோனா கிருமி ஒரு குறிப்­பி­டத்­தக்க பொது சுகா­தார அச்­சு­றுத்­த­லாக இருக்­கும்­வ­ரை­யில், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உட­னடி மருத்­துவ உதவி கிடைப்­பதை உறுதி செய்­வது இன்­றி­ய­மை­யா­தது என்று பேரா­சி­ரி­யர் டான் கூறி­னார்.

சிங்­கப்­பூர் மருத்­துவ சங்­கத் தலை­வர் டான் யியா சுவாம், மருத்­து­வர்­களும் சுகா­தா­ரப் பணி­யா­ளர்­களும் தங்­கள் நிபு­ணத்­து­வப் பொறுப்­பு­க­ளைக் குறைத்­துக்­கொள்ள மாட்­டார்­கள் என்று நம்­பிக்கை தெரிவித்­தார்.

தடுப்­பூ­சிக்கு ஆகும் செலவு

ஒவ்­வொரு தடுப்­பூ­சிக்­கும் கிட்­டத்­தட்ட சரா­ச­ரி­யாக $100 வரை செல­வா­கிறது என்று அமைச்­சு­கள் நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ராக இருக்­கும் வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் மே 11ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். தடுப்­பூசி மையங்­களை அமைத்­தல், சுகா­தார நிபு­ணர்­களை அணி­தி­ரட்­டு­தல் போன்­றவை செல­வின் குறிப்­பி­டத்­தக்க பகு­தி­யாக உள்­ளது. இது­வ­ரை­, அனைத்து தடுப்­பூ­சி­க­ளுக்­கு­மான செலவு $250 மில்­லி­ய­னுக்கு குறை­யாது என்­றார் அமைச்­சர் கான்.

நீண்ட காலத்­திற்கு இல­வசத் தடுப்­பூ­சி­கள், கொரோனா நோயா­ளி­க­ளுக்கு சுகா­தா­ரப் பாரா­ம­ரிப்பு என்­பதில் பொது வளங்­களை அணி­திரட்ட வேண்­டிய அவ­சி­யம் உள்­ளதால், சிங்­கப்­பூ­ரர்­கள் அதிக வரி செலுத்த வேண்­டி­யி­ருக்­கும் என்று பேரா­சி­ரி­யர் ஓய் கூறி­னார்.

ஆனால், தடுப்­பூ­சிக்குப் பொது­மக்­க­ளி­டம் கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­பட வேண்­டும் என்­றால், தடுப்­பூசி போடு­வ­தற்கு கட்­ட­ணம் தடை­யாக இருக்­காது என்­பதை உறு­திப்­ப­டுத்த ஓர­ளவு மானி­யம் தேவைப்­படும் என்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

எனி­னும் பொது­மக்­கள் செலுத்த வேண்­டி­யி­ருக்­கும் எந்­த­வி­த­மான கட்­ட­ண­மும் அத்­தனை விரை­வில் நடப்­புக்கு வராது என்று நிபு­ணர்­கள் கரு­து­கின்­ற­னர்.

உயர்­நிலை 2ல் பயி­லும் மாணவி­களுக்கு மனித 'பாப்­பி­லோமா' கிரு­மிக்­கான தடுப்­பூ­சிக்கு நடை­மு­றை­யில் இருப்­பதுபோல, தடுப்­பூ­சி­களை விநி­யோ­கிப்­ப­வர்­க­ளுக்­கான சிறிய நிர்­வா­கக் கட்­ட­ணங்­கள் பொது­மக்­க­ளுக்கு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று பேரா­சி­ரி­யர் தம்­பியா கூறி­னார்.

"சிங்­கப்­பூ­ரில், ஏதா­வது இல­வ­ச­மாக வழங்­கப்­பட்­டால், பின்­னர் அதற்கு கட்­ட­ணம் வசூ­லிப்­பது சிரமம்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

"தடுப்­பூ­சி­கள் இல­வ­ச­மாக இருக்­ க­லாம், ஆனால் தடுப்­பூசி மையங்­கள் மூடப்­பட்­ட­தும், இறு­தி­யில் தடுப்­பூ­சி­களை நிர்­வ­கிக்­கும் பல­துறை மருந்­த­கங்­களும் தனி­யார் மருந்­த­கங்­களும் நிர்­வா­கக் கட்­ட­ணத்தை வசூ­லிக்க அனு­ம­திக்­கப்­படும்," என்­றார் பேரா­சி­ரி­யர் தம்­பையா.

கடந்த ஆண்டு கொள்­ளை­நோய் பர­வ­லால் உல­கம் முடங்­கி­ய­போது, அந்­நோ­யைத் துடைத்து ஒழிப்­ப­தற்­கான தடுப்­பூ­சியை அதி வேகத்­தில் தயா­ரிக்க வேண்­டிய நெருக்­கு­த­லுக்கு உல­க­ளா­விய மருந்­து­நி­று­வ­னங்­கள் உள்­ளா­கின. தற்­போது ஒட்­டுமொத்த உலக மக்­க­ளுக்­கும் பெரு­ம­ள­வில் தடுப்­பூசி தயா­ரிக்­கும் கட்டாயத்தை எதிர்­நோக்­கு­ம் இவை அதற்கான முயற்சிகளில் முனைப்புக் காட்டுகின்றன.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சில்

ஹரிஸ் பஹாருடின் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.