தமிழர்கள் மணம் செய்து, பிள்ளைகள் பெற வேண்டும்; அரசியலுக்கு வர வேண்டும்

2 mins read

சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் தமிழர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்து வரு­வது பற்­றிய தமிழ் முர­சின் கேள்­விக்கு, எண்­ணிக்கை குறை­யா­மல் இருக்க தமி­ழர்­கள் திரு­மணம் செய்­து­கொள்ள வேண்டும், நிறைய பிள்­ளை­கள் பெற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று பதி­ல­ளித்­தார் பிரதமர் அலு வலகத்தில் தேசிய மக்கள் தொகை, திறனாளர்் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் இந்திராணி ராஜா.

சிங்­கப்­பூ­ரில் பிறப்­பு­ வி­கி­தம் குறை­கிறது. வேலை முன்­னேற்­றம் முக்­கி­ய­மாக இருப்­ப­தால் திரு­மணங்­கள் தாம­த­மா­கின்­றன அல்­லது தனித்து வாழ முடிவு செய்­கி­றார்­கள். இது எல்லா இன மக்­க­ளும் எதிர்­கொள்­ளும் பிரச்­சினை. மக்கள் தொகை­யைப் பெருக்க வெளி­நாட்­டி­னரை வர­வேற்­கி­றோம்.

மற்ற சமூ­கங்­க­ளைப் போலவே இந்­திய சமூ­க­மும் மக்கள் தொகை வளர்ச்சியால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் மக்கள் தொகை வளர்ச்சி 1.1 ஆகி­யுள்­ளது.

தமிழ்ச் சமூ­கம் வலு­வான சமூ­க­மாக வளர தேசிய திறன் வளர்ச்சி­யும் மேம்­பா­டும் முக்­கி­யம் என்றார் அமைச்சர். திறன் மேம்­பாடு, வளர்ச்சி, திறன் மாற்­றுப் பயிற்­சி­கள் போன்­ற­வற்­றுக்கு அர­சாங்­கம் பல்­வேறு உத­வித் திட்­டங்­களை வழங்­கு­வதை­யும் அவர் சுட்டினார்.

ஆர்வம் உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்

அரசியலில் இந்­தி­யர்­கள் எண்­ணிக்கை குறை­வாக இருப்­பது பற்­றிக் கேட்­ட­தற்கு, இந்­தி­யர்­கள் அர­சி­ய­லில் ஆர்­வம் காட்ட வேண்­டும், தகு­தி­யுள்­ள­வர்­கள் பங்­காற்ற முன்­வ­ர­வேண்­டும். உண்­மை­யி­லேயே பார்க்­கப்­போ­னால், சிங்­கப்­பூ­ரில் இளம் இந்­தி­யத் தலை­வர்­கள் பலர் இருக்­கின்­ற­னர் என்­றார் அவர்.

"ஆனால், இள­கிய மன­து­டை­ய­வர்­கள் அர­சி­ய­லில் நுழை­வ­தைப் பற்றி சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

"நான் அர­சி­ய­லுக்கு வந்­த­ நேரத்­தில் அதி­க­மான பெண்­கள் அர­சி­ய­லில் இல்லை. கொள்கை வகுப்­ப­தில் பெண்­களின் கருத்­தும் குர­லும் இடம்­பெற வேண்­டும் என்று நினைத்­தேன். என்­னால் ஒரு மாற்­றத்­தைக் கொண்டு வர­மு­டி­யும் என்று நம்­பி­னேன். மேலும், இந்த சமூ­கத்­தால் நான் பல­ன­டைந்­துள்­ளேன் என்­பதை நான் திட­மாக நம்­பு­வ­தால் ஏதா­வது ஒரு வழி­யில் திருப்­பிக் கொடுக்க வேண்­டும் என்று நினைத்­ தேன். அத­னால் ஹோ பெங் கீ அழைத்­த­போது, நான் மன­மு­வந்து அர­சி­ய­லுக்கு வந்­தேன்.

"அர­சி­ய­லில் ஈடுபடும் எண்­ணம் கொண்­டோ­ருக்கு அர­சி­யல் குறித்த வலு­வான கண்­ணோட்­ட­மும் மிகுந்த ஆர்­வமும் வேண்­டும். ­அ­ர­சி­ய­லில் வர விரும்­பு­வோ­ருக்கு உறு­தி­யான நிலைப்­பா­டும் முக்­கி­யம். சரி­யான பண்­பு­நெ­றி­கள் இருக்க வேண்­டும். அத்­து­டன், மாற்­றத்தை உரு­வாக்கி இருப்­பதை மேலும் சிறப்­பாக்­கும் சிந்­த­னை­யுடன் செயல்­படும் ஆர்­வம் இருக்க வேண்­டும்," என்றார் அமைச்சர் இந்திராணி ராஜா.