தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரவேற்பும் எதிர்பார்ப்பும்

9 mins read
324e13c9-8e68-41b0-962f-15736c1690d8
படிப்படியான சம்பள உயர்வு முறை அடுத்த ஆண்டு சில்லறை விற்பனைத் துறைக்கும் பின்னர் உணவு சேவைகள், கழிவு மேலாண்மைத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை அறிவிப்புகள்

வெளிநாட்டவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களில் சிங்கப்பூரர்களுக்கு குறைந்தபட்சமாக $1,400 மாத ஊதியம், படிப்படியான சம்பள உயர்வு முறை விரிவாக்கம், வேலையிடப் பாகுபாட்டை ஒழிக்க முத்தரப்புக் கூட்டணியின் வழிகாட்டுதல்களைச் சட்டமாக்குதல், எஸ்-பாஸ், எம்பிளாய்மண்ட் பாஸ் தகுதிவிதிகளைக் கடுமையாக்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளைப் பிரதமர் லீ சியன் லூங் அண்மையில் தமது தேசிய தினப் பேரணி உரையின்போது வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, அவர்களின் கருத்துகளை அறிந்து வந்தது தமிழ் முரசு.

இர்ஷாத் முஹம்மது

எஸ்.வெங்கடேஷ்வரன்

கி.ஜனார்த்தனன்

கொவிட்-19 பர­வ­லால் கடந்த ஆண்டு இடம்­பெ­றாத நிலை­யி­லும் அந்­தப் பெருந்­தொற்­று­டன் வாழப் பழ­கிக்­கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு வரும் நிலை­யி­லும் இவ்­வாண்டு பிர­த­ம­ரின் தேசிய தினப் பேரணி உரை முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

குறிப்­பாக, கொரோனா தொற்­றுச் சூழ­லில் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டு­வ­ரும் தொழில்­து­றை­யி­ன­ரும் வணி­கர்­களும் பிர­த­ம­ரின் உரையை ஆவ­லு­டன் எதிர்­பார்த்து இருந்தனர்.

இத்­த­கைய சூழ­லில், நாட்டில் புதிய வளர்ச்சி, வேலை­கள், செழிப்பை உரு­வாக்­கு­வ­தில் கவ­னம் செலுத்­தப்­படும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் அறி­வித்­தார்.

குறைந்த வரு­மான ஊழி­யர்­களின் ஊதி­யத்­தைப் படிப்­ப­டி­யாக உயர்த்­து­வ­தற்­கான திட்­டங்­களை அவர் அறி­வித்­தார். அதன்­படி, வெளி­நாட்­ட­வர்­களை வேலைக்கு வைத்­தி­ருக்­கும் நிறு­வ­னங்­களில் வேலை­செய்­யும் உள்­ளூர் ஊழி­யர்­களுக்­குக் குறைந்­த­பட்ச மாத ஊதி­ய­மாக $1,400 வழங்­கு­வது கட்­டா­ய­மாக்­கப்­படும் என்று அவர் அறி­வித்­தார்.

அடுத்த ஆண்டு சில்­லறை விற்­பனைத் துறை­யி­லும் அதன்­பின் உணவு சேவை­கள், கழிவு மேலாண்­மைத் துறை­க­ளி­லும் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வுள்­ளது.

வேலை அனு­ம­திச்­சீட்­டில் இருக்­கும் வெளி­நாட்­ட­வர்­கள் தங்­க­ளது வாய்ப்­பு­க­ளைப் பறிப்­ப­தாக சிங்­கப்­பூ­ரர்­கள் இடையே அமை­தி­யற்ற நிலை நிலவி வரு­வதை அடுத்து, எஸ்-பாஸ், எம்பிளாய்மண்ட் பாஸ் தகுதிவிதிகள் காலப்போக்கில் கடுமையாக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

வேலை­யி­டப் பாகு­பாட்­டைக் களைய, நியா­ய­மான வேலை நடை­மு­றை­க­ளுக்­கான முத்­த­ரப்பு வழி­காட்­டு­தல்­கள் (டஃபெப்) சட்­ட­மாக்­கப்­படும் என்­றும் அவ்விவ­கா­ரங்­களைக் கையாள்­வ­தற்­கென ஒரு தீர்ப்­பா­யம் உரு­வாக்­கப்­படும் என்­றும் திரு லீ அறி­வித்­தார்.

இதை­ய­டுத்து, சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வேலையை, வரு­மா­னத்தை, வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்தி, அவர்­களது பாது­காப்பை உறு­தி­செய்­வதில் அர­சாங்­கம் வகுக்­கும் கொள்­கை­க­ளை­யும் திட்­டங்­க­ளை­யும் பல­த­ரப்­பி­ன­ரும் வர­வேற்­றுள்­ள­னர்.

'குறைந்தபட்ச வருமானத்தை உறுதிப்படுத்தும் அறிவிப்பு'

உள்­ளூர் ஊழி­யர்­களுக்கு மாதந்­தோ­றும் குறைந்­த­பட்ச தகுதி ஊதி­ய­மாக $1,400 வழங்­கப்­பட வேண்­டும் என்ற அறி­விப்பு, எந்த வேலை செய்­தா­லும் உள்­ளூர் ஊழி­யர்­கள் அனை­வர்க்­கும் வரு­மா­ன­மாக ஒரு குறைந்­த­பட்­சத் தொகை கிடைக்­கும் என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் என்று சிங்­கப்­பூர் வர்த்­தக, தொழிற்­ச­பை­யின் (சிக்கி) தலை­வர் டி.சந்­துரு தெரி­வித்­துள்­ளார்.

அது­போல, காலிப் பணி­யி­டங்­களை நிரப்ப வெளி­நாட்­ட­வர்­க­ளைத் தேர்வு செய்­யு­முன், தகு­தி­யுள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் அந்த வேலை­க­ளுக்­குச் சம­மா­க­வும் நியா­ய­மா­க­வும் பரி­சீ­லிக்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த புதிய வேலை­வாய்ப்­புத் தீர்ப்­பா­ய­மும் சட்­ட­மும் உத­வும் என்று 'சிக்கி' கரு­து­வ­தாக அவர் சொன்­னார்.

"அந்­ந­டை­மு­றை­க­ளைத் தழு­வும்­போது, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் இருந்து தேர்ச்­சி­க­ளை­யும் நிபு­ணத்­து­வத்­தை­யும் உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்கு மாற்ற வேண்­டிய கட்­டா­யம் நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­படும். அதன்­மூ­லம் வலு­வான சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யும் உரு­வாக்­கப்­படும்.

"சிங்­கப்­பூ­ரின் நெறி­மு­றை­களுக்கு இணங்­கும்­ப­டி­யான மனித­வளக் கொள்­கை­க­ளைக் கட்­ட­மைக்க நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வும் வகை­யில் பயி­ல­ரங்­கு­களை நடத்­திட, தொழிற்­ச­பை­க­ளுக்­கும் வர்த்­தகச் சங்­கங்­க­ளுக்­கும் அர­சாங்­கம் ஆத­ர­வ­ளிக்­கும் என்று நம்­பு­கி­றோம்.

"மனி­த­வ­ளத் தணிக்­கைக்கு முன்­வ­ரும் நிறு­வ­னங்­க­ளுக்கு வரிச்­ச­லுகை அளிப்­பது பயன்தர­லாம். மிக முக்­கி­ய­மாக, நிறு­வ­னங்­கள் வேலை­வாய்ப்பு உன்­ன­தத்தை நோக்­கிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வும் தங்­க­ளது வேலை­வாய்ப்பு நடை­மு­றை­களை மறு­வ­டி­வ­மைக்­க­வும் ஊக்­கு­விக்­கப்­பட வேண்­டும்," என்­றார் டாக்டர் சந்­துரு.

அதே நேரத்­தில், வேலை­யி­டப் பாகு­பாட்­டுச் சட்­டத்தை ஒரு பீடத்­தின்­மீது வைத்­து­வி­டா­மல் நாம் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

"வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுப்­ப­தற்­கான விதி­மு­றை­களும் கடு­மை­யாக்­கப்­ப­ட­வுள்­ளன. இது, சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் பன்­னாட்டு நிறு­வ­னங்­கள்­மீது தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். இத­னால், குறிப்­பிட்ட சில துறை­க­ளி­லும் நிறு­வ­னங்­க­ளி­லும் ஊழி­யர் செலவு அதி­க­ரிக்­க­லாம். அவை வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சில­ரைச் சொந்த ஊருக்­குத் திருப்­பி­ய­னுப்பி, அவர்­களது வேலை­களை சிறிய அள­வி­லான உள்­ளூர்க் குழு­வி­டம் மாற்ற நேரி­ட­லாம்," என்றும் டாக்டர் சந்துரு சொன்னார்.

இத­னி­டையே, வேலை­யி­டத்­தில் இனப் பாகு­பாட்­டைக் களைய அர­சாங்­கம் எடுக்­கும் முயற்­சியை வர­வேற்­ப­தா­கக் கூறி­னார் ஓய்வு பெற்ற கணக்­கி­யல் துறை ஊழி­ய­ரான திரு­வாட்டி தேன்­மொழி சங்­கர், 56.

'தகு­திக்­கேற்ற ஊதி­யம்'

ஊழி­யர்­க­ளின் தகு­திக்­கேற்ற ஊதி­யம் வழங்­கப்­பட வேண்­டும் என்­பதில் தாங்­கள் நம்­பிக்கை கொண்­டுள்­ள­தா­க­வும் அத­னால் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை நடப்­பிற்கு வரும் முன்­னரே நாங்­கள் அதைப் பின்­பற்­றத் தொடங்­கி­விட்­ட­தா­க­வும் கூறி­னார் 'கிளீ­னிங் எக்ஸ்­பி­ரஸ்' நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி அப்­துல் அஜீஸ் யூசோஃப்.

"துப்­பு­ரவு, நில­வ­னப்­புத் துறை­களில் உள்ள எங்­கள் ஊழி­யர்­கள் சம்­பள உயர்­வா­லும் திறன் பயிற்சி­யா­லும் பயன்­பெற்­றுள்­ள­னர். எங்­கள் ஊழி­யர்­கள் மிகுந்த பயிற்சி பெறும்­போது, குறிப்­பாக பாது­காப்பு போன்ற அம்­சங்­களில் பயிற்சி பெறும்­போது, எங்­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­களும் மேம்­பட்ட சேவை­யைப் பெற முடி­கிறது; உற்­பத்­தித்­தி­ற­னும் கூடு­கிறது," என்­றார் திரு அப்­துல்.

இத­னால், உரிய பங்­கா­ளி­கள், தொழில்­துறை என இரு­த­ரப்­பி­ன­ருமே பய­ன­டை­கின்­ற­னர் என்­றும் மற்ற துறை­க­ளுக்­கும் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை விரி­வு­ப­டுத்­தப்­பட இருப்­பது நேர்­ம­றை­யான, தெளி­வான நட­வ­டிக்கை என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"முத­லா­ளி­க­ளாக, சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யின் நலன் சார்ந்து எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு நாங்­கள் முழு ஆத­ரவு அளிக்­கி­றோம். தொழில் நடை­மு­றை­க­ளுக்கு வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் ஆத­ரவு அவ­சி­யம் என்­பதை ஏற்­றுக்­கொள்­ளும் அதே வேளை­யில், உள்­ளூர் ஊழி­யர்­களை ஈர்ப்­ப­தற்­கான வழி­க­ளை­யும் ஆராய்ந்து வரு­கி­றோம்.

"சரியான ஆள்களை வேலையில் சேர்த்தல், சரியான ஊதியத்தை வழங்குதல் என்பன போன்ற சரியான செயல்களைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று என்னைப் போன்ற முதலாளிகளைப் பிரதமர் ஊக்குவித்துள்ளார்," என்று திரு அப்துல் கூறினார்.

புதிய படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முத்­திரை, தொழில் நிறு­வனங்­க­ளுக்கு மிகுந்த ஊக்­கத்தை அளித்து, முற்­போக்­குச் சிந்­த­னை­யு­டன் கூடிய நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றும்­படி வலி­யு­றுத்­தும் என்­றும் அவர் சொன்னார்.

'சரி­யான நோக்­கம்,

சரி­யான கொள்கை'

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை­யின் நோக்­கம் சரி­யா­னது என்­பதாலும் அது சரி­யான கொள்கை என்பதாலும் தாம் அதனை வர­வேற்­பதாகச் சொன்­னார் 'ஸ்ரீ விநா­யகா எக்ஸ்­போர்ட்ஸ்' நிர்­வாக இயக்­கு­நர் ஜோதி மாணிக்­க­வா­ச­கம்.

அந்த முறை, பண­வீக்­கத்­தின் தாக்­கத்­தைச் சரிக்­கட்டி, ஊழி­யர்­களின் சம்­ப­ளம் கூடு­வ­தற்கு உதவு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

மெத்­த­ன­மாக இராது, திறனை வளர்த்து, தங்­களை மேம்­ப­டுத்­திக்­கொண்­டால் மேலும் சம்­பள உயர்வு பெற­லாம் என்ற உந்­து­த­லை­யும் அது ஊழி­யர்­க­ளுக்கு அளிப்பதாக இருக்கும் என்று திரு ஜோதி மாணிக்­க­வா­ச­கம் குறிப்பிட்டார்.

அத்­து­டன், "வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைப் பணி­யில் அமர்த்­தும் நிறு­வ­னங்­கள், உள்­ளூர் ஊழி­யர்­களுக்­குக் குறைந்­த­பட்ச சம்­ப­ள­மாக $1,400 வழங்­கு­வ­தைக் கட்­டா­ய­மாக்கு­வது சரி­யா­னது என்றே சொல்­வேன். அத்­த­கைய நிலை­யில்­தான் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு முன்­னு­ரிமை என்ற கொள்­கையை நிறு­வனங்­கள் சரி­வ­ரப் பின்­பற்ற முடி­யும்," என்­றும் அவர் சொன்­னார்.

'எஸ்-பாஸ் குறைப்பால் பாதிப்பு'

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைச் சார்ந்­தி­ருக்­கும் போக்கு குறை­ய­வேண்­டும் என்­பதை நோக்­க­மா­கக் கொண்டு கொள்கை அள­வில் மாற்­றங்­கள் அறி­விக்­கப்­பட்­டதை வர­வேற்­ப­தா­கக் கூறி­னார் சிறிய நிறு­வ­ன­மொன்­றின் உரி­மை­யா­ள­ரான திரு வி.ரம­ணன், 48.

"எம்­பி­ளாய்­மண்ட் பாஸ் அனு­மதி அட்டை வழங்­கப்­ப­டு­வ­தைக் குறைப்­பது பற்­றித்­தான் அர­சாங்­கம் சிந்­திக்­க­ வேண்­டும். எஸ்-பாஸ் எண்­ணிக்­கை­யைக் குறைக்க முயற்சி செய்­வது உள்­ளூர் வர்த்­த­கங்­க­ளுக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும். எஸ்-பாஸ் அட்­டை­யில் வேலைக்கு அமர்த்­து­வ­தற்கு, அந்த வேலை­களை சிங்­கப்­பூ­ரர்­கள் செய்­யத் தயங்­கு­வதே கார­ணம்," என்­றார் அவர்.

திறன், வேலைத் தகுதி சார்ந்து­தான் வெளி­நாட்டு ஊழி­யர் தேவையை நாம் அள­விட வேண்­டும் என்ற திரு ரம­ணன், சிங்­கப்­பூ­ரர்­கள் ஆர்­வம் காட்­டாத வேலை­களுக்கு வெளி­நாட்டு ஊழி­யர்­களைத் தேர்வு செய்­யும் வசதி இருக்­க­லாம் என்­றும் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் நலன் சார்ந்து எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­களை முழு­ம­னத்­து­டன் வர­வேற்­கும் அதே வேளை­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுப்­ப­தில் கடு­மை­யாக்­கப்­ப­ட­வுள்ள கட்­டுப்­பா­டு­களை எண்ணி நிறு­வ­னங்­கள் கவ­லை­கொள்­வதை மறுப்­ப­தற்­கில்லை.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றியபின், சென்ற ஆறு மாதங்களாக 'சென்னை டிரேடிங்' நிறுவனத்தில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறேன். இப்போது எனக்கு மூன்றாம் நிலை ஒட்டுநர் உரிமம் உள்ளது. நான்காம் நிலை ஓட்டுநர் உரிமம் எடுத்தால் இன்னும் பெரிய லாரிகளை என்னால் ஓட்ட முடியும். எனக்கு எப்போதுமே முறையாக ஆங்கிலம் கற்றுகொள்ள வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. படிப்படியான சம்பள உயர்வுத் திட்டத்தின்மூலம் இந்த ஆசைகளை என்னால் நிறைவேற்ற முடிந்தால் சிறப்பாக இருக்கும்.

- கே.சுகுமாரன், 59, லாரி ஓட்டுநர்

செயல்முறைகளை மின்னலக்கமயமாக்கவும் எளிமைப்படுத்தவும் உதவும் பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படும் என்று நம்புகிறேன். விளம்பரச் சுவரொட்டிகளைத் தயாரிப்பது, தரவுகளைச் சேகரிப்பது, இருமொழித்திறன் போன்ற பலவகையான திறன்கள் ஊழியர்களுக்கு கிடைத்தால் அது நிர்வாகத்திற்கு உதவும்.

- அருணாச்சலம் அழகு, 57,

ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயத்தின் நிர்வாக மேலாளர்,

அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச தகுதி ஊதியத்தை அதிகரித்தது வரவேற்கத் தக்கது. எங்கள் கடையில் குறைந்தபட்சமாக $1,800 சம்பளம் வழங்குகிறோம். நாள்தோறும் கிட்டத்தட்ட 10 மணி நேரம் துடிப்புடன் வேலை செய்யவேண்டியிருப்பதால் சம்பளமும் அதற்கு இணையாக இருக்கவேண்டும். மொழித்திறன், கணினி அறிவு, விற்பனை ஆற்றல் போன்ற திறன்களைப் படிப்படியான சம்பள உயர்வுத் திட்டத்தின்மூலம் ஊழியர்கள் பெற முடிந்தால் நம் தொழிலுக்கு அது பேரளவில் பயனளிக்கும்.

- 'மஹிஷா கலெக் ஷன்ஸ்' கடை­ உரி­மை­யா­ளர்

முருகை­யன் இளங்கோ, 48

வெளிநாட்டு ஊழியர்களைப் பெரிதும் சார்ந்திருக்கும் லிட்டில் இந்தியா கடைகள்

ஊழியரின் திறனை மேம்­ப­டுத்­து­வது நிச்­ச­ய­மாக நல்ல விஷ­யம். அது, தனிப்­பட்ட ஊழி­யர்க்­கும் அவ­ரது நிறு­வ­னத்­திற்­கும் பயன்­தரும். கூடு­தல் திறன்­பெற்ற ஊழி­யர்­கள், தங்­கள் நிறு­வ­னத்­திற்­காக பல பணி­க­ளை­யும் செய்ய வாய்ப்பு உள்­ளது என்­கி­றார் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கத்­தின் (லிஷா) மக­ளிர் பிரி­வுத் தலைவி ஜாய்ஸ் கிங்ஸ்லி (படம்).

அதனால், நிறு­வ­னங்­கள் குறைந்த எண்­ணிக்­கை­யி­லான ஊழி­யர்­க­ளு­டன் செயல்­பட முடி­யும். திறனை மேம்­ப­டுத்­திக்­கொண்டவர்களால் கூடு­தல் அல்­லது நிபு­ணத்­துவ வேலை­யைச் செய்ய முடி­யும் என்­ப­தால் ஊழி­யர்­கள் அதிக ஊதி­யம் பெறும் வாய்ப்­பும் அதி­க­ரிக்­கும் என்பது இவரது கருத்து.

"இருப்­பி­னும், பொது­வா­கவே லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் மனித­வ­ளப் பற்­றாக்­குறை நில­வு­கிறது. அத­னால், ஊழி­யர்­கள் பயிற்சி வகுப்­பு­க­ளுக்­குச் செல்­லும் வேளை­யில் கடை­களை நிர்­வ­கிக்க முத­லா­ளி­கள் சிர­மப்­பட வேண்­டி­யி­ருக்­க­லாம்.

"லிட்­டில் இந்­தி­யா­வில் சில்­லறை வணி­கர்­களின் செயல்­பாட்டு முறை சற்றே வேறு­பட்­டது.

"இங்கு சிங்­கப்­பூ­ரர்­களை வேலைக்கு ஈர்ப்­பது பொது­வா­கவே சிர­ம­மாக இருக்­கிறது. அத­னால், லிட்­டில் இந்­தியா கடை­கள் பெரும்­பா­லும் எஸ்-பாஸ், எம்­பி­ளாய்­மண்ட் பாஸ் ஊழி­யர்­க­ளைச் சார்ந்­துள்­ளன.

"சிங்­கப்­பூ­ரர்­கள் எழு­வரை வேலைக்கு வைத்­தி­ருந்­தால் மட்­டுமே ஒரு எஸ்-பாஸ் ஊழி­யரை வைத்­தி­ருக்­க­லாம் என்று இருந்­த­போதே நாங்­கள் சிர­மப்­பட்­டோம்.

"இந்­நி­லை­யில், இவ்­வாண்டு ஜன­வரி முதல் அந்த ­வி­கி­தம் 9:1 என்­றா­கி­விட்­டது. இப்­போது, உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்­குக் குறைந்­த­பட்ச மாத ஊதி­ய­மாக $1,400 அறி­விக்­கப்­பட்­டது.

"அதிக வாடகை, மேற்­செ­ல­வு­கள் கார­ண­மாக சிறிய சில்­லறை விற்­ப­னைக் கடை­கள் மனி­த­வ­ளப் பற்­றாக்­கு­றை­யு­டன் சமா­ளிக்க வேண்­டி­யி­ருக்­க­லாம். தொழிலை விரி­வு­ப­டுத்­து­வது என்ற எண்­ணத்­தை­யும் நிறுத்­தி­வைக்­கும் நிலை ஏற்­ப­ட­லாம்.

"கொவிட்-19 தொற்­று, கடை முத­லா­ளி­க­ளின் கையி­ருப்­பைக் கரைத்து வரு­கிறது. சம்­ப­ளம், தீர்வை, வாட­கைக் கழிவு போன்ற வழி­களில் அர­சாங்­கம் தனது பங்கை ஆற்றி, கைகொ­டுத்து வரு­வதை மெச்­சு­கி­றோம்," என்றார் திருவாட்டி ஜாய்ஸ்.

சில்­லறை விற்­ப­னைக் கடைக்­கா­ரர்­கள் ஏற்­கெ­னவே சிர­மங்­களை எதிர்­கொண்டு வரும் நிலை­யில், ஊழி­யர்­க­ளுக்­கான தகுதி விதி­மு­றை­களில் சற்று மென்­மை­யான அணு­கு­முறையைக் கடைப்பிடிப்பது அல்­லது ஒட்­டு­மொத்த வேலை அனு­மதி அட்டை முறை­யை­யும் திருத்தி அமைப்­பது, லிட்­டில் இந்­தி­யா வட்டாரத்தில் இருப்­பது போன்ற வணி­கங்­கள் தாக்­குப்­பிடிக்க பேரு­த­வி­யாய் இருக்­கும் என்பது இவரது வேண்டுகோளாக இருக்கிறது.

'வேலையிடப் பாகுபாடு குறித்து துணிந்து புகாரளிக்க வேண்டும்'

சிறு­பான்­மை­யி­னர் எதிர்­நோக்­கும் வேலை­யி­டப் பாகு­பாட்டை ஒழிப்­பது மிகக் கடி­னம். என்­றா­லும், அச்­ச­மின்றி வேலை­யிட முரண்­பா­டு­கள் குறித்­துப் புகார் செய்­யும் துணிச்­சல் ஊழி­யர்­களுக்­குத் தேவை என்­கி­றார் முன்­னாள் தேசி­யத் தொழிற்­சங்­கக் காங்­கி­ரஸ் துணைத் தலை­வ­ரும் 'யுனை­டெட் வொர்க்­கர்ஸ் ஆஃப் பெட்­ரோ­லி­யம் இண்­டஸ்ட்ரி' நிர்­வா­கச் செய­லா­ள­ரு­மான கார்த்தி­கே­யன் கிருஷ்­ண­மூர்த்தி, 62.

"நியா­ய­மான வேலை­வாய்ப்பு நடை­மு­றை­ளுக்­கான முத்­த­ரப்பு வழி­காட்­டு­தல்­கள் (டஃபெப்) முதன்­மு­த­லில் ஊழி­யர்­க­ளுக்­கும் முத­லாளி­க­ளுக்­கும் ஆலோ­சனை வழங்கு­வ­தற்கு அமைக்­கப்­பட்­டது. நாள­டை­வில் ஊழி­யர்­க­ளின் சார்­பாக செய­லாற்ற முடிந்­தது.

"எடுத்­துக்­காட்­டாக, இனப் பாகு­பாட்­டு­டன் கூடிய வேலை விளம்­பரத்தை 'டஃபெப்' தடுக்க முடி­யும். அர­சாங்­கம் இந்த அமைப்பை மேலும் வலுப்­படுத்­து­வது வேலை­யி­டப் பாகு­பாட்­டைக் குறைப்பதில் பெரும்­ப­யன் அளிக்­கும்.

"அது­போக, உதவி தேவைப்­படும் ஊழி­யர்­கள், தொழிற்­சங்­கங்­கள், சர்ச்சை நிர்­வா­கத்­துக்­கான முத்­த­ரப்­புக் கூட்­டணி போன்ற மற்ற அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்­தும் உதவி நாட­லாம்," என்று திரு கார்த்­தி­கேயன் கூறினார்.