ஒருமுறை ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு தற்காலிகக் கடை (popup booth) ஒன்றை அமைத்து மருதாணி இடும் சேவையை வழங்க தயாராக இருந்த 22 வயது ஷரீன் பேகத்திற்கு (படம்) ஏமாற்றமே மிஞ்சியது. கடை திறந்து மூன்று நாட்களாகியும் வியாபாரம் நடக்கவில்லை.
இருப்பினும், இந்தத் தோல்வி அவரது வர்த்தகப் பயணத்திற்குப் பாடமாக அமைந்தது.
தற்போது மருதாணி கலை மட்டும் அல்ல அணிகலன்கள் குறிப்பாக, கையால் செய்யப்பட்ட தோடுகளைத் தயாரித்து இணையம் மூலம் விற்பனை செய்து வருகிறார் ஷரீன்.
தொடக்கப்பள்ளி காலத்திலிருந்தே தமது பாடப்புத்தகங்களில் பூக்கள் வரைந்து பழகிய இவர், இப்போது அழகிய மருதாணி வடிவமைப்புகளை மிக எளிமையாக இடும் ஆற்றல் கொண்டுள்ளார். சிங்கப்பூரில் பல மருதாணி கலைஞர்கள் இருந்தாலும், தனது மருதாணி வர்த்தகத்தைத் தனித்துவப்
படுத்த புதுமையை நாடியிருக்கிறார் இவர். 'ஜாகுவா ஜெல்' என்ற இயற்கை வகை கறுப்பு மையைப் பயன்படுத்தி மருதாணி வடிவங்களை வரைய துவங்கியிருக்கிறார் ஷரீன். கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக ஷரீனின் மருதாணியிடும் வர்த்தகம் பெருமளவு பாதிப்புக்குள்ளானது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு மருதாணி இட முடியாதநிலை ஏற்பட்டது. இதற்குப் புத்தாக்கச் சிந்தனையுடன் தீர்வு கண்டார் ஷரீன். மருதாணி வடி
வமைப்பு ஸ்டென்சில் விற்
பனையைத் தொடங்கினார். பெண்கள் வீட்டிலிருந்தவாறு இந்த ஸ்டென்சில்களைக் கொண்டு மருதாணி இட்டுக் கொள்ளலாம். மாற்றங்களுக்கு ஏற்ப தாமும் மாறிக்கொண்டு தமது வர்த்தகத்தில்
புதுமையைப் புகுத்துகிறார் ஷரீன்.