இணையம் மூலம் வைர வர்த்தகம்

2 mins read
0432bf08-bfdb-4073-ae0e-4e07fc44cf8d
திருமதி ரஞ்சனிஸ் ராஜேந்திரன். படம்: ரஞ்சனிஸ் ராஜேந்திரன் -

சிங்கப்பூரரான திருமதி ரஞ்சனிஸ் ராஜேந்திரன் மும்பையில் 10 ஆண்டுகள் வசித்தபோது அங்குள்ள பெண்கள் அணிந்திருந்த வைர நகைகள் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

சிறிய வைர நகைகள் பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்பதுடன் அவர்களுக்குத் தன்னம்பிக்கை தருவதை உணர்ந்ததாக திருமதி ரஞ்சனிஸ் தெரிவித்தார். இவரது தாத்தா திரு சீனிவாச பத்தர் 1900களில் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் நகைப் பத்தராக இருந்தவர்.

அவர் வழியிலேயே செல்ல ஆசைப்பட்ட திருமதி ரஞ்சனிஸ், கடந்த ஆண்டு இணையத்தில் 'dcubediamonds' என்ற வைர நகை வர்த்தகத்தை துவங்கினார்.

விலை உயர்ந்த வைர நகைகளை இணையத்தில் எப்படி வாடிக்கை யாளர்கள் நம்பி வாங்குகிறார்கள் என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டபோது, "சரா­ச­ரி­யாக ஒரு வாடிக்கையாள­ரு­டன் சுமார் நான்கு மணி நேரம் செல­வி­டு­

கி­றேன். அவ­ரு­டன் அமர்ந்து

நாங்­கள் விற்­கும் வைரங்­

க­ளைப் பற்­றிய தக­வல்­களை விவ­ரிப்­பேன். நகையை உடனே விற்­று­ விட வேண்­டும் என்­ப­தில் என் நோக்­கம் இருக்­காது. முத­லில் எனது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வைர நகை­க­ளைப் பற்றி சொல்­லிக் கொடுக்க வேண்­டும் என்­ப­து ­தான் எனது நோக்­கம்," என்­றார் அவர். இணைய வர்த்­த­கத்­தின் வழி கடைக்­கான வாடகை, ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம் போன்ற செலவு­ களைத் தவிர்க்க முடி­கிறது என்­றார் திருமதி ரஞ்சனிஸ்.

"நானும் ஒரு­நாள் வைர நகை வாங்­கு­வேன் என்று நினைத்துக்கூட பார்க்­க­வில்லை," என்று தமது வாடிக்கையாளர்கள் கூறும்­போது தமது வர்த்­த­கத்­தின் குறிக்கோளைப் படிப்படி­யாக அடை­வதை உணர்­வதாக அவர் தெரிவித்தார்.