வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைகளிலும் மத்திய வர்த்தக வட்டாரத்திலும் உடற்
குறையுள்ளோர் எளிதாக நடமாடத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்
படுகின்றன.
அதற்குத் தேவையான உள்
கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. உடற்குறையுள்ளோர் இலகுவாக நடமாட வகை செய்யும் கட்டமைப்பு எனும் புதிய திட்டத்தை தேசிய வளர்ச்சி அமைச்சர்
டெஸ்மண்ட் லீ நேற்று அறிவித்தார்.
பராமரிப்பாளர்கள் தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமான CaringSG. திட்டத்தின் அறிமுக விழாவில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது.
பொது இடங்களில் உடற்குறையுள்ளோர் எளிதாக, வசதியாக நடமாடுவதே இத்திட்டத்தின் இலக்கு. மத்திய வர்த்தக வட்டாரத்தில் நடமாடும்போது உடற்குறையுள்ளோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அடையாளம் காணப்படும்.
"மத்திய வர்த்தக வட்டாரத்தில் பலர் வேலைக்குச் செல்கின்றனர். ஆனால் அந்த வட்டாரத்தில் வேலை செய்யும், வேலை செய்ய விரும்பும் உடற்குறையுள்ளோர் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்ல சிரமப்படுகின்றனர்," என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.
உடற்குறையுள்ளோர் எளிதில் நடமாடத் தேவையான வசதிகளை அமைத்துத் தருவது குறித்து உடற்குறையுள்ளோர் சங்கம், உடற்
குறையுள்ளோர் நல்வாழ்வுச் சங்கம் ஆகியவற்றுடன் இதர சமூக அமைப்புகளிடமிருந்தும் உடற்
குறையுள்ளோரிடமும் கருத்து
சேகரிக்கப்படும்.
குடியிருப்பு வட்டாரங்களிலும் உடற்குறையுள்ளோருக்குத் தேவையான வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதலில் பூன் லே வட்டாரத்திலும் அதனைத் தொடர்ந்து நீ சூன் சென்ட்ரலிலும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைகளில் குடியிருப்பாளர்கள் எளிதில் நடமாடுகின்றனர் என்றபோதிலும் உடற்குறையுள்ளோருக்குக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார் அமைச்சர் லீ.
உடற்குறையுள்ளோர் நடமாட வசதியாக மாற்றங்களைச் செய்ய ஏறத்தாழ 150 கட்டடங்கள் கட்டட, கட்டுமான ஆணையத்தின் $40 மில்லியன் நிதியைப் பயன்படுத்திஇருப்பதாக திரு லீ தெரிவித்தார்.
இந்த நிதி 2007ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

