கொள்ளைநோய்க்குப் பிந்திய காலம் எப்படியிருக்கும் என்பது தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் பொருள் சேவை வரி உயர்வு குடும்பங்களின் சுமையை அதிகரிக்கலாம். இதன் காரணமாக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் குடும்பங்களின் சிரமத்தைக் குறைக்கும் சமூக ஆதரவுத் திட்டங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரின் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் என்டியுசி ஃபேர்பிரைசின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சியா கியான் பெங், வாழ்க்கைச் செலவினம் தனிப்பட்ட விவகாரம் என்று குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் அனைவருக்கும் செலவுகளைக் குறைக்க உதவும் நடவடிக்கைகளை அரசாங்கம் வெளியிடவில்லையென்றால் நான் ஆச்சரியப் படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

