இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில், வேலைகளில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கான மறுவடிவமைப்பில் நிறுவனங்களுக்கு அதிக உதவி கிடைக்கலாம்.
மேலும் நடுத்தர வயதில் வேலை தேடுவோரை வேலையில் அமர்த்துவதற்கான ஊக்குவிப்புகள் இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொருளியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதே சமயத்தில் ஊழியர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்தும் திட்டங்களும் இடம்பெறக்கூடும்.
புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினரான லியாங் எங் ஹுவா, வேலைகளை மறுவடிவமைப்பதில் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் உள்ளூரில் வேலை தேடுவோரை அதிகம் ஈர்க்க முடியும் என்று கூறிய அவர், உள்ளூர் மனிதவளமும் பெருகும் என்று குறிப்பிட்டார்.
ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான ஊக்குவிப்புகள் மட்டும்அல்லாமல் உரிய வேலையைக் கண்டறிந்து வேலைகளில் அமர்த்தும் ஏற்பாடுகளை அரசாங்கம் மேம்படுத்தலாம் என்று அவர் யோசனை கூறியிருந்தார்.
தேசிய ெதாழிற்சங்க காங்கிரசின் துணைத் தலைவரான அப்துல் சமத் அப்துல் வஹாப், ஊழியர் அணியில் சிங்கப்பூரர்கள் வலுவாக இடம்பெறும் இயக்கம், சாதகமான வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதோடு அது நல்ல சம்பளத்தையும் எதிர்காலத்தையும் அடைய உதவும் என்றார்.

