திட்டமிட்டப்படி 'ஜிஎஸ்டி' வரி உயர்வு

திட்டமிட்டப்படி 'ஜிஎஸ்டி' வரி உயர்வு

1 mins read

ஏற்­கெ­னவே திட்­ட­மிட்­டப்­படி, இவ்­வாண்­டின் வரவுசெல­வுத் திட்­டத்­தில் பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வு இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஆனால் எப்­போது அந்த வரி உயர்வு அமல்­ப­டுத்­தப்­படும் என்­பது தெரி­ய­வில்லை. ஒரே கட்­டத்­தில் ஏழு முதல் 9 விழுக்­காடு வரி உயர்த்­தப்­படும் அல்­லது இரண்டு கட்­டங்­க­ளாக உயர்த்­தப்­படும் என்ற மாறு­பட்ட எதிர்­பார்ப்­பு­கள் நில­வு­கின்­றன. சில நிபு­ணர்­கள், ஜூலைக்கு முன்பே வரி உயர்வு இருக்­கும் என்­றும் சிலர் அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் அமல்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்­றும் யோசனை கூறி­யுள்­ள­ள­னர். ஆனால் ஜிஎஸ்டி வரி உயர்வு இனி­யும் தாம­தப்­ப­டுத்­தப்­பட மாட்­டாது எனத் தெரி­கிறது.

கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட தொழில்­துறை, குழுக்­க­ளுக்கு இது கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தா­லும் புத்­தாண்­டுச் ெசய்­திக்­குப் பிறகு பேசிய பிர­த­மர் லீ சியன் லூங், 2022 வரவு செல­வுத் திட்­டத்­தில் வரி உயர்­வைச் சமா­ளிக்­கும் அம்­சம் இருக்­கும் என்று கூறி­யி­ருந்­தார்.