ஏற்கெனவே திட்டமிட்டப்படி, இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எப்போது அந்த வரி உயர்வு அமல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. ஒரே கட்டத்தில் ஏழு முதல் 9 விழுக்காடு வரி உயர்த்தப்படும் அல்லது இரண்டு கட்டங்களாக உயர்த்தப்படும் என்ற மாறுபட்ட எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. சில நிபுணர்கள், ஜூலைக்கு முன்பே வரி உயர்வு இருக்கும் என்றும் சிலர் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அமல்படுத்தப்படலாம் என்றும் யோசனை கூறியுள்ளளனர். ஆனால் ஜிஎஸ்டி வரி உயர்வு இனியும் தாமதப்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிகிறது.
கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில்துறை, குழுக்களுக்கு இது கவலையை ஏற்படுத்தியிருந்தாலும் புத்தாண்டுச் ெசய்திக்குப் பிறகு பேசிய பிரதமர் லீ சியன் லூங், 2022 வரவு செலவுத் திட்டத்தில் வரி உயர்வைச் சமாளிக்கும் அம்சம் இருக்கும் என்று கூறியிருந்தார்.