2022 வரவுசெலவுத் திட்டத்தில் செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் வரி அறிமுகப்படுத்தப்படலாம்.
இது, அரசாங்க நிதி வளத்தைப் பெருக்கும். மேலும் மக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சொத்து வரி உயர்வை அமல் படுத்துவது மிகவும் எளிது. ஆனால் எந்தவிதமான வரி உயர்வாக இருந்தாலும் அது மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நிதிக்கான இரண்டாம் அமைச்சரான இந்திராணி ராஜா, கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் பேசியபோது சிங்கப்பூருக்கு செல்வ வரி அவசியமா என்பது கேள்வியல்ல, அத்தகைய வரிகளை எளிதில் தவிர்க்க முடியாதபடி வலுவாக அமல்படுத்துவதே முக்கியம் என்று குறிப்பிட்டு இருந்தார். பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம் தாக்கல் செய்த தீர்மானத்துக்கு பதிலளித்த அவர், செல்வந்தர்களுக்கு 0.5 முதல் 2 விழுக்காடு செல்வ வரியை விதிக்கும் உத்தேச திட்டத்தை வெளியிட்டார்.
இத்தகைய வரி, சிங்கப்பூரின் வருமான ஆதாரங்களை பன்முகப்படுத்தவும் ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கவும் உதவும் என்று அவர் கூறியிருந்தார்.

