கைகொடுக்கும் வரவுசெலவுத் திட்டம்

கைகொடுக்கும் வரவுசெலவுத் திட்டம்

5 mins read

சக்தி மேகனா, கி. ஜனார்த்­தனன்

கொவிட்-19 என்ற இருட்­டுச் சுரங்­கத்­தைக் கடப்­ப­தற்­காக சிங்­கப்­பூர் சமு­தா­யத்­திற்கு கடந்த ஈராண்­டு­க­ளா­கப் பல­முறை அறி­விக்­கப்­பட்ட வரவுசெல­வுத் திட்­டங்­கள் கைகொ­டுத்­துள்­ளன.

கொவிட்-19 ஏற்­ப­டுத்­திய பாதிப்­பி­லி­ருந்து நிலைமை தேறி வரு­வது போல காணப்­படும் இந்­நே­ரத்­தில் நீண்­ட­கால குறிக்­கோள்­க­ளு­டன் இவ்­வாண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்­டம் வரை­யப்­பட்­டுள்­ளது.

பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்ட பொருள் சேவை வரி(ஜிஎஸ்டி) தற்­போ­தைய சூழ்­நி­லை­யைக் கருத்­தில் கொண்டு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் வரும் 2023ஆம் ஆண்டு ஜன­வரி 1ஆம் ேததி முதல் 8% ஆக­வும் 2024ஆம் ஆண்டு ஜன­வரி 1ஆம் ேததி முதல் 9%ஆக­வும் 'ஜிஎஸ்டி' அதி­க­ரிக்­கும்.

மக்­க­ளி­டம் இந்த வரிச்­ சு­மை­யைக் குறைக்க சலு­கை­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்­கான சலு­கை­கள், ஊழி­யர் திறன் மேம்­பாடு, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு நிதி­யு­தவி, வரு­மா­னத்­திற்கு ஏற்ற வரி உயர்வு, ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்தைப் படிப்­ப­டி­யாக உயர்த்­து­தல், ஓய்­வு­கா­லச் சேமிப்பு உள்­ளிட்­ட­வற்­றில் இந்த வர­வுச் செல­வுத் திட்­டம் கவ­னம் செலுத்­து ­கிறது.

இந்த நிலை­யில் இவ்­வாண்­டின் வர­வு­செ­ல­வுத் திட்­டம் பற்­றிய தங்­க­ளு­டைய கருத்­து­களை தமிழ் முர­சி­டம் பலர் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

புதிய எம்­பி­ளாய்­மண்ட் மற்­றும் எஸ்- பாஸ் விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச தகு­திச் சம்­ப­ளங்­கள் இவ்­வாண்டு செப்­டம்­பர் முதல் 500 வெள்ளி கூடு­த­லாக உயர்த்­தப்­படும் என வர­வுச்செல­வுத் திட்­டத்­தில் அறி­விக்­கப்­பட்­டது. கொவிட்-19 கிரு­மிப்­ ப­ர­வ­லால் ஏற்­பட்­டுள்ள வர்த்­தக மந்­தத்தி லிருந்து மீண்­டு­வ­ரும் நிலை­யில் இந்த உயர்வு வர்த்­த­கச் செலவை கணி­ச­மாக அதி­க­ரிப்­ப­தாக காயத்ரி உண­வ­கத்தின் உரி­மை­யா­ளர் திரு ச. மகேந்­தி­ரன் தெரி­வித்­தார்.

"எங்­க­ளி­டம் குறைந்­தது 150 பணி­யா­ளர்­கள் இருக்­கின்­ற­னர்.இவர்­களில் 10 விழுக்­காட்­டி­னர் எஸ்-பாஸ் வைத்­தி­ருப்­போர்," என்று அவர் குறிப்­பிட்­டார். "நாங்­கள் இந்­திய உணவு வகை­களில் நிபு­ணத்­து­வம் பெற்­ற­தால், இந்­திய உண­வு­க­ளைத் தயா­ரிக்க, இந்­தி­யா­வில் இருந்து வரும் இந்­திய சமை­யல்­கா­ரர்­களை நம்­பி­யுள்­ளோம். சேவைத் துறை­யின் கீழ் செயல்­படும் எஸ்-பாஸ் ஒதுக்­கீடு, தனித்­தி­றன் பெற்ற எங்­க­ளு­டைய பணி­யா­ளர்­களை எங்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்ற அனு­ம­திக்­கிறது."

"இருப்­பி­னும், அடிப்­படை தகு­திக்­கான சம்­பள உயர்வு, உண­வ­கத்­தின் செல­வு­களை அதி­க­ரிக்­கும். உள்­ளூ­ரில் சரி­யான திறன்களைக் கொண்ட பொருத்­த­மானவர்­க­ளைக் கண் ­ட­றிய முடி­யா­த­தால், தற்­போது வெளி­நாட்டு திற­னா­ளர்களை சார்ந்து இருக்­கும் உச்ச வரம்பை 10%ஆக உயர்த்­தி­யுள்­ளோம். அதே சம­யத்­தில் கவர்ச்சிகர­மான சம்­ப­ளத்­து­டன் உள்­ளூர் ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்த எங்­க­ளால் இயன்ற அளவு அனைத்து முயற்­சி­களையும் எடுத்து வரு­கி­றோம். "குறைந்­த­பட்ச சம்­ப­ளத் தேவை அதி­க­ரிப்­ப­தைத் தவிர, 2025 ஆம் ஆண்­டு­வாக்­கில் ஊழி­யர் ­க­ளுக்­கான தீர்வை $330ல் இருந்து $650 ஆக அதி­க­ரி­க்க விருப்பதையும் நாம் கணக்­கில் எடுத்­துக் கொள்ள வேண்­டும். இத­னால் செல­வு­கள் கூடும் என்றார்.

மின்­னி­லக்­க­மயமாத­லுக்­கும் புத்­தாக்­கத்­திற்­கும் அர­சாங்­கம் கூடு­த­லாக முத­லீடு செய்­துள்­ளதை வர­வேற்­ப­தாக என்­டி­யுசி லர்­னிங்­ஹப் அமைப்­பின் தக­வல் தொழில்­நுட்­பப் பிரி­வின் தலை­வர் செந்­தில்குமார் தெரி­வித்­தார். மின்­னி­லக்க முறை­க­ளின் மூலம் நேரத்­தைச் சேமித்து அதிக மதிப்பு உள்ள வேலை­க­ளுக்­கா­கப் பயன்படுத்த முத­லா­ளி­கள் முற்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

"மின்­னி­லக்கச் சந்தை, வர்த்­தக செயல்­முறை தானி­யக்­க­ம­யம், 'யூஎக்ஸ்' வடி­வ­மைப்பு, தரவு ஆய்வு ஆகிய தக­வல் தொழில் நுட்­பங்­களைப் புதி­ய­வர்­களும் கற்­றுக்­கொள்­ள­லாம்.

"இந்­தத் திறன்­களை பல்­வேறு துறை­க­ளி­லும் வேலை­க­ளி­லும் பயன்­ப­டுத்­த­லாம்.

"எனவே, வரவுசெல­வுத் திட்­டம் நல்­கி­யுள்ள ஆத­ரவை ஊழி­யர்­களும் வேலை­யி­டங்­களும் பயன்­ ப­டுத்­து­வது நல்­லது," என்று திரு செந்­தில் குமார் சொன்­னார்.

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஆத­ர­வான அர­சாங்க அணு­கு­மு­றை­களை வர­வேற்­ப­தாக எரி­பொ­ருள் நிர்­வாக நிபு­ணர் கவிக்­கு­மார்

முரு­கானந்தன் கூறி­னார்.

பொது­மக்­கள் தங்­கள் பங்­கிற்கு எரி­பொ­ருள் பயன்­பாட்­டைக் குறைத்­துக்­கொள்­ளும்­ப­டி­யும் அவர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

"பரு­வ­நிலை மாற்­றத்­தால் வெப்­பம் அதி­க­ரித்து வரு­கிறது. இது குளி­ரூட்­டும் சாத­னங்­க­ளின் பயன்­பாட்டை அதி­க­ரிக்­கிறது.

இதற்­கான எரி­பொ­ருள் தேவை அதி­க­ரிப்­ப­தால் மின்­சா­ரக் கட்­ட­ண­மும் அதி­க­ரிக்­கிறது.

இந்­தக் கட்­ட­ணங்­களை எதிர்­கொள்­ள­வும் அர­சாங்­கம் தற்­போ­தைய வரவுசெல­வுத்­திட்­டத்­தின் வழி கைகொ­டுக்­கிறது.

ஆயி­னும், பய­னீட்­டா­ளர்­க­ளா­கிய நாம், எரி­சக்­தி­யின் பயன்­பாட்­டைக் குறைத்­துக்­கொள்ள முற்­ப­ட­வேண்­டும்.

குறைந்த அளவு எரி­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்­தும் சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­து­டன் குளி­ரூட்ட மாற்று வழி­க­ளைத் தேட­வேண்­டும்," என்று அவர் கூறினார்.

பொருள் சேவை வரி உயர்­வால் உண­வுப் பொருள்­க­ளின் விலையை ஏற்ற வேண்­டிய சூழல் வர­லாம் என்று கணே­சன் விலாஸ் உரிமை யாளர் திரு சுகு­மா­ரன் எதிர்­பார்க் கிறார்.

"பொருள் சேவை வரி கூடும்­போது, மூலப் பொருள்­ களின் விலை­யும் கூடும். இத­னால், வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­கம் காசு கொடுத்து உணவை வாங்­கும் சூழ்­நிலை ஏற்­படும். இது வாடிக்கை யாளர்­க­ளுக்கும் எங்­க­ளைப் போன்ற நிர்­வா­கங்­க­ளுக்­கும் இக்கட்டான சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­தும்," என்­றார் அவர்.

தமது உண­வ­கப் பணி­யா­ளர்­களில் இரண்டு விழுக்­காட்­டி­னர் எஸ்-பாஸ் அனு­மதி வைத்­தி­ருப்­ப­வர்­கள் என்று கூறிய அவர், சில பேர் என்­றா­லும் அவர்­களை வேலை­யில் வைத்­தி­ருப்­ப­தற்­கான செலவு அதி­க­ரிப்­பது கவ­லை­ய­ளிக்­கிறது என்று திரு சுகு­மா­ரன் மேலும் கூறி­னார்.

"எஸ்-பாஸ் வைத்­தி­ருப்­போ­ரின் குறைந்­த­பட்ச சம்­ப­ளம் 500 வெள்ளி அதி­க­ரிக்­க­வுள்­ளது.

"இத­னால் எங்­கள் செல­வு­கள் உய­ரும். பெரும்­பா­லும், இந்­தி­யா­வில் இருந்து வரு­வோ­ரைத்­தான் சமை­யல் வல்­லு­நர்­க­ளாக பணி­யில் அமர்த்த முடி­கிறது.

இந்­திய இனிப்பு வகை­களை செய்ய உள்ளூரில் அதிகமான ஆட்­கள் இல்லை," என்று திரு சுகுமாறன் சுட்­டிக்­காட்­டி­னார்.

மருத்­து­வச் செலவு அதி­க­ரிப்­பால் பணி ஓய்­வுக்­கான மத்­திய சேம­நிதி அடிப்­ப­டைத் தொகை ஐந்­தாண்­டு­க­ளுக்கு ஆண்­டிற்கு 3.5 விழுக்­காடு உயர்வு நியா­யமே என்று பயண முக­வர் ராஜ்­கு­மார் பெரு­மாள், 50, தெரி­வித்­தார்.

2027ஆம் ஆண்­டில் ஐம்­பத்­தைந்து வயதை எட்­டப்­போ­கும் தமக்கு, இந்­தத் தொகை பிற்­ கா­லத்­தில் பாது­காப்பு அர­ணா­கத் திக­ழப்­ போ­வ­தாக அவர் சொன்­னார்.

"நான் 65 வயது ஆன­தற்­குப் பிறகு பண­வீக்­கம் உய­ரும் என எதிர்­பார்க்­கி­றேன்.

எனவே வாழ்­நாள் முழு­வ­தற்­கும் பெறப்­போ­கும் 1,000 வெள்ளி மாதாந்­தி­ரத் தொகை அந்­தத் தேவை­களை ஓர­ளவு பூர்த்தி செய்­யும்," என்று மேலும் தெரிவித்தார் ராஜ்­கு­மார் பெரு­மாள்.

பெட்­ரோல் மற்­றும் டீசல் பயன் பாட்­டிற்கு கூடு­தல் எரி­பொ­ருள் வரியை விதிக்­கா­மல் இருந்­தது தங்­க­ளுக்கு நிம்­ம­தியை அளிப்­ப­தாக பீடுபீ தள­வாட உரி­மை­யா­ளர்­கள் திரு ரமேஷ் இளங்­கோ­வ­னும், 32, திரு சதீஷ்­கு­மா­ரும், 33, தெரி­வித்­த­னர்.

"எங்­க­ளின் செயல்­பாட்­டுச் செலவு குறை­வாக இருந்­தால் மட்டுமே எங்­க­ளைப் போன்ற சிறிய தள­வாட நிறு­வ­னங்­கள் போட்­டித் திற­னு­டன் இருக்க முடி­யும்," என்று தமிழ் முர­சி­டம் திரு ரமேஷ் தெரி­வித்­தார்.

"பொருள் சேவை வரி­யால் பாதிப்பு நிச்சயம் ஏற்­படும். இவ்­வாண்­டும் எரி­பொ­ருள் விலை­யில் ஏதே­னும் அதி­க­ரிப்பு இருந்­தி­ருந்­தால் அது எங்­கள் வாடிக்­கை­யா­ளர்­களைப் பாதிக்­கும். வர்த்­த­கச் செயல்­பாடு செல­வு­கள் அதி­க­ரிக்க, நம் சேவைக்­கான கட்­ட­ணங்­களை உயர்த்த வேண்­டி­வ­ரும். எங்­கள் துறை­யில் கட்­டண மாற்­றம் சிறி­தாக இருந்­தா­லும் விளை­வு­கள் பெரி­யது. கட்­ட­ணங்­களை எங்­க­ளால் கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டிய வகை­யில் வைத்­தி­ருப்­பது இன்­னும் கடி­ன­மாக இருக்­கும்," என்­று அவர் தெரி­வித்­தார்.