தோண்டத் தோண்ட துன்பச்சுவடுகள்

தோண்டத் தோண்ட துன்பச்சுவடுகள்

3 mins read
85ca4b41-095c-4cff-a478-24a1db5c6720
ஆக்கிரமிப்பு முடிந்து சுமார் 25 ஆண்டுகள் கழிந்த பின்னர் தங்களது வீடு தேடிவந்து நன்றி கூறிய ஜப்பானிய ராணுவ வீரர் ஒருவர், தங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றுசேர்த்து இந்தப் படத்தை எடுத்துத் தந்ததாக திருமதி பிச்சையம்மா கூறினார். (வலது) திருமதி பிச்சையம்மா, 84. படம்: திமத்தி டேவிட் -
multi-img1 of 2

1942 பிப்ரவரி 15. நினைத்தாலே துயர நினைவுகள் நெஞ்சைத் துளைக்கும் ஜப்பானிய ஆக்கிரமிப்பு நிகழ்ந்த நாள். சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பானியர், இங்கு மூன்றாண்டுகள் ஆட்சி நடத்தியபோது தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை நமது மூத்தோர் பகிர்ந்து வருகிறார்கள். இது 3வது வாரத் தொடர்ச்சி.

இருண்ட காலம் உருண்டாலும் இன்னும் வருத்தும் நினைவுகள்

சிங்­கப்­பூ­ரின் ஜப்­பா­னி­யப் படை­யெ­டுப்­புக்கு முன்­ன­தாக போர்­வி­மா­னங்­கள் குண்டு பொழிந்­த­போது தமது தாத்தா, சொந்த உயி­ரைப் பண­யம் வைத்து தமக்­கும் சுற்­றி­யுள்­ள­வர்­க­ளுக்­கும் உணவு தேடித் தந்­த­தாக வீ. பிச்­சை­யம்மா நினை­வு­கூர்ந்­தார். நன்டா பால்­ம­ரத்­தோட்­டத்­தில் உள்ள ஒரு குகை ஒன்­றில் குடும்­பத்­தி­ன­ரு­ட­னும் அண்டை வீட்­டார் சில­ரு­டனும் ஒதுங்­கி­ய­போது தாமும் சில பிள்­ளை­களும் பசி­யால் அழு­ததை நினை­வு­கூர்ந்­தார். "பெரி­ய­வர்­கள் தண்­ணீரை மட்­டும் அருந்தி அமர்ந்­தி­ருந்­த­னர். ஆனால் பிள்­ளை­களோ பசி, பசி என அழுது­ கொண்­டி­ருந்­த­னர்,"

"நாங்­கள் அழுத­தைக் கண்ட என் தாயா­ரின் தகப்­ப­னார் எங்­கள் மீது இறக்­கப்­பட்டு உயி­ரைப் பண­யம் வைத்து எங்­கள் வீட்­டுத் தோட்­டத்­திற்­குச் சென்­றார். சில காய்­

க­றி­க­ளைப் பறித்து சட்டி, உப்பு முத­லிய சமை­யல் பொருட்­களை எடுத்து மீண்­டும் அந்­தப் பெரிய குகைக்­குத் திரும்­பி­னார். எங்­க­ளுக்­காக அவர் வெண்­டைக்­காய்க் குழம்பு சமைத்து சோற்று­டன் பிசைந்து பந்­து­க­ளாக உருட்டி சின்­னப் பிள்­ளை­க­ளுக்­குத் தந்­தார். அதுவே என் வாழ்­நா­ளில் சுவைத்த ஆக ருசி­யான உணவு," என்று அவர் கூறி­னார்.

1938ல் வீர­மலை-முரு­கம்மா தம்­ப­தி­ய­ருக்கு ஐந்­தா­வது பிள்­ளை­யா­கப் பிறந்த திரு­மதி பிச்­சை­யம்மா, இரண்டு சகோ­த­ரர்­க­ளு­ட­னும் இரண்டு சகோ­த­ரி­க­ளு­ட­னும் வளர்ந்­தார். தற்­போதைய நன்­யாங் தொழில்­ நுட்­பப் பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் போர்க்­கா­லத்­தின்­போது தாங்கள் வளர்ந்த வீடு இருந்­த­தா­கக் கூறி­னார். "நாங்­கள் வாழ்ந்த இடத்தை 15ஆம் கல் என அழைப்­போம்," என்றார் அவர்.

ஜப்­பா­னியப் போர்­வீ­ரர்­களை நினை­வு­கூர்ந்த பிச்­சை­யம்மா, இந்­தி­யத் தலை­வர்­களை அவர்­கள் பெரி­தும் மதித்­த­தா­கக் குறிப்­பிட்­டார். "நேரு, நேதாஜி படங்­களை இந்­தி­யர்­கள் வேண்­டு­மென்றே வைத்­தி­ருப்­பர். ஜப்­பா­னி­யர்­கள் அந்­தப் படங்­க­ளைக் கண்­டால் கையெ­டுத்து வணங்­கு­வர். வீட்டுக்குள் வர­மாட்­டார்­கள்," என்றார் அவர்.

"ஜப்­பா­னி­யர்­கள் சீனப் பெண்­

க­ளைப் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­ வ­தை அறிந்து தப்­பிக்க முய­ன்ற சீனப் பெண்­கள், எங்­க­ள் வீட்டுக்கு வந்து இந்­தி­யப் பெண்­க­ளைப்போல வேட­மிட்டு ஒளிந்­து­கொள்வார்கள். நாங்­கள் அணி­யும் பொட்­டும் கைலி சட்­டை­யை­யும் அணிந்­து­கொண்டு எங்­கள் வீட்­டில் பதுங்கி இருப்­பார் கள்," என்று அவர் கூறி­னார்.

குற்­றம் செய்­த­தா­கக் கூறப்­படும் சீனர்­க­ளைக் குழி தோண்ட வைத்து அவர்­களை வரி­சை­யில் நிற்க வைத்து அவர்­க­ளது தலை­க­ளை வெட்­டிச் சீவி­யதை ஒளிந்­தி­ருந்து பார்த்­த­தா­க­வும் திரு­மதி பிச்­சை­யம்மா நினை­வு­கூர்ந்­தார்.

ஆனா­லும் தமி­ழர் சமூ­கம் அனு­ப­வத்த துய­ரம் வேறுவித­மாக இருந்­ததை திரு­மதி பிச்­சை­யம்மா சுட்­டி­னார். "சயா­மில் ரயில் பாதையை அமைப்­ப­தற்­காக ரப்­பர் தோட்ட ஆண் ஊழி­யர்­களை ஜப்­பா­னி­யர்­கள் பிடித்­துச் சென்­ற­னர். என் அப்­பா­வும் மாமா­வும் அவர்­க­ளால் பிடிக்­கப்­பட்­ட­னர்."

ஜப்பானியப் படையிடம் சமையல்காரராக வேலை செய்த தமிழர் ஒருவரின் உதவியால் ஜப்­பா­னி­யர்­க­ளின் கண்­களில் படா­மல் இருவரும் தாய்­லாந்­தி­லி­ருந்து தரை வழி­யாக சிங்­கப்­பூருக்குத் திரும்­பி­னர். வாழை­ம­ரத் தண்­டால் செய்த மித­வை­கள் மூல­மாக சிங்­கப்­பூர் நீரி­ணை­யைக் கடந்து வீடு திரும்­பி­னர்.

1945ஆம் ஆண்­டு ஜப்­பா­னி­யர்­கள் சிங்­கப்­பூ­ரை­விட்­டுச் சென்­ற­ாலும் தம் குடும்­பத்­திற்­குத் தெரிந்த ஜப்­பா­னிய வீரர் ஒரு­வர் பின்­னர் வர்த்­தக முத­லா­ளி­யாக மாறி 1970களில் தங்­க­ளது குடும்­பத்­தைக் காண மீண்­டும் வந்­தது எதிர்­பாராதவித­மாக இருந்­தது என்றார் அவர்.

"படை­யெ­டுப்­பின்­போது பதின்ம வயது வீர­ரான அவர், அடிக்­கடி ஒளிந்து இருப்­பார். ஆனால் என் குடும்­பத்­தி­ன­ரு­டன் பழ­கு­வார், சாப்­பாட்­டை­யும் சிக­ரெட்­டை­யும் கேட்­பார். போருக்குப் பின்­னர், அவர் வர்த்­த­க­ராக வளர்ந்து மலே­சி­யா­வில் சொந்தத் தொழில் தொடங்­கி­னார். சிங்­கப்­பூ­ருக்கு வந்து நாங்­கள் இருந்த இடத்­தைக் கண்­டு­

பி­டித்­தார். எங்­கள் குடும்­பத்­திற்கு அவர் நன்றி தெரிவித்தோடு எங்­க­ளைப் படம் எடுத்­தார். அந்­தப் படத்தை இன்­னும் வைத்­தி­ருக்­கி­றேன்," என்று திரு­மதி பிச்­சை­யம்மா கூறி­னார்.

1955ஆம் ஆண்­டில் தமது 17வது வய­தில் உறவினரான வீர­நந்­த­கோ­பா­லைத் திரு­ம­ணம் செய்­தார் இவர். இவர்­க­ளுக்கு ஐந்து பிள்­ளை­கள் 10 பேரப்­பிள்­ளை­கள் (இரு வர் அம­ரர்­கள்), இரண்டு கொள்­ளுப்­பே­ரப்­பிள்­ளை­கள் ஆகி­யோர் உள்­ள­னர்.

வாழ்க்­கை­யில் எது நேர்ந்­தா­லும் அத­னைச் சமா­ளிக்க முடி­யும் என்ற துணிச்­சலை ஜப்­பா­னி­யப் படை­யெ­டுப்பு தமது தலை­மு­றை­யி­ன­ருக்­குத் தந்­த­தா­கக் கூறிய திரு­மதி பிச்­சை­யம்மா, இந்­நாடு அடைந்­துள்ள வளர்ச்­சியை இளை­யர்­கள் நன்கு பயன்­ப­டுத்திக்கொள்ள வேண்டும் என்­­கி­றார்.