போருக்கு நடுவே புதுப்பெண்

போருக்கு நடுவே புதுப்பெண்

2 mins read
52ede989-eba1-482e-adc6-ea09a479d3c0
திருமதி வேலுப்பிள்ளை நீலாம்பாள், 91. படம்: திமத்தி டேவிட் -

ஜப்­பா­னி­யர்­கள் படை­யெ­டுத்த அதே ஆண்­டில் வேலுப்­பிள்ளை நீலாம்­பாள், புது­ம­ணப் பெண்­ணாக சிங்­கப்­பூ­ருக்­குள் அடி­யெ­டுத்து வைத்­தி­ருந்­தார். தாய் தந்­தை­யர், உற்­றார் உற­வி­னர்­களை விட்டு புதிய வாழ்க்­கை­யைத் தொடங்­கிய நேரத்­தில் சிங்­கப்­பூ­ரில் போர்­மூண்­டது. ரயில் வண்­டி­யில் சிங்­கப்­பூ­ருக்கு வந்­து­கொண்­டி­ருந்­த­போது ஜோகூர் பாலத்­தில் நடப்­பட்ட கழி­க­ளின் மீது சீனர்­க­ளின் தலை­கள் வைக்­கப்­பட்­ட­தைக் கண்­டு அதிர்ந்ததாக திரு­மதி நீலாம்­பாள் நினைவு­கூர்ந்­தார்.

ஜோகூர் பாரு­வில் இரும்­புப் பட்­ட­றை­யில் வேலை செய்த வேலுப்­பிள்­ளைக்­கும் மாரி­யம்­மா­வுக்­கும் 1931ஆம் ஆண்டு பிறந்த நீலாம்­பாள், தமது 12வது வய­தில் ரயில்வே துறை­யில் பாரந்­தூக்­கி­யாக இருந்த வெள்­ளை­சா­மியை மணம் புரிந்­தார். கம்­போங் பாரு­வி­லுள்ள ரயில்வே குவாட்­டர்ஸ் வீட்­டில் இரு­வ­ரும் தங்­கி­னர். "அந்த வீடு மூன்று மாடி­க­ளைக் கொண்­டி­ருந்­தது," என்று நினை­வு­கூர்ந்­தார் திரு­மதி நீலாம்­பாள்.

ஜப்­பா­னி­ய­ரின் தொல்­லை­களை விவ­ரித்த அவர், "எங்­கள் வீட்­டிற்­குள் ஜப்­பா­னி­யர்­கள் நுழைந்து பைக­ளைத் திறந்து சோதனை செய்­வர். என் கைக்­க­டி­கா­ரத்­தை­யும் வீட்­டில் இருந்த சர்க்­க­ரை­யை­யும்­கூட அவர்­கள் விட்­டு­வைக்­க­வில்லை," என்று அவர் கூறி­னார். ஆயி­னும், காலப்­போக்­கில் ஜப்­பா­னிய வீரர்­கள் தமி­ழர்­க­ளி­டம் பிரி­யத்­து­டன் பேசி­ய­தா­கக் கூறி­னார். சிங்­கப்­பூ­ரில் தமக்­குத் தோழி­க­ளாக இருந்த மீனாட்சி, லோகாம்­பாள் என்ற இரண்டு 13 வயது பெண்­கள், இந்­திய தேசிய ராணு­வத்­தில் சேர்ந்­த­தாக நினை­வு­கூர்ந்­தார்.

உணவு பெரும்­பா­லும் மர­வள்­ளிக் கிழங்­காக இருந்­தா­லும் தமது கண­வர் வேலை செய்த ரயில்வே நிலை­யத்­தில் ஜப்­பா­னிய வீரர்­கள் சோற்று உருண்­டை­களை தமது கண­வ­ருக்­குத் தந்­த­தா­கக் கூறி­னார். உண­வுக்­குத் தட்­டுப்­பா­டு­கள் இருந்­த­போ­தும் இந்­தி­யத் துணி­க­ளைத் தம்­மால் வாங்க முடிந்­த­தாக திரு­மதி நீலாம்­பாள் கூறி­னார். தற்போது 91 வயதாகும் இவ­ருக்கு எட்­டுப் பிள்­ளை­கள், 22 பேரப்­பிள்­ளை­கள், 26 கொள்­ளுப் பேரப்­பிள்­ளை­கள்.