நிற்கவைத்து சுட்டார்கள்; தப்பிப் பிழைத்தார் அண்ணன்

நிற்கவைத்து சுட்டார்கள்; தப்பிப் பிழைத்தார் அண்ணன்

1 mins read
e509b678-48d1-44eb-ab1a-d7904e05f9f8
மலேசிய அனுபவத்தை விவரித்த திருமதி ஜோதியம்மா, 86. படம்: கி. ஜனார்த்தனன் -
multi-img1 of 2

1936ஆம் ஆண்டு மலே­சி­யா­வின் பினாங்கு மாநி­லத்­தில் பிறந்த ஜோதி­யம்மா, தமது ஆறா­வது வய­தில் ஜோகூ­ரின் லாபிஸ் பகு­திக்கு குடும்­பத்­து­டன் குடி­பெ­யர்ந்­தார். ரப்­பர் தோட்ட ஊழி­யர்­க­ளான தம் பெற்­றோர்­கள் திரு­வண்­ணா­ம­லை­யைச் சேர்ந்­த­வர்­கள் என்று அவர் கூறி­னார்.

"மாரி­யப்­பன் என்ற என் அண்­ணன் ஆங்­கி­லம் தெரிந்­த­வர். மிக­வும் கெட்­டிக்­கா­ரர். படை­யெ­டுப்­புக்கு முன்­ன­தாக அவர் வாகன ஓட்­டு­ந­ராக வேலை செய்­து­கொண்டே கல்வி கற்­றார். ஆனால் எலி திரு­டி­ய­தாக அவரை ஜப்­பா­னி­யர்­கள் பிடித்­த­னர்.

"பள்­ளிக்­கூ­டத்­தி­லுள்ள ஒரு திட­லின் நடுவே என் அண்­ணனை நிற்கவைத்து சுடத் தயா­ராக இருந்­ த­னர்.

"ஆனால் துப்­பாக்கி சுட்­ட­போது என் அண்­ணன் உடனே குனிந்து­ தப்­பி­ ஓ­டி­னார். அரு­கி­லி­ருந்த தேவா­லய மணிக்­கூண்­டில் சிறிது நேரம் மறைந்­தி­ருந்த பின்­னர் வீடு திரும்பினார்," என்று விவ­ரித்­தார் திரு­மதி ஜோதி­யம்மா.

சிங்­கப்­பூ­ரில் படை­யெ­டுப்பு முடி­யும் வேளை­யில் திரு­மதி ஜோதி­யம்­மா­வின் குடும்­பம் தஞ்­சோங் பகார் வந்து சேர்ந்­தது.

ஈப்­போ­வி­லி­ருந்து திரும்­பிய தம் அண்­ண­னுக்கு ரயில்­வே­யில் வேலை கிடைத்த பிறகு அவர், தமது குடும்­பத்­தி­னரை சிங்­கப்­பூ­ருக்கு அழைத்­த­தாக திரு­மதி ஜோதி­யம்மா கூறி­னார்.