உள்ளூர் திறனாளர்களைச் சார்ந்த வர்த்தகங்களே நீண்டகாலம் நீடிக்கும்: சமையல் கலைஞர் சங்கத் தலைவர்

உள்ளூர் திறனாளர்களைச் சார்ந்த வர்த்தகங்களே நீண்டகாலம் நீடிக்கும்: சமையல் கலைஞர் சங்கத் தலைவர்

2 mins read
721bcb28-180f-4a63-8b7a-24fad42c4a3e
திரு பாலசுந்தரம் பிள்ளை. படம்: சுவை -

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் நன்கு சமைக்­கத் தெரி­யும் என்­றும் அவர்­கள் விரும்­பக்­கூ­டிய வேலைச்­சூ­ழலை தந்­தால்

இங்­குள்ள இந்­திய சமை­யல்­கா­ரர்­க­ளையே தக்­க­வைத்­துக்­கொள்ள முடி­யும் என்­றும் இந்­திய சமை­யல் கலை­ஞர்,

சமை­யல் கலை சங்­கத்­தின்

தலைவர் பால­சுந்­த­ரம் பிள்ளை

தெரி­வித்­தார்.

தமது மூன்று உண­வ­கக் கிளையில் ஒரு எஸ்-பாஸ் ஊழி­ய­ரைக்­கூட வைத்­தி­ராத திரு பாலா, சிங்­கப்­பூ­ரை­யும் மலே­சி­யா­வை­யும் சேர்ந்த இளை­யர்­களை சமை­யல் கலை­ஞர்­க­ளாக வளர்த்து வரு

கிறார். நல்ல சம்­ப­ளம் கொடுப்­ப­து­டன் அடிக்­கடி பயிற்­சி­க­ளுக்­கும் அனுப்­பு­வ­தால் அவர்­கள் தம்­மு­டன் தொடர்ந்து வேலை செய்­வ­தாக திரு பாலா கூறி­னார். ஒருசில இந்­திய உண­வ­கங்­க­ளின் வர்த்­தக பாணி காலத்­து­டன் மாற­வில்லை என இவர் கரு­து­கி­றார்.

"சில உண­வ­கங்­களில் சமை­யல்­கா­ரர்­கள் வாரத்­திற்கு 5 நாள் உழைக்­கின்­ற­னர். அதேநேரம் பல்­வேறு இந்­திய உண­வ­கங்­களில் சமை­யல்­கா­ரர்­கள் ஓய்வின்றி வேலை செய்­கின் றனர். அத்­து­டன் சம்­ப­ள­மும் அவர்­க­ளுக்­குக் குறைவு. அதிக சம்­ப­ளம் கொடுக்­கத் தயா­ராக இருந்­தால் திற­மை­யா­ன­வர்­கள் வரு­வர்," என்­பதே இவ­ரது கருத்தாக உள்­ளது.

இந்­திய உண­வ­கங்­க­ளின் வெளி­நாட்டு சமை­யல் கலை­ஞர்­கள் சிலர், முத­லா­ளி­க­ளால் தாங்­கள் மதிக்­கப்­

ப­டு­வ­தில்லை என்று சொல்­வ­தா­கக் கூறும் திரு பாலா, தங்­க­ளது வேலைக்­காக பயப்­படும் அந்த ஊழி­யர்­கள், உள்­ளூர்க்­கா­ரர்­க­ளுக்கு சமை­யல் கற்­றுத்­த­ர­வும் தயங்­கு­கின்­ற­னர் என்­றார்.

"வேலைக்­கான மரி­யாதை உய­ரும்­போது திறன்­மிக்க சிங்­கப்­பூ­ரர்­கள் முன்வரு­வர். நான் உண­வக உரி­மை­யா­ளராக மட்டுமல்லாமல் சமை­யல் கலை­ஞ­ரா­க­வும் இருப்­ப­தால் சமை­யல்­கா­ரர்­க­ளின் நிறைகுறைகளை உணர்ந்து அதற்­கேற்ப நடந்­துகொள்ள முடி­கிறது. எனது கருத்­து­க­ளைப் பெரும்­பா­லான உண­வக உரி­மை­

யா­ளர்­கள் ஏற்­கா­மல் இருக்­க­லாம். ஆனால், உள்­ளூர் திற­னா­ளர்­க­ளைச் சார்ந்த வர்த்­த­கங்­களே நீண்­ட­கா­லத்­திற்கு நிலைக்­கும் என்­பதை நம்­பு­கி­றேன்," என்று கூறினார் திரு பாலா.

இவரைப் போன்ற கருத்துடைய பாய் பிரியாணிக் கடை உரிமையாளர் திரு காதர் முகைதீன், 43, உள்ளூர் வாசிகளுக்கு சமையல் பயிற்சி அளித்து வருவதாகக் கூறினார்.