நோயிடமிருந்து அன்பைக் காப்பாற்றிய வலிமை

நோயிடமிருந்து அன்பைக் காப்பாற்றிய வலிமை

1 mins read

2014ஆம் ஆண்­டில் முதல் முறை­யாக மார்­ப­கப் புற்­று­நோயை முறி­

ய­டிக்க எதிர்­நீச்­சல் போட்ட திரு­மதி சண்­மு­கப்­பி­ரி­யா­வுக்கு ஒன்­றரை ஆண்டு இடை­வெ­ளி­யில் மீண்­டும் அந்­நோய் ஏற்­பட்­டது.

"வாழ்­வில் மிகச் சவா­லா­ன­தொரு கிணற்­றைத் தாண்­டி­விட்­ட­தாக எண்­ணி­னேன். மீண்­டும் அவர் பாதிக்­கப்­ப­டு­வார் என்று நான் எதிர்­பார்க்­கவே இல்லை. ஏற்­றுக்­கொள்­வ­தற்­குக் கடி­ன­மாக இருந்­தா­லும், அவ­ருக்­குப் பக்­க­ப­ல­மாக இருக்­க­என்­னைத் திடப்­ப­டுத்­திக்­கொண்­டேன்," என்று நெகிழ்ந்­தார் அவ­ரது கண­வ­ரான கா. ரமேஷ் பாபு, 46.

21 நாள்­க­ளுக்கு ஒரு முறை சிகிச்சை எடுத்து வரும் திரு­மதி சண்­மு­கப்­பி­ரி­யா­வுக்கு மன­த­ள­வி­லும் வீட்டு வேலை­யி­லும் துணை­நின்­றார் திரு ரமேஷ். வாழ்க்கை தொட­ரும் என்ற நம்­பிக்­கையை உணர்ந்­தார் திரு­மதி சண்­மு­கப்

பிரியா.

"இந்த நோயே எங்­க­ளது 18 ஆண்­டு­கால மண­வாழ்க்­கை­யில் நாங்­கள் எதிர்­நோக்­கிய பெரிய சவால். அது எங்­க­ளைப் பிரிப்­பதற்­குப் பதில் அதிக அளவு பிணைத்­துள்­ளது என்­பதே உண்மை," என்­றார் திரு­மதி கு. சண்­மு­கப்­பி­ரியா, 41. மருத்­து­வச் செல­வு­கள், உடல் பல­வீ­னத்­துக்கு மத்­தி­யி­லும் இரு பிள்­ளை­க­ளின் பள்­ளிப் படிப்பு தடை­யின்றி தொடர இரு­வ­ரும் ஆத­ர­வு அளித்­த­னர். திரு­மதி சண்­மு­கப்­

பி­ரியா தீவிர புற்­று­நோய் சிகிச்­சை­யில் இருந்­த­போ­தும், மக­னின் கூடைப்­பந்­தாட்­டங்­களில் கண­வ­ரு­டன் அமர்ந்­தி­ருந்­தார். ஒவ்­வொரு நாளும் மறக்­க­மு­டி­யாத நன்­னா­ளாக இருக்­கும் வண்­ணம் வாழ்க்­கையை நடத்­திச்­செல்­வ­தா­கக் கூறி புன்­ன­கைக்கின்றனர் இந்தத் தம்­ப­தி­யி­னர். (படம் இடம்பெற வேண்டாம் என்பது இவர்களது விருப்பம்)