அண்மைக் காலத்தில் குறைந்து வரும் திருமணங்களும் குறுகிய காலகட்டத்தில் பிரியும் மண உறவுகளும் கவலை அளிக்கின்றன. கொவிட்-19 சிக்கல்களும் குடும்பத்தில் பிளவுகளை ஏற்
படுத்தியுள்ளன. இத்தகைய சூழலில், ஒற்றைப் பெற்றோர், இள
வயது தம்பதியினர், குடும்ப வன்முறைக்கு ஆளானோர்
முதலியோருக்குத் தொடர்ந்து ஆதரவு தேவைப்படுகின்றது.
சமுதாயத்தின் ஆணி
வேறான குடும்ப அமைப்புகளில் நிலைத்தன்மையை நாட்டும் நோக்கில் திருமணங்கள் மற்றும் குடும்ப உறவுகளை வலுப்
படுத்தும் செயற்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் இத்திட்டத்தின்கீழ் உதவித் திட்டங்களும் குடும்ப ஈடுபாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளும் அமலாக்கம் காணவிருக்கின்றன.
புதுமணத் தம்பதியினருக்கான உறவு கல்வித் திட்டத்தை முன்னிட்டு 4 நாள்கள் நடத்தப்படும் இணையப் பட்டறையில் தம்பதியினர் கலந்துகொள்ளலாம். மே மாத சனிக்கிழமைகளில் நடக்கவிருக்கும் இப்பட்டறையில் சேர familylife@cornerstoneservices.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியை நாடலாம்.
"காதலும் உறவும் மிதிவண்டி போன்றது. அதனை நகர்த்த மறந்துவிட்டு உறவில் பிளவுகளைச் சந்திப்போர் ஏராளம். வெளிப்படையான எண்ணப் பரிமாற்றங்கள் நீடித்த உறவுக்கு வித்திடும். அப்புரிதலை ஏற்படுத்த இத்திட்டங்கள் பெரிதும் கைக்கொடுக்கும்," என்றார் சிங்கப்பூர் அனைத்துலக சமரச நடுவர் கல்வி நிலையத்தின் துணைத் தலைவரும் திருமணங்கள் மற்றும் குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் செயற்கூட்டணியின் உறுப்பினருமான திரு திருநாவுக்கரசு.
அமைச்சின் திட்டங்கள் குறித்து மேல்விவரங்கள்
அறிய familiesforlife.sg என்ற தளத்தை நாடலாம்.

