"மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தைக் குடும்பங்களில் தற்சமயம் காணமுடிகின்றது. முன்பிருந்த அளவுக்கு ஒழுக்க நெறிகளையும் பாரம்பரியத்தையும் சிறுவயதிலிருந்தே வலியுறுத்திச் சொல்வது குறைந்து வருகின்றது.
"எனவே, ஆசியக் கலாசாரத்தில் காணப்படும் திருமண நெறிகளில் முக்கியத்துவம் குன்றி, மேற்கத்திய மோகம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது," என்று பகிர்ந்துகொண்டார் முனைவர் ராமசாமி கருணாநிதி.
சுமார் 33 ஆண்டுகாலம் திரு
மணம் நடத்தி வைக்கும் பணியில் இருந்த திரு கருணாநிதி, பல
தரப்பட்ட தம்பதியினரைத் தம் அனுபவத்தில் கண்டுள்ளார். திரு
மணத்துக்குப் பின்னர் ஏற்படும் தடைகள் குடும்பச் சிக்கல்களாக முற்காலத்தில் கருதப்பட்டன.
"இப்போதோ, தனிப்பட்ட சிக்கல்களாக அவை பிரிக்கப்பட்டு, தவறான புரிந்துணர்வு ஏற்பட வழிவகுக்கின்றன என்று அவர் கூறினார்.
விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாதது, வேலைப்பளுவால் புரிந்துணர்வு பாதிக்கப்படுவது, பிறருடன் ஒப்பீடு செய்வது, வீட்டு
வேலைகளைப் பகிர்ந்துகொள்ளாதது, வேலையிடத்தில் தம்பதியரின் நிலையை முதலாளிகள் கண்டுகொள்ளாதது ஆகிய காரணிகளால் பிரிந்து சென்ற தம்பதியினரை திரு கருணாநிதி எதிர்கொண்டுள்ளார்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிரென வாழையடி வாழையாய் வாழ்ந்த தமிழர்கள் கூறிச் சென்றனர். நவீனக் கொள்கைகள் நிலைநாட்டப்பட்டுள்ள தற்போதையச் சூழலிலோ, அக்கூற்று பொய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று இவர் கருதுகிறார்.
"இல்லறவாழ்க்கை தனிமனி
தனுக்கு மட்டுமின்றி, மனித சமுதாயத்துக்கே இன்றியமையாத ஒன்று. மழலைச் செல்வங்களைப் பெற்று, அவர்களை நற்குடிமக்களாய் வளர்த்துவிட்டால், அதுவும் நாட்டுக்குச் செய்யும் ஒரு தொண்டாகும்," என்றார் திரு கருணாநிதி.