டெங்கி தடுப்பு நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தல்

டெங்கி தடுப்பு நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தல்

2 mins read

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்டு தொடக்­கத்­தில் இருந்து இது­வரை நாலா­யி­ரத்­துக்­கும் அதி­க­மான டெங்­கிச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

சென்ற ஆண்­டின் இதே கால­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இது இரண்டு மடங்கு. எனவே பொது­மக்­கள் டெங்­கி­யைத் தடுப்­ப­தற்­கான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்று தேசி­யச் சுற்­றுப்­புற அமைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

மார்ச் மாதம் ஏடிஸ் கொசுக்­கள் இனப்­பெ­ருக்­கம் செய்­யும் 2,400 இடங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டன. பிப்­ர­வ­ரி­யில் இந்த எண்­ணிக்கை 1,300 ஆக இருந்­தது. இந்த எண்­ணிக்கை ஒரே மாதத்­தில் கிட்­டத்­தட்ட இரண்டு மடங்கு ஆகி­யி­ருப்­பதை அமைப்பு சுட்­டி­யது.

சிங்­கப்­பூ­ரில் வழக்­க­மாக ஜூன் முதல் அக்­டோ­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில்­தான் டெங்­கிப் பர­வல் அதி­க­மாக இருக்­கும். ஆனால் தற்­போது ஆண்­டின் முதல் நான்கு மாதங்­கள்­கூட முழுமை அடை­யாத நிலை­யில் 4,000 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது கவலை அளிப்­ப­தாக அமைப்பு தெரி­வித்­தது.

சென்ற ஆண்டு முழு­வ­தும் பதி­வான மொத்த டெங்­கிச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 5,258 என்­பதை அமைப்பு சுட்­டி­யது.

இம்­மா­தம் 9ஆம் தேதி­யு­டன் முடி­வ­டைந்த வாரத்­தில் 643 டெங்­கிச் சம்­ப­வங்­கள் பதி­வா­யின. அதற்கு முந்­தைய வாரத்­தை­விட இந்த எண்­ணிக்கை 134 அதி­கம்.

சென்ற வியா­ழக்­கி­ழமை நில­வ­ரப்­படி, 164 இடங்­கள் டெங்கி பர­வும் அபா­ய­மிக்­க­வை­யாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அவற்­றில் ஆகப் பெரி­யவை ஹாலந்து, புக்­கிட் தீமா, புக்­கிட் பாத்­தோக், உட்­லண்ட்ஸ் அவென்யூ 1, உட்­லண்ட்ஸ் டிரைவ் ஆகிய பகு­தி­களில் உள்­ளன.

தேசிய சுற்­றுப்­புற அமைப்பு, மார்ச் 30ஆம் தேதி டெங்­கித் தடுப்பு பிர­சார இயக்­கத்­தைத் தொடங்­கி­யது. தற்­போ­தைய சிவப்பு, மஞ்­சள், பச்சை வண்­ணப் பதா­கை­க­ளு­டன் ஏடிஸ் கொசுக்­கள் மிக அதி­க­மா­கக் காணப்­படும் பகு­தி­கள் என்று உணர்த்­து­வ­தற்­காக ஊதா வண்­ணப் பதா­கையை அது அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.