கோ சோக் டோங் முடிவும் விளைவும் தலைமைத்துவ மாற்றம், பொதுத் தேர்தல், வாக்காளர்களின் முடிவு

கோ சோக் டோங் முடிவும் விளைவும் தலைமைத்துவ மாற்றம், பொதுத் தேர்தல், வாக்காளர்களின் முடிவு

2 mins read
8fb303cc-a7ca-43db-9e33-139f3165ff48
திரு கோ சோக் டோங் அடுத்த துணைப் பிர­த­ம­ரா­கப் பொறுப்­பேற்க வேண்­டும் என்­று 1984 டிசம்பர் 30ஆம் தேதி கட்­சி­யின் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் 12 பேர் முடிவு செய்தனர். -

1984 பொதுத் தேர்­த­லில் மக்­கள் செயல் கட்சி 64.8 விழுக்­காட்டு வாக்­கு­க­ளு­டன் 79 இடங்­களில் 77ஐ பிடித்­தது. புது­மு­க­மாக திரு லீ சியன் லூங் களம் கண்­டார்.

அதே ஆண்டு டிசம்­பர் 30ஆம் தேதி டாக்­டர் டோனி டானின் வீட்­டில் கூடிய கட்­சி­யின் முக்கிய உறுப்­பி­னர்­கள் 12 பேர், திரு கோ சோக் டோங் அடுத்த துணைப் பிர­த­ம­ரா­கப் பொறுப்­பேற்க வேண்டும் என்­ற­னர். திரு கோ அடுத்த பிர­த­ம­ர் என்பது அவர்­களுக்குத் தெரியும்.

புதிய அமைச்­ச­ர­வை­யில் முதல் துணைப் பிர­த­ம­ராக 1985 ஜன­வரி 2ஆம் தேதி திரு கோ நிய­மிக்­கப்­பட்­டார். 1988 செப்­டம்­பர் 3ஆம் தேதி நடந்த பொதுத் தேர்­த­லில் மசெக 63.2% வாக்­கு­க­ளு­டன் 81 இடங்­களில் 80 இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யது. அதுவே திரு லீ குவான் இயூ­ தலைமையிலான கடைசித் தேர்­த­லாக இருந்­தது.

பிறகு 1990 நவம்­பர் 28ல் திரு கோ, 49, பிர­த­மர் பொறுப்பை ஏற்­றார். அப்­போது வர்த்­தக, தொழில் அமைச்­ச­ராக இருந்த லீ சியன் லூங், 38, துணைப் பிர­த­ம­ரா­னார்.

1991 ஆகஸ்ட் 31ல் திரு கோ திடீர்த் தேர்­த­லுக்கு அழைப்பு விடுத்­தார். மசெக அது­வரை இல்­லாத அளவுக்கு மிகக் குறை­வாக 61% வாக்­கு­க­ளு­டன் வென்­றது. நான்கு இடங்­களை எதிர்த்தரப்பிடம் பறி­கொ­டுத்­தது. பிறகு 1997 ஜனவரி 2ஆம் தேதி நடந்த பொதுத் தேர்­த­லில் 65% வாக்கு­களு­டன் திரு கோ தலை­மை­யிலான மசெக வெற்றி பெற்­றது.

பிறகு, மசெக, 1980 பொதுத் தேர்­த­லுக்­குப் பிறகு அது­வரை இல்­லாத அள­வுக்கு 2001 நவம்­பர் 3ஆம் தேதி நடந்த பொதுத் தேர்­த­லில், 75.3% வாக்­கு­க­ளு­டன் வெற்றி பெற்­றது. அதுவே திரு கோ தலைமையிலான கடைசி தேர்­த­லாக இருந்­தது.