தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓட்டத்தில் தடம் பதித்து வரும் திடல்தட வீரர் இலக்கை நோக்கிப் பாயும் இளையர்கள்

2 mins read
e017ec0c-1229-4305-b0a6-e0811859d414
-

வியட்னாமின் ஹனோய் நகரில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுக்களில் சிங்கப்பூர் தொடர்ந்து தடம்பதித்து வருகிறது. பல பதக்கங்களை நம் விளையாட்டாளர்கள் வென்று வரும் நிலையில், மேலும் சாதனைகளைப் படைக்க தயாராகியுள்ளனர் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள். தேசத்தைப் பிரதிநிதித்து விளையாடும் நால்வர், இதுவரை பெற்ற வெற்றிகளையும் அவர்கள் தொட நினைக்கும் உச்சங்களையும் கேட்டறிந்தது தமிழ் முரசு.

தேசிய அள­வில் சாதனை புரிந்து வரும் ஓட்­டப்­பந்­தய வீரர் திரூ­பன் தன­ரா­ஜன் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுக்­களில் 400 மீட்­டர் ஓட்­டப்­பந்­த­யப் போட்­டி­யில் இன்று சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­திக்­க­வி­ருக்­கிறார். தனது சொந்த சாதனையை முறி­ய­டிக்க வேண்­டும் என்­பதே இரண்­டாம் முறை­யாக தென்கிழக்கா ­சிய விளை­யாட்­டுக்­களில் கலந்து கொள்­ளும் திரூப­னின் இலக்கு.

இவ்­வாண்­டின் தென்­கி­ழக்­காசிய விளை­யாட்­டு­களை ஆவ­லு­டன் எதிர்­நோக்கி கடு­மை­யாக பயிற்சி செய்து கொண்­டி­ருந்த திரூ­ப­னுக்கு, பிப்­ர­வ­ரி­யில் கால்­வி­ரலி­ல் ஏற்­பட்ட காய­மும் கொவிட்-19 நோய்த்­தொற்­றும் தடை­க­ளாய் விளங்­கின. பல பயிற்­சி­களில் கலந்­து­கொள்ள முடியாத ­போ­தி­லும், திரூ­பன் மனந்­த­ள­ர­வில்லை.

"என் குறிக்­கோள்­களை மாற்­றி ­அ­மைக்க வேண்­டி­ய­நிலை இருந்­தா­லும், நான் அதி­க­பட்ச அள­வில் உழைத்­துள்­ளேன். நாட்­டைப் பிரதி­நி­திக்­கும் வாய்ப்பு அனை­வ­ருக்­கும் கிட்­டு­வ­தில்லை. பெரு­ம­ளவு நன்றிக் கடன்­பட்­டுள்­ளேன்," என்­றார் டீக்கின் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வணிகம் (விளை­யாட்டு நிர்­வா­கம்) பயி­லும் 22 வயது திரூ­பன்.

வரும் புதன்­கி­ழ­மை­யன்று நடை­பெ­ற­வி­ருக்­கும் 4x400 மீட்­டர் தொடர் ஓட்­டப் பந்­த­யத்­தி­லும் பங்கு­பெ­று­வார் திரூபன். அவ­ரும், அவரது மூன்று சக தேசிய ஓட்­டப்­பந்­தய வீரர்­களும், 48 ஆண்டு ­க­ளாக இன்­னும் முறி­ய­டிக்­கப்­ப­டாத தேசிய சாத­னையை முறி­ய­டிக்க குறிக்­கோள் கொண்­டுள்­ள­னர்.

ஏறக்­கு­றைய ஒன்­ப­தாண்டு கால­மாக ஓட்­டப் பயிற்­சி­யில் மும்­மு­ர­மாக ஈடுபட்டு வரும் திரூ­பன், பள்ளிக்­கா­லத்­தி­லிருந்தே ஓட்டத்தில் பெயர் பதித்து வருபவர்.

2017ஆம் ஆண்­டில் பதினெட்டு வய­துக்­குக் கீழ் உள்­ளோ­ருக்­கான ஆண்­க­ளுக்கான உலகப் போட்டியில் 400 மீட்­டர் ஓட்­டப்­பந்­த­யத்­தில் 47.91 வினா­டி­களில் ஓடி முடித்து தேசிய சாதனையை முறி­ய­டித்த திரூ­பன், சிங்­கப்­பூர் வர­லாற்­றில் இடம்­பி­டித்­தார். திட்ட மிடாமல் திடல்தட விளையாட்டுகளில் ஈடு­பட நேர்ந்த அவர், தனது பய­ணம் தன்னை இத்­தனை தூரம் உந்­தும் என்று எதிர்­பார்க்­க­வில்லை

"என்னை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு தட­க­ளம் பெரி­தும் உத­வி­யுள்­ளது. எனது வளர்ச்­சி­யில் மேலும் கவ­னம் செலுத்த அண்மைய காலத்­தில் முற்­பட்­டுள்­ளேன்," என்றார் திரூ­பன்.

இச்­சா­த­னை­க­ளின் பின்னணி யில் திரூப­னின் பல தியா­கங்­கள் உள்­ளன. தொடக்­கக்கல்­லூரி முதல் ஆண்­டில் திடல்தடப் போட்­டி­களில் அதி­கம் ஈடு­பட்­டி­ருந்ததால் 'ஏ' நிலை தேர்வு­களில் சரி­வர கவ­னம் செலுத்த முடி­ய­வில்லை. அதனால், தேசிய சேவையின்போது மீண்­டும் 'ஏ' நிலைத் தேர்வை எழு­தினார்.

"ஒலிம்­பிக் போட்டியில் சிங்கப்பூரை பிரதி­நிதித்து ஓட வேண் டும் என்பதே எனது இலட்­சி­யம். அது நிறை­வேறும் வரை நான் ஓய­மாட்­டேன்," என்றார் திரூபன்.