முழு உழைப்பே முதலீடு

முழு உழைப்பே முதலீடு

2 mins read
7a9dfba9-9e94-441a-8b29-d2d515e722f3
-

சிங்­கப்­பூரை இரண்­டாம் முறை­யாக தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் பிர­தி­நி­தித்த ஜீவனீஷ் சௌந்­த­ர­ராஜா வியட்­னா­மின் ஹனோய் நக­ரில் நேற்று நடை­பெற்ற போட்­டி­யில் 1,500 மீட்­டர் ஓட்­டப் பந்­த­யத்­தில் ஏழா­வது இடத்­தைப் பிடித்­தார்.

கடந்த 2015ஆம் ஆண்­டில் நடை­பெற்ற தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் 5,000 மீட்­டர் நெட்டோட பந்­த­யத்­தில் பங்­கு­பெற்­றி­ருந்த ஜீவனீஷ், எட்­டா­வது இடத்­தைப் பிடித்­தி­ருந்­தார்.

சோலார்ஜி நிறு­வ­னத்­தில் சூரிய ஆற்­றல் பொறி­யி­ய­லா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் ஜீவ­னீஷை பொது­மக்­க­ளி­டத்­தில் பிர­ப­லப்­ப­டுத்­தி­யது, ஜன­வரி­யில் நடை­பெற்ற போக்­காரி சுவெட் பந்­த­யம். முன்­னர் இருந்த சாத­னை­களை முறி­ய­டிக்­கும் வண்­ணம், 2,400 மீட்­டர் ஓட்­டப்­பந்­த­யத்தை 6 நிமி­டம் 52.97 விநா­டி­களில் ஓடி வெற்­றி­கண்­டார் அவர்.

வாரத்­துக்­குக் குறைந்­த­பட்­சம் நான்கு முறை பயிற்சி மேற்­கொள்­ளும் ஜீவ­னீஷ், 2019ஆம் ஆண்­டி­லி­ருந்து தனது முழு­நே­ரப் பணி­யை­யும் சமா­ளித்து வரு­கின்­றார்.

முக்­கி­ய­மாக, 1,500 மீட்­டர் பந்­த­யத்­துக்­கான பயிற்­சி­யை­யும் கடந்த இரு ஆண்­டு­களாக மேற்­கொண்டு வரு­கின்­றார்.

இடை­யில் பணி குறுக்­கீ­டு­க­ளி­னால் பல மாதங்­க­ளுக்­குப் பயிற்சி இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்­தா­லும், முழு உழைப்­பினை முத­லீடு செய்­தி­ருப்­ப­தில் நம்­பிக்கை தெரி­வித்­தார் அவர்.

"நாட்­டைப் பிர­தி­நி­திப்­ப­தில் நானும் என் குடும்­பத்­தா­ரும் அலாதி மகிழ்ச்சி அடைந்­தோம். சிங்­கப்­பூர் தட­கள வர­லாற்­றில் இடம் பிடிப்­பதும், நாட்­டுக்­குப் பெருமை சேர்ப்­ப­தும் எனது நீண்­ட­நாள் கன­வு­கள்," என்­றார் 28 வயது ஜீவனீஷ்.

சிறு வய­தில், நண்­பர்­கள் கணினி விளை­யாட்­டு­களில் மூழ்கி­யி­ருந்த வேளை­யில் ஜீவனீஷ் வெளி­ப்புறத்தில் இயற்­கை­யில் விளை­யா­டு­வ­தையே விரும்­பி­னார்.

காலப்­போக்­கில், ஓடு­வது தனது திறன் என உணர்ந்த அவர், பள்ளி வாழ்க்கை முழு­வ­தி­லும் தொடர்ந்து திடல்தடப் போட்டிகளில் ஈடுபட்டார்.

"விளை­யாட்­டுப் பய­ணத்தை மேற்­கொள்ள ஆசைப்­பட்­ட­போது எனது குடும்­பத்­தி­னர் அதற்­கான சுதந்­தி­ரத்தை அளித்­த­னர்.

இத­னால், எனது கன­வு­களை நன­வாக்­கக்­கூ­டிய வாய்ப்­பு­களை என்­னால் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடிந்­தது," என்­றார் ஜீவ­னீஷ்.

பொறி­யி­ய­லா­ள­ரா­க தான் சந்­தித்த சிக்­கல்­க­ளின்­மூ­லம், அவற்றை நேருக்கு நேர் சமா­ளிக்­கும் மன உறு­தி­யைப் பெற்ற ஜீவ­னீஷ் அந்த மனப்­பான்­மை­யைத் தனது திடல்தடப் பய­ணத்­தில் காட்­டு­கி­றார்.

அதேபோல, ஓட்­டப் பந்­தய வீர­ரா­க ­தான் வளர்த்­துக்­கொண்ட ஒழுக்­க­நெ­றி­யைத் தனது பணி­யிடத் தில் கடைப்­பி­டித்து வரு­கின்­றார்.