பயணச் சிரமம் குறைக்க பஃப்ளோ ரோட்டில் புதிய வசதி

பயணச் சிரமம் குறைக்க பஃப்ளோ ரோட்டில் புதிய வசதி

2 mins read
8c204fc5-f147-4f8b-b4f5-746f95cbaeed
பயணிகளை ஏற்றி, இறக்கிவிட கூரையுடன் கூடிய வாகன நிறுத்தம். -

தஞ்­சோங் பகார் நகர மன்­றம் வழி­ந­டத்­திய அக்­கம்­பக்க குடி­

யி­ருப்பு வட்­டார புதுப்­பிப்­புத் திட்­டத்­தின்­கீழ் லிட்­டில் இந்­தி­யா­வில் அண்­மை­யில் நிகழ்ந்த பல மாற்­றங்­களை கவ­னித்­தி­ருப்­போம்.

அதில் ஒன்று, பயணிகள் ஏறி, இறங்குவதற்கான இடம். மேற் கூரையுடன் கூடிய இந்த வாகன நிறுத்தம் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி தேக்கா ஈரச் சந்தை அரு­கில் திறந்து வைக்­கப்­பட்டது.

லிட்­டில் இந்­தி­யா­வுக்கு வந்து செல்லும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் கடை உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் உத­வும் நோக்­கத்­து­டன் இந்த முயற்சி எடுக்­கப்­பட்­டது.

"முன்­பை­விட புதிய வாகன நிறுத்தம் மிக­வும் வச­தி­யாக இருக்­கிறது." என்­றார் ச.கன­கேஸ்­வரி, 55.

மழை­யி­லி­ருந்தும் வெயிலி­லி­ருந்­தும் காத்துக்கொள்ள இந்தப் புதிய வசதி உத­வி­யாக இருக்­கிறது என்­றும் அவர் கூறினார்.

"இதற்கு முன்பு, காய்­க­றி­களை வாங்­கிக்­கொண்டு கனமான பை களுடன் ரேஸ் கோர்ஸ் சாலை வரை நடக்­க­வேண்­டி­யி­ருக்­கும்.

"அது மிக­வும் அசௌ­க­ரி­ய­மா­க­வும் களைப்­பா­க­வும் இருக்­கும்," என்று கூறிய சு.மோகனா, 50, இந்த இடத்­தில் வாகன நிறுத்தம் அமைத்­தது சிறந்த யோசனை என்று பாராட்­டி­னார்.

ச.சீத்தாலெட்சுமி, 60, என்ப வர் கூறுகையில், "தைப்பொங்­கல், தீபா­வளி போன்ற பண்­டிகை தினங்­களில் சாலை நெரி­ச­லில் இருந்து விடுபட இது உத­வி­யாக இருக்­கும் என்­றார்.

கார், டாக்சி, வேன் போன்ற வாகனங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கும் வகையில் இந்தப் புதிய வாகன நிறுத்தத்திற்கான கட்­டு­மானப் பணி­கள் நடைபெற்றபோது இந்தப் பகுதியில் நடமாடுவது சிரமாக இருந்தது என்றும் இருப்பி னும் தற்போது வாடிக்கை யா ளர்களுக்கு இது மிகவும் வசதி யாக அமைந்துள்ளது என்றும் கூறினார் கடை ஒன்றின் உரிமை யாளரான சு. மாரிமுத்து.

"முன்பு பணி­யாட்­கள் ரேஸ் கோர்ஸ் சாலை டாக்சி நிறுத்­தம் வரை சென்று வாடிக்கையாளர்­க­ளுக்­குப் பொருள்க­ளைக் கொடுக்­க­வேண்­டி இருந்தது.

"ஆனால், புதிய வாகன நிறுத்தம் எங்களுக்குப் பக்கத்தி லேயே அமைந்­தி­ருப்­பது மிக­வும் சௌரி­ய­மாக இருக்­கிறது," என்­றும் அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

அத்துடன், இது கடைத்தொ­கு­தி­க­ளுக்கு இடை­யில் அமைந்­தி­ருப்­பது வாடிக்கையாளர்­க­ளுக்­கும் வணி­கங்களுக்­கும் சிறப்­பாக இருக்­கிறது என்­றார், இன்னொரு கடை உரிமையாளரான மு. வேலு­மணி, 53.

துணிக்­க­டை­கள், ஈரச்சந்தை, மளிகைக்கடை­கள் என்று எல்லாப் பொருள்க­ளை­யும் ஒரே இடத்­தில் வாங்­கிக்­கொண்டு செல்­வ­தற்கு வாகன நிறுத்தத்தின் இட அமைப்பு அருமை என்று அவர் புகழ்ந்­தார்.

மேலும், இந்தப் புதிய வசதியால் தம்முடைய வியா­பா­ரம் பெரு­கி­யி­ருக்­கிறது என்று மு.கௌத­மன், 54, கூறினார்.

குறிப்­பாக, முதி­யோர் கடைக்கு வந்துசெல்­வ­தற்கு இந்த வாகன நிறுத்தம் உத­வி­யாக இருக்­கிறது என்ற அவர், இன்­னும் பெரும்­

பா­லான வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கு இவ்­வி­டத்­தைப் பற்­றிய விழிப்­பு­ணர்வு இல்லை என்ற கருத்தையும் பதிவுசெய்தார்.

ஆக, தேக்கா ஈரச் சந்தை அரு­கில் புதிதாக அமைந்­தி­ருக்­கும் வாகன நிறுத்தம் அங்கு வந்து செல்லும் மக்கள் மத்­தி­யில் அமோக வர­வேற்­பைப் பெற்­றி­ருக்­கிறது என லாம்.

செய்தி: அருணா கந்தசாமி

'தேக்கா கதைகள்' பகுதியில் இடம்பெற்ற படங்கள்:

திமத்தி டேவிட்