தம் பிள்ளைகளே தமக்கு உலகம்

தம் பிள்ளைகளே தமக்கு உலகம்

2 mins read
1f646848-79e2-43a6-bda2-15d593ade079
-

பொறுப்­பு­க­ளின்றி தன்­னு­டைய இள­மைப் பரு­வத்­தைக் கழித்த தேவா குணா, 26, இன்று இரு இளம் பிள்­ளை­க­ளுக்­குத் தன் வாழ்க்­கையை அர்ப்­ப­ணித்­த­வாறு வாழ்­கி­றார். தமது 20வது வய­தில் திரு­ம­ண­மாகி, மூன்று ஆண்­டு­களி­லேயே மண­வி­லக்கு பெற­வும் நேரிட்­டது. நான்கு வயது லுக்கெஷ் தெவின், ஆறு வயது ஜெசெந்­திகா ரியா இரு­வ­ரை­யும் தாமே பரா­ம­ரித்து வரு­கி­றார்.

மண­வி­லக்கு நேர்ந்­த­போ­தும் ஒரு தந்­தை­யாக தம் பிள்­ளை­களை வளர்த்து ஆளாக்க வேண்­டும் என்ற கடப்­பாடு கொண்­டி­ருந்­தார் தேவா.

ஈட்­டும் வரு­மா­னம் குறைவு என்­றா­லும் குறை ஏது­மில்­லா­மல் பிள்­ளை­க­ளைப் பார்த்­துக்­கொள்ள வேண்­டும் என்ற மன­வ­லி­மை­யுடன் வாழ்ந்து வரு­கி­றார் இவர்.

தொலை­பேசிவழி விற்­ப­னை செய்யும் நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரி­யும் தேவா, தின­மும் தம் இரு பிள்­ளை­க­ளை­யும் பாலர் பள்­ளிக்கு அழைத்­துச் சென்­று­விட்டு வேலைக்­குச் செல்­வதை வாடிக்­கை­யா­கக் கொண்­டுள்­ளார்.

ஜூரோங் வட்­டா­ரத்­தில் வசிக்­கும் இவர், காலாங் வட்­டா­ரத்­தில் வேலைக்­குச் சென்­ற­பின் பிள்­ளை­களின் பள்ளி முடிந்த பிறகு மீண்­டும் அவர்­களை அழைத்து வீடு திரும்­பி­வி­டு­வார். அன்­றா­டம் வீட்­டுச் சமை­யல் ஆரோக்­கி­ய­மாக இருக்க வேண்­டும் என்­ப­தா­லும் வெளி­யு­ண­வால் செலவு அதி­கம் என்­ப­தா­லும் முடிந்­த­ள­வுக்­குத் தாமே தின­மும் பிள்­ளை­க­ளுக்­குச் சமைப்­ப­தா­கக் கூறி­னார் தேவா.

மாதம் ஒரு முறை பிள்­ளை­கள் தங்­க­ளின் தாயா­ரைச் சந்­திக்­கும் ஏற்­பாட்­டை­யும் இவர் செய்­துள்­ளார்.

மண­வி­லக்கு நடந்த கால­கட்­டத்­தில் இரு பிள்­ளை­களும் பாதிக்­கப்­பட்­ட­னர் என்­றும் மன­நல ஆலோச­க­ரைப் பார்க்க வேண்­டிய கட்­டத்­துக்­குத் தள்­ளப்­பட்­ட­னர் என்­றும் தேவா நினை­வு­கூர்ந்­தார்.

பள்ளி ஆசி­ரி­யர்­களும் தம் பிள்ளை­க­ளுக்கு ஆத­ரவு தந்து வரு­வ­தாக அவர் கூறி­னார்.

"என் பிள்­ளை­க­ளுக்கு என்­னால் ஆன அனைத்­தை­யும் செய்து தர முடி­யும். ஆனால் அதே நேரம் என் உணர்­வு­க­ளைச் சமா­ளிக்க எனக்கு ஆலோ­சனை தேவைப்­பட்­டது. சமூ­கத்­தின் ஆத­ர­வும் கொஞ்­சம் கிடைத்­துள்­ளது. என் பிள்­ளை­களின் பாலர் பள்­ளிக்கு நிச்­ச­யம் நான் நன்­றிக்­க­டன் பட்­டுள்­ளேன்," என்­றார் தேவா.

தங்­க­ளின் எதிர்­கா­லம் எப்­படி இருக்­கும் என்று அடிக்­கடி தன்­னுள் கேட்­டுக்­கொள்­வ­தாக தேவா குறிப்­பிட்­டார். பொரு­ளா­தார ரீதி­யில் சில சிக்­கல்­களை எதிர்­நோக்­கி­னா­லும் ஓர் இளம் தந்­தை­யா­க­வும் ஒற்­றைப் பெற்­றோ­ரா­க­வும் இரு குழந்­தை­க­ளுக்கு நல்ல எதிர்­கா­லம் அமைத்­துக் கொடுப்­ப­தில் குறி­யாய் இருப்­ப­தாக உறு­தி­யு­டன் கூறி­னார் தேவா.