கடந்த 45 ஆண்டுகளாக முடி திருத்துநராக பணி புரிந்து வரும் திரு சுப்பராமன் ஆ. ராமைய்யா, 81, நவீன வடிவமைப்புடன் கடைகள் வந்துள்ளபோதிலும், காலங்காலமாக செயல்பட்டுவரும் பாரம்பரிய கடைகளை நாடுவோரும் உள்ளனர் என்று கூறினார்.
பெரும்பாலான வாடிக்கை யாளர்கள் நவீனபாணி கடை களுக்குச் சென்றாலும், இன்றும் பலர் பழைய கடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர் என கூறினார், தற்போது 'கோல்டன் கிங்ஸ்' முடி திருத்தகத்தில் பணிபுரிந்து வரும் திரு சுப்ப ராமன்.
இது போன்ற கடைகளில் வழங்கப்படும் முடி திருத்தச் சேவைகள் திருப்தி அளிப்பதாலும், தாம் எளிய சிகை அலங்கார பாணியை விரும்பு வதாலும் தொடர்ந்து இத் தகைய கடைகளுக்குச் செல்வதாகக் கூறினார் திரு குப்புசாமி கண்ணன், 53.
புக்கிட் தீமா, ஹாலந்து வில்லேஜ் வட்டாரங்களில் முடிதிருத்தகங்களை நடத்திய திரு சுப்பராமன், கடந்த 15 ஆண்டு களாக தேக்காவில் உள்ள வெவ்வேறு கடைகளில் பணிபுரிந்து வருகிறார். இளையர்கள் அதிகம் இத்துறையில் பணியாற்ற முன்வர வேண்டும் என்பது இவரது விருப்பம்.
"நீண்ட நேரம் வேலை செய்யும் தொழில் என்பதால் இளையர்கள் இத்துறையில் சேரத் தயங்குகின்றனர். ஆனால், இத்துறையில் நல்ல வருமானம் ஈட்டும் வாய்ப்புள்ளதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்," என்றார் திரு சுப்பராமன்.
அன்றும் இன்றும் லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள முடி திருத்த நிலையங்களில் மாறாமல் இருக்கிறது சவரக்கத்தியின் பயன்பாடு. இந்த முடி திருத்தகங்களில் சிகை அலங்காரத்தோடு மீசை, தாடி அலங்காரமும் செய்யப்பட்டு வருகிறது.
பலர் மின்சார சவரத்துக்கு மாறிவிட்டபோதும், முடி திருத்தும் சேவையை வழங்கும் இந்தியர்கள் அன்று முதல் இன்று வரை சவரக்கத்தியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

