தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பக்கவாத நோயாளிகளின் பக்கபலமாக தாதியர் இருவர்

2 mins read

குடும்ப சோகத்­தைத் தாங்கி தாதி­மைக் கல்­வி­யைத் தொடர்ந்த ஒரு­வர். தந்­தை­யின் விருப்­பத்­தால் தாதி­மைக் கல்வி கற்று சிறந்து விளங்­கும் இன்­னொ­ரு­வர். இப்­படி வெவ்­வேறு திசை­யி­லி­ருந்து படிப்பை முடித்து, பணி­யைத் தொடங்­கி­னா­லும் நோயா­ளி

­க­ளுக்கு அர்ப்­ப­ணிப்புடன் சேவை வழங்­கு­வ­தில் ஒரே திசை­யில் நடை­போ­டு­கி­றார்­கள் இரு­வ­ரும். அவ்­வி­ரு­வ­ரையும் கண்­டு­வந்­தது

தமிழ் முரசு.

தீரா­ஷினி தன­பால்

தீரா­ஷி­னிக்கு மூன்று வயது முதல் ஐந்து வய­து­வரை நோய் எதிர்ப்பு ஆற்­றல் குறை­வாக இருந்­த­தால் மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெற­வேண்­டிய அவ­சி­யம் இருந்­தது. அப்­போது தாதி­யர் ஒவ்­வொரு நாளும் தமது படுக்­கைக்கு அருகே அமர்ந்து அவரை பார்த்­துக்­கொண்ட விதத்தை தீரா­ஷினி இன்­ற­ள­வும் மறக்­க­வில்லை. அதைக் கண்ட பின்­னர், தாமும் எதிர்­கா­லத்­தில் தாதி­யாக உடல்

­ந­லம் குன்­றி­யோரைப் பேண வேண்­டும் என்ற வேட்கை இவ­ருக்­குள் உருவானது.

மருந்­தி­ய­லில் ஆர்­வம் காட்­டும் தீரா­ஷினி தன­பால், 21, தற்­போது அலெக்­சாண்ட்ரா மருத்­து­வ­ம­னை­யில் பகு­தி­நேர தாதி­யாக வேலை செய்­கி­றார். வாகன விபத்­து­களில் அடி­பட்­ட­வர்­க­ளை­யும் பக்­க­வாத நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளை­யும் கவ­னித்­துக்­கொள்­ளும் மருத்­து­வ­ம­னை­யின் மறு­சீ­ர­மைப்­புப் பிரி­வி­னர் நோயா­ளி­க­ளி­டம் எவ்­வாறு பேசிப் பழ­கு­கி­றார்­கள் என்­ப­தைப் பார்த்­துக் கற்­று­கொண்­டார்.

தீரா­ஷி­னி­யின் தாதிமை கல்­விப் பய­ணம் தொழில்­நுட்­பக் கல்விக் கழ­கத்­தில் தொடங்கி, நீ ஆன் பல­துறைத் தொழிற்­கல்

­லூ­ரி­யில் தொடர்ந்­தது.

இரண்­டாம் ஆண்­டி­லேயே, அவ­ருக்கு நெருக்­க­மான மாமா கால­மா­னார். தீரா­ஷி­னி­யின் படிப்­புக்­கும் வாழ்­வுக்­கும் வழி­காட்­டி­யாக திகழ்ந்த அவர் இறந்­த­போது தீராஷினிக்கு உல­கமே இடிந்து விழுந்­தது போலா­யிற்று. ஆனா­லும், தம் மாமா­விற்குப் பெருமை சேர்க்க வேண்­டு­மென அவ­ரு­டைய இறு­திச் சடங்­கின்­போ­து­கூட தேர்­வு­க­ளுக்கு மும்­மு­ர­மாக படித்து அவற்­றில் சிறப்­பாகத் தேர்ச்சிபெற் றார். மன வலிமைமிக்க தீரா­ஷினி பல்­வேறு தொண்­டூ­ழிய முயற்­சி­

க­ளி­லும் இறங்கி சிறு­வர்­கள், முதி­யோர்­ என பல­ருக்­கும் உதவி வந்­துள்­ளார்.

ஷாலினி கணே­சன்

கட்­ட­ட­வி­யல் படிப்பு மீது ஆசை­கொண்­டி­ருந்த ஷாலினி கணே­சன், 25, தம் தந்­தை­யின் விருப்­பத்­தால் தாதிமை படிப்பை மேற்­கொண்­டார். ரத்­தத்­தைக் கண்டு பயந்தாலும், துணிச்சலை மனதில் நிறுத்தி தாதி­மைத் துறை­யில் பணியைத் தொடங்கினார்.

வேலை­யில் சேர்ந்த முதல் வாரத்­தி­லேயே தம்முடன் பணி

­பு­ரிந்த பரா­ம­ரிப்பு உத­வி­யா­ளரை கொவிட்-19 கிருமி தொற்­றி­ய­தால் அலெக்­சாண்ட்ரா மருத்­து­வ­ம­னை­யின் மறு­சீ­ர­மைப்­புப் பிரிவு முடக்­கப்­பட வேண்­டிய அவ­சி­யம் நேர்ந்­தது.

அத­னால், வேலை­யி­டத்­தில் தனி­மை­யில் தவித்­தார் ஷாலினி. தம்­மால் வீட்­டில் இருப்­ப­வர்­களை கொவிட்-19 கிருமி தாக்­கி­வி­டுமோ என்ற பயம் ஒருபக்­க­மி­ருக்க, புதிய வேலை­யில் சிறந்து விளங்க வேண்­டும் என்ற லட்­சி­யம் இவரை ஊக்­கு­வித்­தது. ஷாலி­னி­யின் பரா­ம­ரிப்­பின்­கீழ் இருந்த நோயாளி ஒரு­வ­ரது உட­லின் இடது பக்­கம் வாதம் கார­ண­மாக அைசக்க முடி­யா­மல் இருந்­தது.

ஆனால் வீடு­தி­ரும்­பிப் போகும்­போது அவர் நடக்க ஆரம்­பித்­த­தைப் பார்த்த ஷாலி­னிக்கு ஏற்­பட்ட ஆனந்­தம் எல்­லை­யில்­லா­தது. தம்­மு­டைய கவ­னிப்­பா­லும் பரா­ம­ரிப்­பா­லும் குண­ம­டைந்த அவ­ரைப் போன்ற நோயா­ளி­க­ளைப் பார்க்­கும்­போது தாதி­யாக ஆனது தாம் பெற்ற பெரும்பேறு என்று இவர் நம்­பு­கி­றார்.