தோ பாயோவில் இவ்வாண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கண்காணிப்பு கேமரா கம்பிவடங்களைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த 65 வயது சிங்கப்பூரர் ஏணியிலிருந்து கீேழ விழுந்தார். மின்சாரப் பணியாளரான அவர் பின்னர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
அடுத்த இருவாரங்களில் அந்த வேலை தொடர்பான இதர ஐந்து ஊழியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் இருவர் கனரக வாகனங்கள் ஏறியதில் மாண்டனர். இதர இருவர் உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்து இறந்தனர்.
அப்போதிலிருந்து, கவலை
தரக்கூடிய வேலையிட மரணங்களையும் வேலையிடத்தில் ஏற்படும் கடுமையாகக் காயமடையும் சம்பவங்களையும் தடுக்கும் முயற்சிகள் வேகமெடுத்தன. தேசிய நிகழ்ச்சிநிரலிலும் அவை இடம்பெற்றன.
ஜனவரி தொடங்கி மே 9ஆம் தேதி வரை வேலையிடங்களில் 20 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரதமர் லீ சியன் லூங் அது
குறித்து எச்சரித்தார்.
வேலையிடப் பாதுகாப்பு தரநிலை தவறியதாக அவர் அப்போது குறிப்பிட்டார்.
மேலும், இம்மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்திலும் வேலையிட மரணம் தொடர்பாகக் குரல்கள் எழுப்பப்பட்டன.
இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டன. மனிதவள அமைச்சு தண்டனைகளையும் வேலையிடப் பாதுகாப்பு தொடர்பான சோதனை
களையும் அதிகரித்தது. இன்னும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக அமைச்சு உறுதி அளித்தது. இருந்தாலும், மரணங்கள் அடுத்தடுத்த மாதங்களில் கூடிக்கொண்டே போகின்றன.
இம்மாதத் தொடக்கத்தில் ஆகக் கடைசி மரணம் நிகழ்ந்தது. கிராஞ்சியில் உள்ள தனியார் போக்கு
வரத்து நிலையத்தில் பேருந்து ஒன்றுக்கும் தூண் ஒன்றுக்கும் இடையில் சிக்கிய இழுவை வண்டி ஓட்டுநர் ஒருவர் மரணமுற்றார்.
இது இந்த ஆண்டின் 32வது வேலையிட மரணம். இந்த ஆண்டில் இன்னும் நான்கு மாதங்கள் எஞ்சியுள்ளன. 2020ஆம் ஆண்டு முழுமைக்கும் பதிவான 30 வேலையிட மரணங்களேடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு அதிகம் என்பதால் அதுகுறித்த கவலை எழுந்துள்ளது.
வேலையிட மரண எண்ணிக்கை அதிகரிப்புக்கு கொவிட்-19 தொடர்பான இடையூறுகளும் காரணம் என பாதுகாப்பு தொடர்பான பணிகளில் பல்லாண்டு அனுபவம் பெற்ற நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

