மாணவர் வளர்ச்சியின் தேவைக்கேற்ப ஆசிரியரிடம் மாற்றம் வேண்டும்

மாணவர் வளர்ச்சியின் தேவைக்கேற்ப ஆசிரியரிடம் மாற்றம் வேண்டும்

2 mins read
c404a9a6-ffd0-4251-a7e5-40dc2bce7cce
விருதுபெற்ற மில்லேனிய கல்வி நிலைய ஆசிரியர் ஹேமலதா ராசராசன், 53. -

மாண­வர் சமூ­கத்தை மதிப்­பெண் நோக்­கிய பய­ணத்­தி­லி­ருந்து மீட்டு மொழி ஆர்­வத்தை இயல்­பா­கத் தூண்­டச் செய்­வது ஓர் ஆசி­ரி­ய­ரின் கட­மை­யெனக் கருதி 10 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக தமி­ழா­சி­ரி­ய­ராக பணி­பு­ரிந்து வரு­கி­றார் திருமதி ஹேம­லதா ராச­ரா­சன், 53.

இன்­றைய தக­வல் தொழில்­நுட்ப சூழ­லில் மாண­வர்­க­ளின் தேவை­க­ளுக்­கும் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கும் தகுந்­தாற்­போல் ஆசி­ரி­யர்­கள் மாறிக்­கொள்­வது அவ­சியம் என்கிறார் இவர்.

"இன்­றைய மாண­வர்­கள் மின்­னி­லக்­க­மய (டிஜிட்­டல்) மாண­வர்­கள். அவர்­க­ளுக்­குப் பிடித்­தாற்­போல் இயன்ற அளவு பாடங்­களை தொழில்­நுட்­பங்­க­ளு­டன் இணைத்து நடத்­து­வேன். மாண­வர்­க­ளுக்­காக கல்வி அமைச்­சின் பல்­வேறு செய­லி­களும் இணை­யத்­தில் நூற்­றுக்­க­ணக்­கான செய­லி­களும் உள்­ளன. இவற்­றை­யெல்­லாம் நான் முத­லில் கற்­றுத் தேர்ந்­த­தால் மட்­டுமே இன்­றைய நவீன மாண­வர்­க­ளு­டன் என்­னால் இணைய முடி­கிறது," என்று கூறி­னார் தொடக்கக் கல்லூரி/ புகுமுகக் கல்வி நிலையப் பிரிவில் விருதுபெற்ற திரு­மதி ஹேம­லதா.

இதனை வலி­யு­றுத்­தும் வித­மாக தக­வல்­தொ­டர்­புத் தொழில்­நுட்ப தமிழ் விழா­வில் (ICT Tamil Feast 2021) கலந்­து­கொண்ட இவர், தொழில்­நுட்­பத்­தின்­வழி் கற்­றல், கற்­பித்­தலை ஒருங்­கி­ணைத்­தல் பற்­றி கட்டுரை படைத்துள்ளார். மேலும், 2018ஆம் ஆண்டு நடை­பெற்ற 12வது உல­கத் தமி­ழா­சி­ரி­யர் மாநாட்­டில் பங்­கேற்று, சிறு­கதை, கற்­றல் கற்­பித்­த­லில் தக­வல் தொழில்­நுட்ப பயன்­பாடு (Padlet ICT tool) குறித்­துப் பகிர்ந்­து­கொண்­டுள்­ளார்.

கற்­றல், கற்­பித்­தல் வழி­மு­றை­கள் சூழ­லுக்­கேற்ப மாறிக்­கொண்டே வரு­கின்­றன. நேரம் கிடைக்­கும்­போ­தெல்­லாம் மாண­வர்­களை அவர்­க­ளுக்­குப் பிடித்­த­வாறு இன்­னும் வேறு எப்­ப­டி­யெல்­லாம் கையா­ள­லாம் என்று இவர் சக ஆசி­ரி­யர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சிப்­பார். இதன் மூலம் தானும் கற்று, பிற ஆசி­ரி­ய­ருக்­கும் கற்­றுக்­கொ­டுக்­கும் வாய்ப்பு கிடைப்­ப­தாக இவர் கூறி­னார். இதனை வலி­யு­றுத்­தும் வித­மாக கல்வி அமைச்­சின் இரு­வ­ழித்­தொ­டர்­புத்தளத்­தின் (MOE_iMTL portal) மூலம் கடந்த 2018-19, 2019-20 ஆண்­டு­களில் கற்­றல், கற்­பித்­தல் பகிர்­வு­களை தேசிய அள­வில் சக தொடக்­கக் கல்­லூரி ஆசி­ரி­யர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொண்­டுள்­ளார்.

தன்­னு­டைய 35வது வய­தில் கண­வர் அளித்த ஊக்­கத்­தால் அன்­றைய 'சிம்' பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பகு­தி­நே­ர­மாக தமிழ்­மொழி பட்­டக்­கல்வி படித்­துக்­கொண்­டி­ருந்த காலத்­தி­லேயே சிறந்த மாண­வர்­க­ளுக்­கான வெள்­ளிப் பதக்­கத்தை திரு­மதி ஹேம­லதா பெற்­றார்.

திரு­ம­ணத்­திற்­குப் பின் இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த இவர், தமது இரு பிள்­ளை­க­ளுக்­கும் வீட்­டில் பாடம் சொல்­லிக் கொடுத்­த­தன் மூலமே சிங்­கப்­பூ­ரின் கற்­றல், கற்­பித்­தல் அணு­கு­மு­றையை கற்­றுக்­கொண்­ட­தா­கக் கூறி­னார். மாண­வர்­க­ளின் தன்­னம்­பிக்­கையை உடைக்­கும் எந்த ஒரு சொல்­லை­யும் சொல்­லி­விடக் கூடாது என்­ப­தில்

கூடு­தல் கவ­ன­மாக இருக்­கும் இவர், படிப்பு மு­டிந்து மாண­வர்­கள் விடை­பெ­றும்­போது எழுதிக்­கொ­டுக்­கும் பிரி­யா­வி­டைக் கடி­தங்­களே தான் பொக்­கி­ஷ­மாகப் பாதுகாக்கும் விரு­து­கள் என்று கூறி­னார்.