தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவு விரயத்தை சிங்கப்பூர் தாங்காது அளந்து சமைப்பதும், பகிர்ந்து உண்பதும்

3 mins read
00c2eede-c9ac-491c-a05c-848b0ef545f8
முறையாகத் திட்டமிட்டால் உணவு குப்பைக்குப் போவதைத் தவிர்க்கலாம். -

ஒவ்­வோர் ஆண்­டும் தம் குடும்­பத்­தா­ருக்கு செட்­டி­நாடு கோழி, புதினா கோழி, மீன் கட்­லெட், இறைச்சி தால்ச்சா என வித­வி­த­மாக தீபா­வளி விருந்து சமைக்­கிறார் 55 வயது வளர்­மதி சோமு.

பிரி­யாணி தயா­ரிக்­கும்­போது, 15 பேருக்கு சமைக்க வேண்­டு­மா­னால் 12 பேர் உண்­ணும் அள­வான மூன்­றரை குவளை அரி­சியை பயன்­ப­டுத்­தி­னாலே போதும் என்­றார் அவர்.

விருந்­தா­ளி­கள் பிரி­யாணி சோற்­றை­விட மற்ற உணவு வகை­களை விரும்பி சாப்­பி­டு­வதை கவ­னித்­துள்­ள­தால் இவ்­வாறு அரி­சி­யின் அள­வைக் குறைத்து சமைப்­பது அவ­ருக்கு நல்ல உத்­தி­யாகப் படு­கின்­றது.

"பல உணவு வகை­க­ளைச் சமைத்­தா­லும், உணவு மீத­மி­ருந்­தால் அதனை என் சகோ­த­ரர்­களுக்­கும் அவர்­க­ளின் பிள்­ளை­களுக்­கும் கட்­டிக் கொடுத்­து­விடு­வேன்," என்­றார் அவர்.

பெலி­லி­யோஸ் லேனில் அவர்­ தம் கண­வ­ரின் அலு­வ­ல­கம் இருப்­ப­தால், அரு­கி­லுள்ள முடி­திருத்தகத்­தில் பணி­பு­ரி­யும் மலே­சிய இந்­தி­யர்­க­ளுக்கு தமது வீட்­டில் சமைத்த உணவைக் கொடுப்­ப­தை­யும் வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார் திரு­வாட்டி வளர்­மதி.

தீபா­வ­ளிக்கு முன்­ன­தா­கவே, தம் விருந்­தா­ளி­க­ளி­டம் அவர்­களுக்­குப் பிடித்­த­மான உணவு வகை­க­ளைத் தெரிந்­து­கொள்­வார் 36 வயது அர்ச்­சனா ரெங்­க­சாமி. இதன்­மூ­லம் விருந்­தி­னர்­க­ளுக்கு விருப்­ப­மில்­லாத உணவை சமைப்­பதைத் தவிர்ப்­ப­தோடு உணவு விர­யம் ஆவ­தை­யும் தவிர்க்­கி­றார் அவர்.

"பிள்­ளை­கள், பெரி­ய­வர்­க­ளை­விட நிச்­ச­யம் குறை­வா­கவே சாப்­பி­டு­வார்­கள். சின்­ன­தாக சப்­பாத்தி­ செய்­யும்­போது பிள்ளைகள் சாப்­பிட்டு முடிக்­கி­றார்­கள். சப்­பாத்தி மாவும் வீணா­காது," என்­றார் அவர்.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக இம்­மா­தி­ரி­யான சிறு வழி­மு­றை­களை பின்­பற்­று­வ­தால் அர்ச்­ச­னா­வின் இல்­லத்­தில் தீபா­வ­ளி­யன்று உணவு விர­யம் ஆவது அரிது.

"கொஞ்­சம்­தானே வீசு­கி­றோம் என்று ஒவ்­வொ­ரும் நினைக்­க­லாம். ஆனால், இப்­படி எல்­லா­ரும் வீசு­வதைச் சேர்க்­கும்­போது அது ஒரு பெரிய மலை­யாக இருக்­கும்," என்­றார் அர்ச்­சனா.

'கம்­போங் காக்­கிஸ்' தொண்­டூ­ழிய சமூ­கத்­தில் கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளாக தொண்­டூ­ழி­யம் புரிந்­து­வ­ரும் அர்ச்­சனா, தனி­யாக வாழும் முதி­யோ­ருக்கு வாரட்­தோறும் காய்­கறி, பழங்­கள், சமைப்­பதற்­கான பொருள்­களை புக்­கிட் பாஞ்­சாங் சந்­தை­யி­லி­ருந்து சேக­ரித்­துக் கொடுப்­பார்.

உண்­ணக்­கூ­டிய நிலை­யில் இருக்­கும் இப்பொ­ருள்­களை வீணாக்­கு­வ­தற்­குப் பதி­லாக தேவைப்­ப­டு­வோ­ருக்­குத் தரு­வது அவர்­க­ளுக்கு பேரு­த­வி­யாக அமை­கின்­றது என இவர் நம்­பு­கி­றார்.

சமைப்பது வீணாகாமல் இருக்க இவர்கள் கூறும் வழிமுறைகள்:

 அளந்து சமைப்­ப­தும் எப்­படி, எந்த வழி­யில் உணவு வீணா­கிறது என்­பதை ஆராய்­வ­தும் வீணா­வதைத் தவிர்க்க உத­வும்.

 கடை­யில் பல­ருக்கு உணவு வாங்­கும்­போது, பொது­வாக சற்று கூடு­த­லா­கவே கொடுப்­பார்­கள். விருந்துக்கு 20 பேர் வரு­வ­தாக இருந்­தால், 16 - 17 பேருக்கு வாங்கி­னால் போது­மா­னது.

 வாங்குவதனால் குறிப்­பிட்ட உண­வு வகை­களையும் சமைப்ப தானால் தேவையான உணவுப் பொருட்களையும் வாங்­க­லாம்.

 உண­வைப் பரி­மா­றும்­போது, சாப்­பி­டு­ப­வர் போதும் அல்­லது வேண்­டாம் என்­றால் வற்­பு­றுத்­தக் கூடாது. அல்­லது, விருந்­தா­ளி­களே தாமே பரிமாறிக்கொள்ளும் வகையில் ஏற்­பாட்டைச் செய்­ய­லாம். இத­னால் உணவு வீணாவ வதைத் தவிர்க்­க­லாம். மீத­மி­ருக்­கும் உணவு வகை­களை வீட்டுக்கு வரு­வோ­ருக்கு கட்­டிக்­கொடுக்­க­லாம்.

 குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மறுநாள் சாப்பிடக்கூடிய உணவுகளாக வாங்குவது மற்றொரு வழி.

 தீபா­வளி கொண்­டாட்ட உணர்வை மற்ற இனத்­த­வ­ரு­டன் பகிர்­வ­தற்கு இந்­திய உணவை விரும்­பிச் சாப்­பி­டும் அண்­டை­ வீட்டுக்­கா­ரர்­க­ளுக்­கும் உண­வளிக்­க­லாம். இது அண்­டை­வீட்­டா­ரி­டையே நல்­லு­றவை மேலும் வளர்க்­கும். அதே­போல் இந்­திய உணவை உண்­ணும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளு­ட­னும் பகிரலாம்.

 மீந்­து­விட்ட அரிசி, எண்ணெய், மாவு, சீனி, காய்கறி போன்ற மூலப்பொருட்­களை ஃபுட்பேங்க். ஃபுட் ரெஸ்­கியூ எஸ்ஜி போன்ற அமைப்­பு­க­ளுக்கு கொடுக்­க­லாம். இத்­த­கைய அமைப்­பு­க­ளுக்கு சமைத்த உண­வைக் கொடுக்க முடி­யாது. மேலும், விரை­வில் வீணா­கி­வி­டும் உண­வை­யும் கொடுக்கமுடி­யாது.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின் புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூரின் மொத்தக் கழிவில் 12% உணவுக் கழிவாக உள்ளது. உணவு விரயம் 2020ஆம் ஆண்டில் 665,000 டன். 2021ஆம் ஆண்டில் இது 817,000 டன்னாக அதிகரித்தது. 2021ஆம் ஆண்டில் கொவிட்-19 கிருமித் தொற்று குறைந்து, பொருளியல் மேம்பாட்டு நடவடிக்கைகள் அதிகரித்தது இதற்கு ஒரு காரணம்.

உணவு விரயம் கூடிக்கொண்டே போகும்போது, நிலப் பற்றாக்குறை உள்ள சிங்கப்பூர், அதனைக் கையாள பெரும் சவால்களை எதிர்நோக்கு கிறது. முக்கியமாக கழிவை அகற்றுவதற்கும் அக்கழிவை மறுபயனீடு செய்வதற்கும் இடம் தேவை. சிறிய தீவான சிங்கப்பூரில் இது மிகப்பெரிய பிரச்சினை.

உணவு விரயத்தினால், உணவுப் பொருள்களை தயாரிப்பதற்கும் விநியோகம் செய்வதற்கும் உபயோகிக்கப்படும் வளங்கள் வீணாகின்றன. இது, கரிம வெளியீட்டை அதிகரிப்பதுடன் உலக வெப்பமயமாதலுக்கும் காரணமாகிறது. வளங்களைப் பாதுகாக்க, உணவு விரயத்தை ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும்.