தனியார் நிறுவனங்களிலும், அனைத்துலகப் பள்ளிகளில் ஆசிரியராகவும் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் 36 வயது திரிஷ்னு கோர் (படம்).
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்தபோது தெருவுக்குத் தெரு தேநீர்க் கடைகள் இருப்பதைக் கண்ட இவர், வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளைச் சேர்ந்தோரைத் தேநீர் ஒன்றிணைக்கிறது என்று உணர்ந்தார்.
சிங்கப்பூர் திரும்பிய பிறகு ஒருநாள் விலங்குகள் துன்பப்படுவதைப்போல கொடுங்கனவு கண்டார். இரண்டுமுறை இதே கனவைக் காணவே, அசைவ உணவு உண்பதை நிறுத்துவதற்கான அழைப்பாக அதைக் கருதினார். இதன் விளைவாக திரிஷ்னு நனிசைவ உணவுமுறையைப் பின்பற்றத் தொடங்கினார்.
தேநீரையும் நனிசைவ உணவுமுறையையும் இணைக்கும் முனைப்பில், ஆசிரியப் பணியிலிருந்து விலகி வீட்டிலிருந்து செயல்படும் 'த சாய் பாபா' எனும் தேநீர்க் கடையைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவருகிறார்.
சோயா, பாதாம், ஓட்ஸ் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பால்களையும் இந்தியப் பாரம்பரிய மூலிகைகளையும் தேநீர் தயாரிப்பில் பயன்படுத்துகிறார். வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப இனிப்பின் அளவைத் தேர்வுசெய்யலாம். மசாலாப் பால், மஞ்சள் பால் ஆகியவையும் இங்கு உண்டு.
தேநீர் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை இந்தியா, இலங்கை, குவாத்தமாலா, இந்தோனீசியா ஆகியவற்றிலிருந்து வரவழைக்கிறார். பால் வகைகளை சிங்கப்பூரில் வாங்குகிறார். கடை திறந்து, இந்திய நனிசைவத் தேநீரை மேற்கத்திய நாடுகளுக்கு விரிவுபடுத்துவது இவரது கனவு,

