மருந்தாகும் மஞ்சளின் மகிமை

மருந்தாகும் மஞ்சளின் மகிமை

2 mins read

இந்­திய உண­வில் முக்­கிய இடம்­பெ­றும் மஞ்­ச­ளின் மருத்­துவ குணங்­கள் குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் பணி­யில் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக ஈடு­பட்டு வரு­கி­றார், டேஷ் கணே­சன், 30.

கொவிட்-19 நோய்த்­தொற்­றுக் காலத்­திற்கு முன்­பே இரைப்­பைக் குட­ல­ழற்சி நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார் இவர். தாயா­ரின் ஆலோ­ச­னைப் படி, தேனை மஞ்­சள் தூளில் கலந்து அன்­றா­டம் குடித்து வந்­தார். மருத்­து­வர்­க­ளால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட மாத்­தி­ரை­களை உட்­கொண்­டு­வ­ந்தா­லும், அவர் உட­லில் முன்­னேற்­றம் தென்­ப­ட­வில்லை.

சில காலம் மாத்­தி­ரை­களை நிறுத்­தி­விட்டு, வெறும் மஞ்­சள் தூளை­யும் தேனை­யும் தண்­ணீ­ரில் கலந்­து குடித்­து­போது உடல்­நி­லை­யில் நல்ல மாற்­றம் ஏற்­பட்­டது.

கணக்­கா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் இவர், அவ்­வப்­போது பணிநிமித்­தம் அமெ­ரிக்கா செல்­வ­துண்டு. அங்கு லாஸ் ஏஞ்­சலீஸ் நக­ரி­ல் ஒரு கஃபேயில் 'கோல்­டன் லாட்டே' எனும் மஞ்­சள் காப்பி விற்­கப்­ப­டு­வ­தைக் கண்ட இவர் வியப்­புற்­றார்.

2020ல் வீட்­டி­லி­ருந்தே வேலை பார்த்­துக்­கொண்­டி­ருந்த கணே­சன், 'டுர்­மந்த்ரா' எனும் வீட்டு அடிப்­படை­யி­லான வர்த்தகத்­தைத் தொடங்­கி­னார்.

மஞ்­சள், தேன் ஆகியவற்றையும் இஞ்சி, மஞ்­சள், பட்டை, மிளகு ஆகி­யவை கலந்­து தயா­ரிக்­கப்­பட்ட தூளையும் மஞ்­சள் சவர்க்­கா­ரம், மஞ்­சள் உதட்­டுச் சாயம் போன்றவற்றையும் இதன்மூலம் விற்பனை செய்கிறார்.

"வீட்­டில் மஞ்­சள் தூளும் தேனும் இருந்­தா­லும், அன்றாடப் பரபரப்பில், அவற்றை உட்­கொள்ள நேரம் கிடைப்­ப­தில்லை. சிறிய போத்தல்­களில் விற்பனையாகும் இவற்றை எளிதாக எடுத்து, தண்­ணீ­ரிலோ பாலிலோ கலந்­து ­கு­டிக்­கலாம்," என்­கி­றார் கணே­சன்.

தன்­னு­டைய பொருள்­களில் கலக்­கப்­படும் மஞ்­சள் தூய்­மை­யா­னது என்­கிறார் இவர். இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­படும் மூலப்­பொ­ருள்­கள் இயற்கைமுறை­யில் விளைந்­தவை.

"குமட்­டல், வயிற்­றுக் கோளா­று போன்ற பிரச்­சினை­யில் இருந்த நானும் என் கண­வ­ரும் இந்த மஞ்­சள், தேனை தண்­ணீ­ரில் கலந்து அருந்­தி­ய பிறகு உடல்நிலை சீரானது," என்­கி­றார் வாடிக்­கை­யா­ளர் துர்கா மனோ­க­ரன்.