2022 நவம்பர் மாதம் இந்தோனீசியாவின் பாலித்தீவில் ஜி-20 உச்சநிலை மாநாடு நடைபெற்றது. உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு உலகத் தலைவர்கள் முதன் முறையாக இம்மாநாட்டில் ஒன்றுகூடினர்.
மாநாட்டிற்கு முன்னதாக சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இருதரப்பு சந்திப்பு நடத்தினர். மூன்றாண்டுகளில் முதல் முறையாக இரு நாடுகளுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது. வர்த்தகப் பூசல், மனித உரிமை விவகாரங்கள், தைவான் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.

