மலேசியாவின் பாத்தாங் காலி ஜெண்டிங் மலையில் உள்ள ஃபாதர்ஸ் ஆர்கானிக் பண்ணையில் 2022 டிசம்பர் 16ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. மலேசியாவில் 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ஆக மோசமான மூன்றாவது நிலச்சரிவு இது. கோலாலம்பூரில் உள்ள தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட 31 பேர் இந்த நிலச்சரிவில் உயிரிழந்தனர். இவர்களில் ஆறு பேர் ஆசிரியர்கள், மூவர் பள்ளிக் குழந்தைகள். உயிர் பிழைத்தவர்களில் சிலர், நிலத்துக்கடியில் ஐந்து முதல் 10 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.
டிசம்பர் 30ஆம் இந்தப் பள்ளியில் நடத்தப்பட்ட நினைவஞ்சலிப் பிரார்த்தனையில் ஏராளமான பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். உறவுகளை இழந்த பலரும் கண்ணீர்மல்கக் காணப்பட்டனர்.
மலேசியாவில் 1993ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி கோலாலம்பூரின் அருகேயுள்ள புக்கிட் அந்தாராபங்சாவில் இருந்த தனியார் கூட்டுரிமை வீடுகள் சரிந்து விழுந்த சம்பவமே ஆக மோசமான நிலச்சரிவாகும். அப்போது அந்தச் சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர்.

